முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உரிப்பவனுக்கு மட்டுமல்ல உழைப்பவனுக்கும் கண்ணீர் வரும் வெங்காயம்






 வெங்காயம்

நறுக்க

கண்ணீர் வரவைத்த நிலை மாறி 

விலையைக் கேட்டாலே

கண்ணீர்  வருகிறது! தற்போது 

புது மாப்பிள்ளை

சீதனமாய் கேட்கிறான்

ஒரு மூட்டை

மணப்பெண் தந்தையிடம் 


"வெங்காயம்"

எனத் திட்டாதீர்கள்

அதன் மதிப்பு உயர்ந்துவிட்டது!

உணவகங்களில் உண்பவர்கள்

உணவினில்

தேடிக் கொண்டிருக்கிறார்கள்

காணவில்லை.

வெங்காயம்

ஏழையின் இல்லத்தில்

இருக்கப் பிடிக்கவில்லையாம்

அதனால் விவசாயிகள் பயிரிடப் பயப்படும் நிலை....

வெங்காயம் கிலோ 100 ரூபாய் விலை கொடுத்து வாங்கும் அனைவரும் அறிய சில தகவல் நமது நண்பர் கூறியது.

எத்தனை பேர் வந்தாலும் நபர் ஒருவருக்கு ஒரு ஏக்கர் நிலம் தரப்படும். அதில் நீங்கள் வெங்காயம் சாகுபடி செய்து பாருங்கள் வேதனை உங்களுக்குப் புரியும் விவசாயிகள் உற்பத்தி  செய்யும் பொருட்கள் அனைத்தும் இடைதரகர்கள் சொல்லுவது தான் விலை. கிலோ 100 ரூபாய் க்கு விற்கும் வெங்காயம்  அப்படியே விவசாயிகள்  கையில் கிடைக்கும் என நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை?  தோட்டத்தில் ஒரு கிலோ  50 ரூபாய் க்கு தான் விற்பனை  இதுவும் அனைத்து நேரத்திலும் இல்லை ஒரு சில நாட்களில் தான் 

மீதி நாட்கள்  நிலை மோசம்.

இந்த நிலையில்  இரண்டு தினம் முன் ஒரு தொலைக்காட்சி விவாதம் அதில்  வெங்காயம் கிலோ 100 ரூபாய் க்கு விற்றால் தான் உழவனின் கஸ்டம் என்னவென்று தெரியும் என்று, உழவன் கொஞ்சம் மகிழ்ச்சி அடையட்டும் என்று சொன்னார்கள்,

ஆனால்  பேசியவர்கள் விவசாயம் அறியாதவர்கள் அந்தப் பணம் அப்படியே விவசாயிகள்  சட்டைப் பையில் வந்து சேருமென்று நினைத்து விடாதீர்கள்,  அது தான் இல்லை?

ஒரு ஏக்கர் நிலத்தில் சின்னவெங்காயம் பயிர் செய்ய ஆகும் செலவாக

உழவிற்கு ரூ 10000, குப்பை க்கு ரூ10000, அடியுரம்  ரூ 5000, விதை வெங்காயம் இன்றைய விலை ஒரு கிலோ ரூ 110 .இதற்கு  ரூ 660000.நடவு கூலி 25 நபர் 25×300= ரூ 7500 களைக்கெல்லி ரூ 3000, இடையில் களை எடுக்க 20 நபர். 

இதற்கு 20×300= ரூ 6000, உரம் செலவு ரூ 10000, கடைசி அறுவடைச் செலவு வெங்காயம் பிடுங்க  20 நபர் இதற்கு 20×300= ரூ6000, வெங்காயத்தில் இருந்து தால் எடுப்பதற்கு 25 நபர்கள் தேவை 40 kg க்கு ரூ 150. வீதம் இதற்கு 40×200= ரூ 8000, வெங்காயத்தை பற்றையில் கொண்டு சேர்க்கும் நபர் ஆண்கள் ஆறு நபர் 600×6= ரூ 3600.

இவற்றுடன் வேலை முடியாது இரவு ஒரு மணி அளவில் மழை வரும் உடனே ஓட வேண்டும். அங்கு சென்று தார் பாய் போட்டு முட வேண்டும். அடுத்த நாள் வியாபாரிகள் வந்து உங்கள் வெங்காயம் கலர் இல்லை, உருட்டு இல்லை, பெரிய அளவில் இல்லை ஈரப்பதம் என்று சொல்லி குறைந்த  விலைக்குக் கேட்க ,

அதற்கும் சரி என விற்பனை செய்து விட்டு, அடுத்த நாள் லாரி வருகிறது என்று வியாபாரி போன் செய்வார், நங்கள் எடை நிலையம் சென்று  லாரி எம்டி எடையை போட்டு விட்டு வருவோம்.

வெங்காயம் மூட்டை பிடிக்க வந்த ஆட்கள் எங்களுக்கு தேனீர் வடை, போண்டா வேண்டும் என்று சொல்லி விடுவார்கள் .20 நபர்கள் இதற்கு 400, செலவு இதைத் தொடர்ந்து  மீண்டும் லாரி லோடு ஏற்றிய உடன் மீண்டும் எடை நிலையம் சென்று பார்த்து விட்டு எடை சிட்டு வாங்கி கொண்டு அடுத்த நாள் வியாபாரி யிடம் பணத்தை வாங்கச் சென்றால், 

ஒரு டன் எடைக்கு 30 கிலோ வை பிடித்துக்கொண்டு,  உதாரணமாக 8000 கிலோ என்று வைத்தது கொண்டல்= 8000 டன் கணக்கில் 8×30= 240 கிலோ  வை அப்படியே அட்டையை போட்டு விட்டு 7760 × 20 =ரூ155200 லட்சம் ரூபாய் இந்த பணத்தை கொடுக்க இரண்டு மாதங்கள் தவணை,  

அதற்கு மேல் இவை அனைத்தும் இந்த விலைக்கு விற்பனை நடந்தால் மட்டுமே இவ்வளவு கிடைக்கும். இதில் அவர்கள்  உழைப்பு, தண்ணீர் நிலம் குத்தகை   இதில் சேர்க்க வில்லை,

மொத்தச் செலவு ரூ 135500   இதில் மிச்சம் ரூ 19.700 மட்டுமே,  இதில்  உழைப்பு 60 நாட்கள் ஒரு ஆண் ஒரு பெண்  கூலி 60×500=30000, 300×60= 18000 இரண்டும் சேர்த்து 48'000, மிச்சமாகும் பணம் 19 "700 மட்டுமே, இதில் அவர்கள் கூலி  யே 28300 ரூபாய், உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது இது பழமொழி..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...