முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உரிப்பவனுக்கு மட்டுமல்ல உழைப்பவனுக்கும் கண்ணீர் வரும் வெங்காயம்






 வெங்காயம்

நறுக்க

கண்ணீர் வரவைத்த நிலை மாறி 

விலையைக் கேட்டாலே

கண்ணீர்  வருகிறது! தற்போது 

புது மாப்பிள்ளை

சீதனமாய் கேட்கிறான்

ஒரு மூட்டை

மணப்பெண் தந்தையிடம் 


"வெங்காயம்"

எனத் திட்டாதீர்கள்

அதன் மதிப்பு உயர்ந்துவிட்டது!

உணவகங்களில் உண்பவர்கள்

உணவினில்

தேடிக் கொண்டிருக்கிறார்கள்

காணவில்லை.

வெங்காயம்

ஏழையின் இல்லத்தில்

இருக்கப் பிடிக்கவில்லையாம்

அதனால் விவசாயிகள் பயிரிடப் பயப்படும் நிலை....

வெங்காயம் கிலோ 100 ரூபாய் விலை கொடுத்து வாங்கும் அனைவரும் அறிய சில தகவல் நமது நண்பர் கூறியது.

எத்தனை பேர் வந்தாலும் நபர் ஒருவருக்கு ஒரு ஏக்கர் நிலம் தரப்படும். அதில் நீங்கள் வெங்காயம் சாகுபடி செய்து பாருங்கள் வேதனை உங்களுக்குப் புரியும் விவசாயிகள் உற்பத்தி  செய்யும் பொருட்கள் அனைத்தும் இடைதரகர்கள் சொல்லுவது தான் விலை. கிலோ 100 ரூபாய் க்கு விற்கும் வெங்காயம்  அப்படியே விவசாயிகள்  கையில் கிடைக்கும் என நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை?  தோட்டத்தில் ஒரு கிலோ  50 ரூபாய் க்கு தான் விற்பனை  இதுவும் அனைத்து நேரத்திலும் இல்லை ஒரு சில நாட்களில் தான் 

மீதி நாட்கள்  நிலை மோசம்.

இந்த நிலையில்  இரண்டு தினம் முன் ஒரு தொலைக்காட்சி விவாதம் அதில்  வெங்காயம் கிலோ 100 ரூபாய் க்கு விற்றால் தான் உழவனின் கஸ்டம் என்னவென்று தெரியும் என்று, உழவன் கொஞ்சம் மகிழ்ச்சி அடையட்டும் என்று சொன்னார்கள்,

ஆனால்  பேசியவர்கள் விவசாயம் அறியாதவர்கள் அந்தப் பணம் அப்படியே விவசாயிகள்  சட்டைப் பையில் வந்து சேருமென்று நினைத்து விடாதீர்கள்,  அது தான் இல்லை?

ஒரு ஏக்கர் நிலத்தில் சின்னவெங்காயம் பயிர் செய்ய ஆகும் செலவாக

உழவிற்கு ரூ 10000, குப்பை க்கு ரூ10000, அடியுரம்  ரூ 5000, விதை வெங்காயம் இன்றைய விலை ஒரு கிலோ ரூ 110 .இதற்கு  ரூ 660000.நடவு கூலி 25 நபர் 25×300= ரூ 7500 களைக்கெல்லி ரூ 3000, இடையில் களை எடுக்க 20 நபர். 

இதற்கு 20×300= ரூ 6000, உரம் செலவு ரூ 10000, கடைசி அறுவடைச் செலவு வெங்காயம் பிடுங்க  20 நபர் இதற்கு 20×300= ரூ6000, வெங்காயத்தில் இருந்து தால் எடுப்பதற்கு 25 நபர்கள் தேவை 40 kg க்கு ரூ 150. வீதம் இதற்கு 40×200= ரூ 8000, வெங்காயத்தை பற்றையில் கொண்டு சேர்க்கும் நபர் ஆண்கள் ஆறு நபர் 600×6= ரூ 3600.

இவற்றுடன் வேலை முடியாது இரவு ஒரு மணி அளவில் மழை வரும் உடனே ஓட வேண்டும். அங்கு சென்று தார் பாய் போட்டு முட வேண்டும். அடுத்த நாள் வியாபாரிகள் வந்து உங்கள் வெங்காயம் கலர் இல்லை, உருட்டு இல்லை, பெரிய அளவில் இல்லை ஈரப்பதம் என்று சொல்லி குறைந்த  விலைக்குக் கேட்க ,

அதற்கும் சரி என விற்பனை செய்து விட்டு, அடுத்த நாள் லாரி வருகிறது என்று வியாபாரி போன் செய்வார், நங்கள் எடை நிலையம் சென்று  லாரி எம்டி எடையை போட்டு விட்டு வருவோம்.

வெங்காயம் மூட்டை பிடிக்க வந்த ஆட்கள் எங்களுக்கு தேனீர் வடை, போண்டா வேண்டும் என்று சொல்லி விடுவார்கள் .20 நபர்கள் இதற்கு 400, செலவு இதைத் தொடர்ந்து  மீண்டும் லாரி லோடு ஏற்றிய உடன் மீண்டும் எடை நிலையம் சென்று பார்த்து விட்டு எடை சிட்டு வாங்கி கொண்டு அடுத்த நாள் வியாபாரி யிடம் பணத்தை வாங்கச் சென்றால், 

ஒரு டன் எடைக்கு 30 கிலோ வை பிடித்துக்கொண்டு,  உதாரணமாக 8000 கிலோ என்று வைத்தது கொண்டல்= 8000 டன் கணக்கில் 8×30= 240 கிலோ  வை அப்படியே அட்டையை போட்டு விட்டு 7760 × 20 =ரூ155200 லட்சம் ரூபாய் இந்த பணத்தை கொடுக்க இரண்டு மாதங்கள் தவணை,  

அதற்கு மேல் இவை அனைத்தும் இந்த விலைக்கு விற்பனை நடந்தால் மட்டுமே இவ்வளவு கிடைக்கும். இதில் அவர்கள்  உழைப்பு, தண்ணீர் நிலம் குத்தகை   இதில் சேர்க்க வில்லை,

மொத்தச் செலவு ரூ 135500   இதில் மிச்சம் ரூ 19.700 மட்டுமே,  இதில்  உழைப்பு 60 நாட்கள் ஒரு ஆண் ஒரு பெண்  கூலி 60×500=30000, 300×60= 18000 இரண்டும் சேர்த்து 48'000, மிச்சமாகும் பணம் 19 "700 மட்டுமே, இதில் அவர்கள் கூலி  யே 28300 ரூபாய், உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது இது பழமொழி..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த