முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டா தர முடியாது: இந்து சமய அறநிலையத்துறை






கோவில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டா தர முடியாது: இந்து சமய அறநிலையத்துறை.தனது நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்கள், கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனை பட்டா வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்பேரில், வருவாய்த்துறை கள அலுவலர்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு மற்றும் ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில்கள் நிலங்கள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டதன்பேரில், ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்கள் அனைத்தும் வரன்முறை செய்யப்பட்டு அதற்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டதுஆனால், தற்போது வரை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு செல்லியம்மன் குடியிருப்பு பொது நலச்சங்க செயலாளர் ராமு என்பவர் கடிதம் எழுதியதற்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதில், கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனை பட்டா வழங்கிட வருவாய்த்துறை சார்பில் கடந்த 2019 ல் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இந்த அரசாணை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் பேரில் இடைக்கால தடையாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும், அரசால் அறிவிக்கப்பட்ட வீட்டு மனை பட்டா திட்டம் தொடர்பாக இவ்வலுவலகத்தில் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

திருக்கோயிலுக்கு சொந்தமான மனை, கட்டிடம், கடைகளுக்கான நியாயவிலை வாடகை நிர்ணயமானது அறநிலையத்துறை சட்டம் பிரிவு 34-Aன் படி நியாயவிலை வாடகை நிர்ணயக்குழு அமைத்து சந்தை மதிப்பு அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்திட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2012 பிப்ரவரி 12ம் தேதி உத்தரவிப்பட்டுள்ளது. மேலும், மனுதாரர் கோருவது போல் பல மடங்கு வாடகை உயர்த்தப்படவில்லை. கோயில் மனைகளில் குடியிருப்போருக்கும், கடை வைத்திருப்போருக்கும் உள்ள பிரச்னைகளை பேசி தீர்வு காண அரசு, அறநிலையத்துறை குடியிருப்போர் பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு கமிட்டி அமைப்பது அரசின் கொள்கை முடிவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களிலும், அரசு புறம்போக்கு நிலங்களிலும் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு இலவச பட்டா வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்டு மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

ஐகோர்ட்டில் வழக்கு

இந்த அரசாணையை எதிர்த்து சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருக் கும் ஏழைகளின் நலன் கருதி பட்டா வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்டு 30 ஆம் தேதி தமிழக வருவாய் துறை செயலாளர் அரசாணை வெளியிட்டு உள்ளார். அரசு புறம்போக்கு நிலத்தை பொறுத்தவரை எந்த ஒரு ஆட்சேபனையும் எனக்கு இல்லை.

அதேநேரம் அந்த அரசாணையில் 4-வது பத்தியில் கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கும் இதுபோல் இலவச பட்டா வழங்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. இவ்வாறு கோவில் நிலத்தை ஏழைகளுக்கு வழங்க தமிழக வருவாய் துறைக்கு அதிகாரம் இல்லை. ஏனென்றால், கோவில் சொத்துகளை பராமரிக்கும் அதிகாரம் இந்து சமய அறநிலையத்துறைக்கு மட்டுமே உள்ளது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது, இந்த அரசாணை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக் கும் விதமாக உள்ளது என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளடர் வி.ஜெயபிரகாஷ் நாராயணன் வாதாடுகையில், ‘ஏழைகளுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அரசாணையை அரசு பிறப்பித்து இருப்பதாகவும், ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், கோவில் நிலத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த பட்டா வழங்கப்படும் என்றும், அனைவருக்கும் பட்டா வழங் கப்படாது என்றும் கூறினார்.

கோவில் சொத்துகள் என்றாலும், அதற்குரிய தொகையை கொடுத்துத்தான் வருவாய் துறை நிலத்தை வாங்கி ஏழைகளுக்கு வழங்கும்” என்றும் அவர் தனது வாதத்தின் போது தெரிவித்தார்.

நீதிபதிகள் உத்தரவு

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த பிரதான வழக்கின் விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

அதேநேரம், இந்த அரசாணைக்கு தடை கேட்ட இடைக் கால மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

அந்த இடைக்கால மனு மீதான உத்தரவை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர்  வழங்கினார்கள்.

அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறி இருப்பதாவது:-

அரசாணைக்கு தடை

கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை எல்லாம் வரன்முறை செய்தாலோ அல்லது அந்த ஆக்கிரமிப்புகளை எல்லாம் புனிதப்படுத்தினாலோ அது கண்டிப்பாக கோவில் சொத்துகளை எல்லாம் சுத்தமாக இல்லாமல் ஆக்கிவிடும். கோவிலுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் அரசின் இந்த செயல், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்துக்கு எதிரானது.

எனவே, கோவில் நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு தடை விதிக்க முகாந்திரம் உள்ளது. அதனால், இந்த அரசாணைக்கு தடை விதிக்கிறோம்.

நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

கோவில் சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தாமலும், அந்த சொத்தை பழைய நிலைக்கு கொண்டு வராமலும் இருந்த அதிகாரிகள் மீது இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை ஏதாவது எடுக்கப்பட்டதா? என்பது குறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

2014 ஆம் ஆண்டு, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் திருக்கோயில்களின் அசையாச் சொத்துக்களின் விவரங்கள் இத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.இந்த இணையதளத்தில், தூத்துக்குடி மாவட்டத் திருக்கோயில்களின் அசையா சொத்து விவரத் தகவலும் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பின்னரே இணையதளத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் சொத்து விவரங்கள் சேர்க்கப்பட்டன. தேனி, நாமக்கல் போன்ற மாவட்டங்களின் சொத்து விவரங்கள் இருப்பினும் அவற்றை தொழில்நுட்பக்கோளாறு காரணமாகப் பார்க்க இயலாது.

யு.டி.ஆர் திட்ட செயலாக்கத்தின் போது, இந்து சமய அறநிலையத் துறைக்குக் கீழுள்ள இந்து சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள் தனிநபர்களுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டதாக குற்றம் சாற்றப்பட்டு பின்னர் அந்த நிலங்களை மீட்க மதுரை, கோவை நகரங்களைத் தலைமையாகக் கொண்டு இரு மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கோயில் நிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து செயல்படுகின்றது.

கொடைக்கானலைச் சார்ந்த வி.என்.ஏ.எஸ்.சந்திரன் எனும் பக்தர் 2003 மார்ச்சில் தனது ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக சொத்தை பழனி முருகன் கோயிலுக்குச் சேருமாறு உயில் எழுதி பதிவு செய்து அதன் பிரதியை அறநிலைய துறை ஆணையருக்கு அனுப்பியும் அந்த சொத்துகள் இதுவரை பழனி முருகன் கோயில் கணக்கில் சேர்க்கப்படவில்லை. வால்பாறை, மூணாறு ஆகிய இடங்களில் உள்ள தேயிலை தொழிற்சாலைகள், வி.என்.ஏ.எஸ் காலணி நிறுவன 90 சதவீத பங்குகள் உட்பட பல சொத்துகள் இதில் அடங்கும். நாகர்கோயில் பார்வதிபுரம் கே.பி.சாலையில் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு விற்கத் திட்டமிடப்பட்டிருந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 10 சென்ட் நிலம் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் தலைமையில் மீட்கப்பட்டு ’கோயில் நிலம்’ என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு குடிமனையும் பட்டாவும் வழங்குவதற்கு பட்ஜெட் கூட்டத் தொடரில் சிறப்பு அரசாணை வெளியிடும். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு 30 ஆகஸ்ட் 2019 அன்று அரசாணை 318 வெளியிடப்பட்டது. அதன் சாராம்சங்கள்

ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு, வரன்முறைப்படுத்தி, தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா இலவசமாக வழங்குவது

நீர்நிலைகள், கால்வாய்கள், சாலைகள் போன்ற ஆட்சேபகரமான இடங்களில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடத்தை தேர்வு செய்து அவர்களுக்கு பட்டா வழங்குவது

கோவில் நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் அதில் குடியிருக்கும் ஏழை குடும்பங்களின் நலன் கருதி விதிமுறைகளுக்குட்பட்டு, தகுதியான நபர்களுக்குவீட்டுமனைப்பட்டா வழங்கி வரன்முறைப்படுத்த அந்த நிலங்களை உரிய வகையில் கையகப்படுத்தி நிலமதிப்பு நிர்ணயம் செய்வதற்கு அரசாணை (நிலை) எண் 200வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கான முன்மொழிவுடன் மாவட்ட வாரியாக நில உரிமை பெற்றுள்ள கோவில் வாரியாகதொகுக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வாயிலாக அரசுக்கு அனுப்பி, அரசின் ஆணை பெற்று அதன் அடிப்படையில் வரன்முறைப்படுத்தப்பட வேண்டும்.

அரசாணை வெளிவந்து சில நாட்களிலேயே, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கோயில் இடத்திற்கு பட்டா வழங்கும்வகையில் அரசாணை வெளியிட்டது தவறு,உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது; எனவே அரசாணை 318 ஐ ரத்து செய்யவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் . அதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் அரசாணைக்கு 22 நவம்பர் 2019 அன்று தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது .கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்போரிடமிருந்து உரிய தொகை பெற்றுக் கொண்டு தமிழ்நாடு அரசு பட்டா வழங்கும் திட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.மேலும் தமிழக கோவில்களுக்கு சொந்தமான 5 இலட்சம் ஏக்கர் விளைநிலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், குத்தகை பாக்கி 25 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றததில் தெரிவித்துள்ளார்.  உண்மை நிலை ஆய்வு செய்தால் அறநிலையத்துறை சார்பில் இதுவரை  எந்த ஆலயத்தில் ஒருசென்ட் நிலம் வாங்கப்பட்டது ஒன்று கூட இல்லை எல்லாம் பரம்பரை அறங்காவலர்களும் உபயதாரர்களும் பிரார்த்தனை காரணமாக வந்த நிலமும் தானே இதில் நிர்வகிக்க மட்டுமே இந்து சமய அறநிலையத்துறை அதை இந்துசமயத்தின் வளர்ச்சிக்கும் ஆலய வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும் என்பதே பக்தர்கள் கருத்து.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த