பெங்களூருவில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஐசியுவில் இடமின்றி உயிரிழக்க நேரிடுகிறது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருவதால் மயானங்களில் இடமின்றி நாள்கணக்கில் காத்திருக்க நேரிடுகிறது.
கர்நாடகா மாநிலத்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா
வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியுள்ளார். மேலும் பெங்களூருவில் சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா, குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவர், கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் நிலைமை எல்லை மீறி செல்லும் சூழல் ஏற்பட்டுளளது
கர்நாடக மக்களை நான் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். தேவையின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என உருக்கமாகக் கூறியுள்ளார்.
கருத்துகள்