முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு தெய்வீகக் குதிரை மனிதர்களில் முதியோர் மீதும் நோயாளியின் மீதும் நேசம் காட்டுகிறது

குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளிலிருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரைக் குடிக்காது.

பூனை தூங்குமிடத்தில் உங்கள் படுக்கையையிடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.

முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.

பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினைத் தோண்டுங்கள்.

பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். உங்கள் நினைவில் தெளிவு வரும்

அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.   அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.

நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.

இப்படி இயற்கை நமக்கு பல விலங்குகள், பறவைகள், தாவரங்கள் மூலம் நமக்கு பல அறிய செயல்பாடுகளை நடத்துகிறது அந்த வகையில் குதிரைகளும் நம் வாழ்வியல் பன்னாட்டுக் காலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்தவை.

குதிரைகள் பற்றிய அரிய வியப்பூட்டும் தகவல்கள்! 

உலகில் மனிதர்கள் வாழ, பல உயிரினங்களின் உதவியும் தேவைப்படுகிறது. அதில் பசுக்கள் மற்றும் கோழிகள் போல குதிரைகள் மனிதனுக்கு ஒரு வகையில் உதவியாகின்றன.

குதிரைகள் மனிதர்கள் சவாரிக்கும், பொருட்களை சுமந்து செல்லவும் உதவ அரசர்கள் காலத்தில் குதிரைப்படை தனியே இருந்தது. குதிரைகள் மனித வாழ்வில் முக்கியப் பங்காற்றுகின்றன.

குதிரைகள் பெரும்பாலும் நின்று கொண்டு உறங்குகின்றன. நள்ளிரவில் மட்டுமே படுத்துறங்கும். குதிரைகளின் வயது வாரியாக உறக்க நேரம் மாறுபடும். பிறந்து மூன்று மாதங்கள் வரை ஒரு நாளில் பாதி அளவு நேரம் குட்டிக் குதிரைகள் உறக்கத்திலேயே இருக்கின்றன.

வயது வந்த குதிரைகள் படுத்துறங்குவதை விட நின்று கொண்டு 3 மணி நேர அளவில் உறங்கும். வயது வந்த குதிரைகள் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வது அரிது தான். அவை நின்று கொண்டு உறங்குகையில், விழித்த உடன் விரைந்து செயல்படும்.

குதிரைகளின் உணவுப் பாதை வித்தியாசமானது. மனித உடல் அமைப்பைப் போன்றதல்ல. குதிரைகள் வாந்தி எடுக்காது, வாய் வழியாக சுவாசிக்காது.

குதிரையின் வாயில் நாள் ஒன்றுக்கு 40 லிட்டர் அளவு உமிழ்நீர் சுரப்பதால்.  உணவை எளிதில் மென்று விழுங்கும். அத்துடன், உணவை திரும்ப வாயில் கொண்டு வந்து அசைபோட்டு மெல்லவும் இயலும். தாவர வகைகளையே அதிகம் உண்ணும். அதன் பற்களும் தாவரங்களை உண்ணும் அளவே செறிவுடன் இருக்கும். குதிரைகள் ஏப்பம் விடுவதில்லை!

ஆண் குதிரைக்கு 40 பற்களும், பெண் குதிரைக்கு 36 பற்களும் உண்டு. சில குதிரைகளுக்கு ஓநாய் பற்களும் மேல் தாடை கீழ் தாடையை விட அகலமாகவுமிருக்கும்.

குதிரைகளின் வயதை பற்களைக் கொண்டு கணக்கிட முடியும். சில குதிரைகள் பற்களின் வயதை விட அதிக காலம் உயிர் வாழும்.

நல்ல கவனிப்புடன் வளர்க்கப்படும் குதிரைகள் 30 வயது வரை வாழ்கின்றன. மற்ற குதிரைகள் பெருகுடல் பிரச்சனை, நோய் போன்ற காரணங்களால் விரைவில் இறக்கின்றன.

குதிரைகள் பிறந்த சில மணி நேரத்தில் நடக்கத் துவங்கும். அத்துடன், தாயை பார்த்து எளிதில் புற்களை உண்ணவும் அவை கற்றுக் கொள்கின்றன. மந்தையான வாழ்க்கை முறை கொண்டுள்ளது. காடுகளில்  எப்போதும் மந்தையாகச் சுற்றித்திரிவதைப் பார்த்திருக்கலாம்.  வீட்டில் வளர்க்கப்படும் குதிரைகளுக்கு துணையுடன் இருந்தால், அது இன்னும் ஆரோக்கியமாக வாழும். தனியாக இருக்கும் குதிரைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறது.

சாம்பல் நிறமாகவே இருக்கிறது. அது வளரும் போது, வெள்ளை நிறமாக மாறுகிறது. அதில், சில குதிரைகள் பிறக்கையில் கறுப்பு நிறம் போலவும் தோன்றும்.

சராசரியாக குதிரைகளுக்கு நிமிடத்திற்கு 32 முதல் 36 முறை இதயம் துடிக்கிறது. சில குதிரைகளுக்கு 24 முறையும் சில குதிரைகளுக்கு 40 முறையும் துடிக்கிறது. குதிரைகளின் ஓய்வு சுவாச விகிதம் குறைவாக இருக்கும்.

குதிரைகள் மோனோகுலர் பார்வை கொண்டுள்ளது. இதன் மூலம் அவை வேட்டையாடுபவர்களை அடையாளம் காண்கின்றன. அதனால் ஆபத்தை விரைவாக உணர்ந்து தப்பிக்கின்றன.

குதிரைகள் தொலை தூரத்தில் உள்ள பொருட்களை எளிதில் கண்டறியும். ஆனால், ஒரு மீட்டருக்கு குறைவாக உள்ள தூரத்தில் இருக்கும் பொருட்களை அடையாளம் காண்பது மிக சிரமமாக இருக்கும்.

குதிரைகளின் கண்ணில், எளிதில் பாக்டீரியக்களால் பாதிப்பு எற்படுகிறது. அதை முறையாக பராமரிக்கவில்லை என்றால், குதிரைக்கு குருட்டுத் தன்மை ஏற்படும்.

சிறந்த உடல் அமைப்பு கொண்ட உயிரினமான குதிரைகள், இந்தியாவில் பெருமளவில் தற்போது பயன்பாட்டில் இல்லை என்றாலும், அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இன்னும் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது.

நமது நாட்டில் ஆன்மீகத்தில்     கலியுக விநாயகர் எனும் வடிவில் பிள்ளையார் குதிரைமீது வருகிறார். சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு அருளும் பொருட்டு குதிரை சேவகனாய் எழுந்தருளியதை மாணிக்கவாசகர் பெருமான் நரியை பரியாக்கியதை புராணங்கள் கூறுகின்றன. துர்க்கை குதிரைமீது அஷ்வாரூடா எனும் பெயரில் வருகிறார். பைரவர் துர்க்கா பைரவராகக் கோலம் கொண்டும் வரும்போது குதிரைமேல் பவனி வருகிறார். குதிரை வேகமும் விவேகமும் பெற்ற விலங்காக இருப்பதால் வீரர்கள் அதை மிகவும் நேசித்தனர். குதிரையைப் பழக்கி அதன்மீது அமர்ந்து போரிடுவதை சிறப்பாகக் கருதினர். வீரர்களின் முதன்மை பெற்ற விருப்பம் உன்னத குதிரைகளே ஆகும்.சூரியனை வழிபடும் இந்து மதத்தின் ஒரு பிரிவுக்கு அல்லது சமயத்திற்கு சௌமாரம் என்று பொருள். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரியநாராயணர் என்றும் அழைப்பார்கள்.

சிவபெருமானை நோக்கி கடுமையான தவமிருந்த சூரியன், ‘கிரகபதம்’ என்னும் பேறும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான். சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார்.ஒருராசியில் இருந்து அடுத்த ராசிக்கு  செல்லும் பொழுதுதான் மாதப்பிறப்பு நிகழ்கிறது. சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக் கொண்டே அந்தந்த மாதங்களுக்கு பெயர்கள் வழங்கப்படுகின்றன.  சூரியன் ஒருவராக இருந்தாலும் 12 ராசிகளில் சஞ்சரிப்பதன் காரணமாக, பன்னிரு சூரியர்களாக பார்க்கப்படுகிறார். 

சூரியன் பச்சை நிறமுடைய 7 குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். அந்தத் தேருக்கு ஒரே ஒரு சக்கரம் தான் உண்டு. இந்தக் குதிரைகள் பூட்டிய தேரை  ஓட்டுபவரின் பெயர் அருணன். இவருக்கு கால்கள் கிடையாது. இவர் திருமாலின் பெரிய திருவடி என்று போற்றப்படும் கருட பகவானின் அண்ணன் ஆவார்.  சூரியனின் ரதம் பொன் மயமானது. அந்த இரதத்துக்கு 5 ஆரங்களும் 3 நாபிகளுமுண்டு. 3 நாபிகளும் 3 காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்திலுள்ள 6 கட்டைகளும்,  6 ருதுக்களை குறிக்கின்றன.  

சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயணம், தட்சிணாயத்தை குறிக்கிறது சூரியபகவான் தன்னுடைய தேரில் 4 பட்டணங்களை சுற்றி வந்து, காலை,  மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.உலகெங்கும் குதிரைகள் பல நூற்றாண்டுகளாக மனிதக் கலாசாரத்துடன் ஒட்டி பங்கேற்றுள்ளன. குதிரைகள் வேலை வாங்கவும், வண்டி இழுக்கவும், காவல் படையிலும் விளையாட்டுக்களிலும் பந்தயங்களிலும்,  மனமகிழ்விற்காகவும் போர்க்காலப் படையெடுப்புகளிலும் அலங்கார அணிவகுப்புக்களிலும்  பயன்படுத்தப்பட்டே வந்துள்ளன. 2008 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 59,000,000 குதிரைகள் உலகெங்கிலும் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது; இதில் அமெரிக்காவில் 33,500,000, ஆசியாவில் 13,800,000 மற்றும் ஐரோப்பாவில் 6,300,000 இருப்பதாகவும் குறைந்தளவில் ஆபிரிக்கா மற்றும் ஓசியானாவில் உள்ளதாகவும் அதன் அறிக்கைக் கூறுகிறது. ஐக்கிய அமெரிக்காவில் மட்டுமே 9,500,000 குதிரைகள் உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இந்தக் குதிரைகளால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நேரடியாக $39 பில்லியன் செலவு எனவும், மறைமுகச் செலவுகளைக் கணக்கிட்டால் $102 பில்லியன் எனவும் அமெரிக்க குதிரைகள் சங்கம் கருதுகிறது. 2004 ஆம் ஆண்டில் அனிமல் பிளானெட் என்ற தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்த்திய கருத்துக் கணிப்பின்படி 73 நாடுகளைச் சேர்ந்த 50,000 நிகழ்ச்சிப் பார்வையாளர்கள் குதிரையை உலகின் நான்காவது மிகவும் விரும்பப்படும் விலங்காக வாக்களித்துள்ளனர். அதை உண்மை என நிரூபிக்கப்பட்டது இந்தக் காணொளியில் வரும் குதிரை மனிதர்களில் முதியோர் மீதும் நோயாளியின் மீதும் நேசம் காட்டுகிறது














அணைத்து மக்களின் பாராட்டைப் பெற்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த