முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு தெய்வீகக் குதிரை மனிதர்களில் முதியோர் மீதும் நோயாளியின் மீதும் நேசம் காட்டுகிறது

குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளிலிருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரைக் குடிக்காது.

பூனை தூங்குமிடத்தில் உங்கள் படுக்கையையிடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.

முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.

பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினைத் தோண்டுங்கள்.

பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். உங்கள் நினைவில் தெளிவு வரும்

அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.   அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.

நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.

இப்படி இயற்கை நமக்கு பல விலங்குகள், பறவைகள், தாவரங்கள் மூலம் நமக்கு பல அறிய செயல்பாடுகளை நடத்துகிறது அந்த வகையில் குதிரைகளும் நம் வாழ்வியல் பன்னாட்டுக் காலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்தவை.

குதிரைகள் பற்றிய அரிய வியப்பூட்டும் தகவல்கள்! 

உலகில் மனிதர்கள் வாழ, பல உயிரினங்களின் உதவியும் தேவைப்படுகிறது. அதில் பசுக்கள் மற்றும் கோழிகள் போல குதிரைகள் மனிதனுக்கு ஒரு வகையில் உதவியாகின்றன.

குதிரைகள் மனிதர்கள் சவாரிக்கும், பொருட்களை சுமந்து செல்லவும் உதவ அரசர்கள் காலத்தில் குதிரைப்படை தனியே இருந்தது. குதிரைகள் மனித வாழ்வில் முக்கியப் பங்காற்றுகின்றன.

குதிரைகள் பெரும்பாலும் நின்று கொண்டு உறங்குகின்றன. நள்ளிரவில் மட்டுமே படுத்துறங்கும். குதிரைகளின் வயது வாரியாக உறக்க நேரம் மாறுபடும். பிறந்து மூன்று மாதங்கள் வரை ஒரு நாளில் பாதி அளவு நேரம் குட்டிக் குதிரைகள் உறக்கத்திலேயே இருக்கின்றன.

வயது வந்த குதிரைகள் படுத்துறங்குவதை விட நின்று கொண்டு 3 மணி நேர அளவில் உறங்கும். வயது வந்த குதிரைகள் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வது அரிது தான். அவை நின்று கொண்டு உறங்குகையில், விழித்த உடன் விரைந்து செயல்படும்.

குதிரைகளின் உணவுப் பாதை வித்தியாசமானது. மனித உடல் அமைப்பைப் போன்றதல்ல. குதிரைகள் வாந்தி எடுக்காது, வாய் வழியாக சுவாசிக்காது.

குதிரையின் வாயில் நாள் ஒன்றுக்கு 40 லிட்டர் அளவு உமிழ்நீர் சுரப்பதால்.  உணவை எளிதில் மென்று விழுங்கும். அத்துடன், உணவை திரும்ப வாயில் கொண்டு வந்து அசைபோட்டு மெல்லவும் இயலும். தாவர வகைகளையே அதிகம் உண்ணும். அதன் பற்களும் தாவரங்களை உண்ணும் அளவே செறிவுடன் இருக்கும். குதிரைகள் ஏப்பம் விடுவதில்லை!

ஆண் குதிரைக்கு 40 பற்களும், பெண் குதிரைக்கு 36 பற்களும் உண்டு. சில குதிரைகளுக்கு ஓநாய் பற்களும் மேல் தாடை கீழ் தாடையை விட அகலமாகவுமிருக்கும்.

குதிரைகளின் வயதை பற்களைக் கொண்டு கணக்கிட முடியும். சில குதிரைகள் பற்களின் வயதை விட அதிக காலம் உயிர் வாழும்.

நல்ல கவனிப்புடன் வளர்க்கப்படும் குதிரைகள் 30 வயது வரை வாழ்கின்றன. மற்ற குதிரைகள் பெருகுடல் பிரச்சனை, நோய் போன்ற காரணங்களால் விரைவில் இறக்கின்றன.

குதிரைகள் பிறந்த சில மணி நேரத்தில் நடக்கத் துவங்கும். அத்துடன், தாயை பார்த்து எளிதில் புற்களை உண்ணவும் அவை கற்றுக் கொள்கின்றன. மந்தையான வாழ்க்கை முறை கொண்டுள்ளது. காடுகளில்  எப்போதும் மந்தையாகச் சுற்றித்திரிவதைப் பார்த்திருக்கலாம்.  வீட்டில் வளர்க்கப்படும் குதிரைகளுக்கு துணையுடன் இருந்தால், அது இன்னும் ஆரோக்கியமாக வாழும். தனியாக இருக்கும் குதிரைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறது.

சாம்பல் நிறமாகவே இருக்கிறது. அது வளரும் போது, வெள்ளை நிறமாக மாறுகிறது. அதில், சில குதிரைகள் பிறக்கையில் கறுப்பு நிறம் போலவும் தோன்றும்.

சராசரியாக குதிரைகளுக்கு நிமிடத்திற்கு 32 முதல் 36 முறை இதயம் துடிக்கிறது. சில குதிரைகளுக்கு 24 முறையும் சில குதிரைகளுக்கு 40 முறையும் துடிக்கிறது. குதிரைகளின் ஓய்வு சுவாச விகிதம் குறைவாக இருக்கும்.

குதிரைகள் மோனோகுலர் பார்வை கொண்டுள்ளது. இதன் மூலம் அவை வேட்டையாடுபவர்களை அடையாளம் காண்கின்றன. அதனால் ஆபத்தை விரைவாக உணர்ந்து தப்பிக்கின்றன.

குதிரைகள் தொலை தூரத்தில் உள்ள பொருட்களை எளிதில் கண்டறியும். ஆனால், ஒரு மீட்டருக்கு குறைவாக உள்ள தூரத்தில் இருக்கும் பொருட்களை அடையாளம் காண்பது மிக சிரமமாக இருக்கும்.

குதிரைகளின் கண்ணில், எளிதில் பாக்டீரியக்களால் பாதிப்பு எற்படுகிறது. அதை முறையாக பராமரிக்கவில்லை என்றால், குதிரைக்கு குருட்டுத் தன்மை ஏற்படும்.

சிறந்த உடல் அமைப்பு கொண்ட உயிரினமான குதிரைகள், இந்தியாவில் பெருமளவில் தற்போது பயன்பாட்டில் இல்லை என்றாலும், அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இன்னும் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது.

நமது நாட்டில் ஆன்மீகத்தில்     கலியுக விநாயகர் எனும் வடிவில் பிள்ளையார் குதிரைமீது வருகிறார். சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு அருளும் பொருட்டு குதிரை சேவகனாய் எழுந்தருளியதை மாணிக்கவாசகர் பெருமான் நரியை பரியாக்கியதை புராணங்கள் கூறுகின்றன. துர்க்கை குதிரைமீது அஷ்வாரூடா எனும் பெயரில் வருகிறார். பைரவர் துர்க்கா பைரவராகக் கோலம் கொண்டும் வரும்போது குதிரைமேல் பவனி வருகிறார். குதிரை வேகமும் விவேகமும் பெற்ற விலங்காக இருப்பதால் வீரர்கள் அதை மிகவும் நேசித்தனர். குதிரையைப் பழக்கி அதன்மீது அமர்ந்து போரிடுவதை சிறப்பாகக் கருதினர். வீரர்களின் முதன்மை பெற்ற விருப்பம் உன்னத குதிரைகளே ஆகும்.சூரியனை வழிபடும் இந்து மதத்தின் ஒரு பிரிவுக்கு அல்லது சமயத்திற்கு சௌமாரம் என்று பொருள். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரியநாராயணர் என்றும் அழைப்பார்கள்.

சிவபெருமானை நோக்கி கடுமையான தவமிருந்த சூரியன், ‘கிரகபதம்’ என்னும் பேறும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான். சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார்.ஒருராசியில் இருந்து அடுத்த ராசிக்கு  செல்லும் பொழுதுதான் மாதப்பிறப்பு நிகழ்கிறது. சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக் கொண்டே அந்தந்த மாதங்களுக்கு பெயர்கள் வழங்கப்படுகின்றன.  சூரியன் ஒருவராக இருந்தாலும் 12 ராசிகளில் சஞ்சரிப்பதன் காரணமாக, பன்னிரு சூரியர்களாக பார்க்கப்படுகிறார். 

சூரியன் பச்சை நிறமுடைய 7 குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். அந்தத் தேருக்கு ஒரே ஒரு சக்கரம் தான் உண்டு. இந்தக் குதிரைகள் பூட்டிய தேரை  ஓட்டுபவரின் பெயர் அருணன். இவருக்கு கால்கள் கிடையாது. இவர் திருமாலின் பெரிய திருவடி என்று போற்றப்படும் கருட பகவானின் அண்ணன் ஆவார்.  சூரியனின் ரதம் பொன் மயமானது. அந்த இரதத்துக்கு 5 ஆரங்களும் 3 நாபிகளுமுண்டு. 3 நாபிகளும் 3 காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்திலுள்ள 6 கட்டைகளும்,  6 ருதுக்களை குறிக்கின்றன.  

சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயணம், தட்சிணாயத்தை குறிக்கிறது சூரியபகவான் தன்னுடைய தேரில் 4 பட்டணங்களை சுற்றி வந்து, காலை,  மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.உலகெங்கும் குதிரைகள் பல நூற்றாண்டுகளாக மனிதக் கலாசாரத்துடன் ஒட்டி பங்கேற்றுள்ளன. குதிரைகள் வேலை வாங்கவும், வண்டி இழுக்கவும், காவல் படையிலும் விளையாட்டுக்களிலும் பந்தயங்களிலும்,  மனமகிழ்விற்காகவும் போர்க்காலப் படையெடுப்புகளிலும் அலங்கார அணிவகுப்புக்களிலும்  பயன்படுத்தப்பட்டே வந்துள்ளன. 2008 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 59,000,000 குதிரைகள் உலகெங்கிலும் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது; இதில் அமெரிக்காவில் 33,500,000, ஆசியாவில் 13,800,000 மற்றும் ஐரோப்பாவில் 6,300,000 இருப்பதாகவும் குறைந்தளவில் ஆபிரிக்கா மற்றும் ஓசியானாவில் உள்ளதாகவும் அதன் அறிக்கைக் கூறுகிறது. ஐக்கிய அமெரிக்காவில் மட்டுமே 9,500,000 குதிரைகள் உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இந்தக் குதிரைகளால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நேரடியாக $39 பில்லியன் செலவு எனவும், மறைமுகச் செலவுகளைக் கணக்கிட்டால் $102 பில்லியன் எனவும் அமெரிக்க குதிரைகள் சங்கம் கருதுகிறது. 2004 ஆம் ஆண்டில் அனிமல் பிளானெட் என்ற தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்த்திய கருத்துக் கணிப்பின்படி 73 நாடுகளைச் சேர்ந்த 50,000 நிகழ்ச்சிப் பார்வையாளர்கள் குதிரையை உலகின் நான்காவது மிகவும் விரும்பப்படும் விலங்காக வாக்களித்துள்ளனர். அதை உண்மை என நிரூபிக்கப்பட்டது இந்தக் காணொளியில் வரும் குதிரை மனிதர்களில் முதியோர் மீதும் நோயாளியின் மீதும் நேசம் காட்டுகிறது














அணைத்து மக்களின் பாராட்டைப் பெற்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...