முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம





தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை இந்திய தர நிர்ணய அலுவலகம்  கட்டாயமாக்கியுள்ளது. 

இந்திய தர நிர்ணய அலுவலகம் (BIS)நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியது. அதில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற நடைமுறை ஜூன் 16ம் தேதி முதல்  அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து இந்திய தரநிர்ணய அலுவலகத்தின் தலைமை இயக்குனர் திரு பிரமோத் குமார் கூறுகையில், ‘‘ முதல்கட்டமாக  ஹால்மார்க் மதிப்பீடு மையங்கள் உள்ள நாட்டின் 256 மாவட்டங்களில், தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் வரை விற்று முதல் உள்ள நகை வியாபாரிகளுக்கு ஹால்மார்க் கட்டாயம் என்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மத்திய அரசின் வர்த்தக கொள்கைப்படி ஏற்றுமதி மற்றும்  இறக்குமதி செய்யப்படும் நகைகளும், சர்வதேச கண்காட்சிக்கான நகைகள், அரசு அனுமதித்த பி2பி உள்நாட்டு கண்காட்சிகளுக்கான நகைகளும் கட்டாய ஹால்மார்க்கிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

கடிகாரங்கள், பேனாக்கள் மற்றும் சிறப்பு வகை நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்’’ என்றார். 

ஹால்மார்க் முத்திரைக்கு நகை வியாபாரிகள் ஒரு முறை பதிவு செய்யலாம். இதற்கு கட்டணம் இல்லை.  தங்கநகை விற்பனையில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், மொத்த வியாபாரிகள், விநியோகஸ்தர்கள், சில்லரை வியாபாரிகள் கட்டாயம் இந்திய தர நிர்ணய அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

நகை வியாபாரிகளுக்காக, நகை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், விற்பனையில் நேரடி தொடர்பில்லாத கலைஞர்களுக்கு இந்த பதிவில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

தயாரிப்பாளர், மொத்த விற்பனையாளர், விநியோகிப்பாளர் அல்லது சில்லரை விற்பனையாளர் யாராக இருந்தாலும், முதல்நிலை விற்பனையில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும். ஹால்மார்க் நகையில் 2 கிராம் வரை அதிகரிப்பது அல்லது குறைப்பதற்கு அனுமதிக்கப்படும். இதில் சுத்தத்துக்கான பொறுப்பு நகைக்கடைக்காரரிடம் உள்ளது.

ஹால்மார்க் முத்திரைக்கான தங்கத்தின் சுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என நகைக்கடைக்காரர்களிடம் எப்போதும் அதிக கோரிக்கை உள்ளது. இதை கருத்தில் கொண்டு, ஹால்மார்க் முத்திரைக்கு 20, 23 மற்றும் 24 கேரட் அனுமதிக்கப்படும்.

ஹால்மார்க் முத்திரையில்லாத வீட்டில் உள்ள நகைகளை நகைக்கடைகாரர்களிடம் விற்க முடியும். வாடிக்கையாளரிடமிருந்து ஹால்மார்க் முத்திரையில்லாத தங்கத்தை நகைக்கடைக்காரர்கள் தொடர்ந்து பெற முடியும். நகைக் கடைக்காரர்களால் சாத்தியம் என்றால், பழைய நகைகளுக்கும் ஹால் மார்க் முத்திரை பெற முடியும். அவற்றை உருக்கி புதிய நகை தயாரிக்கும்போது,  ஹால்மார்க் முத்திரை பெறலாம். 

இந்த திட்டத்தை அமல்படுத்தும்போது, எழும் பிரச்சினைகள் குறித்து ஆராய  பல தரப்பு பிரதிநிதிகள், வருவாய் அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

இந்திய தரநிர்ணய அலுவலகத்தின் ஹால்மார்க் திட்டத்தின் கீழ், ஹால்மார்க் நகைகளை விற்க நகைக்கடைக்காரர்கள்  பதிவு செய்யப்படுகின்றனர் மற்றும்  ஹால்மார்க் மையங்களில் பரிசோதனை மூலம் அங்கீகரிக்கப்படுகின்றனர். பிஸ்(ஹால்மார்க்) ஒழுங்குமுறைகள் 2018 ஜூன் 14ம் தேதி முதல்  அமல்படுத்தப்பட்டன. இந்த ஹால்மார்க் முத்திரை மூலம், நுகர்வோர் தங்கம் வாங்கும்போது  சரியான தேர்வு செய்து, தேவையற்ற குழப்பங்களில் இருந்து விடுபடலாம்.

இவ்வாறு சென்னையில் உள்ள இந்திய தரநிர்ணய அலுவலகம்(பிஸ்) துணை இயக்குனர் (மார்க்கெட்டிங் மற்றும் சிஏ) திரு எச் அஜய் கண்ணா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தங்க நகைகளின் தரத்தை மதிப்பிட இவ்வமைவனத்தின் மூலம் 2000 முதல் 'பிஐஎஸ் ஹால்மார்க்' என்ற பெயரில் ஹால்மார்க் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் பிஐஎஸ் விலைமதிப்புள்ள உலோகப் பிரிவுக் குழுவின் படி தங்கம் மற்றும் தஙகக் கலப்புலோகங்களின் தர நிர்ணயங்கள்:

IS 1417 - ஆபரணத் தங்கம் மற்றும் தஙகக் கலப்புலோகங்களின் தகுதி நிலை

IS 1418 - சொக்கத் தங்கம், ஆபரணத் தங்கம் மற்றும் தஙகக் கலப்புலோகங்களின் மதிப்பீடு

IS 2790 - 23,22,21,18,14 மற்றும் 9 காரட் தஙகக் கலப்புலோகங்களின் வழிநெறி

IS 3095 - ஆபரணத் தங்க உற்பத்தியில் பயன்படும் தஙகப்பற்றுகள்

2005 முதல் வெள்ளிக்கும் ஹால் மார்க் நிர்ணயம் செய்யப்படுகிறது.

IS 2112 - ஆபரண வெள்ளி மற்றும் வெள்ளிக் கலப்புலோகங்களின் தகுதி நிலை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த