தமிழகத்தின் முதல்வர் மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் அப்பகுதியில் சௌமியா என்பவரின் கடிதம் கவனத்தை ஈர்த்தது.
பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது
பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் தெரிவித்த நிலையல் இன்று முதல்வர் சேலம், மேட்டூர் அணைத் திறப்பிற்காக சேலம் வருகை புரிந்த தமிழ்நாடு முதல்வரிடம் மேட்டூர், பொட்டனேரி பகுதியை சேர்ந்த மாணவி ஆர்.சௌமியா தங்கச் சங்கிலியோடு வேலை வேண்டி அளித்த மனுவின் மீது இரண்டே நாட்களில் நடவடிக்கையால், தனியார் நிறுவனத்தின் பணி நியமனக் கடிதத்தை சௌமியாவிடம் இன்று நேரில் சென்று வழங்கப்பட்டது. நியமன கடிதத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட சௌமியா முதல்வரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தனது நன்றியை தெரிவித்தார்..
கருத்துகள்