மாநில நுகர்வோர் குறைதீர் தீர்ப்பாயத் தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் R.சுப்பையாவை நியமனம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியீடு.
திமுகவின் திருநெல்வேலி ஒருங்கிணைந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி S.இரத்னவேல் பாண்டியன் மகனாவார் நீதிபதி ஆர்.சுப்பையா. திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் கிராமத்தை சேர்ந்தவர். சென்னை சட்டக் கல்லூரியில் படிப்பை முடித்து 1983 ஆம் ஆண்டில் தமிழ்நாடு பார்கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார். 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ல் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகப் பதவியேற்றவர், 2009 ஆம் ஆண்டு நவம்பரில் நிரந்தர நீதிபதியாகப் பொறுப்பேற்றார். இணைய வழி சூதாட்ட விளையாட்டுகளை தடைசெய்யும் அரசு ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்தது. ஒவ்வொரு பள்ளியும் பலவீனமான பிரிவு மாணவர்களுக்கு இலவசக் கல்விக்காக மொத்த இடங்களில் 25 சதவீதத்தை ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பான தீர்ப்புகளை வழங்கியவர் கடந்த ஜூன் 21 ஆம் தேதி ஓய்வு பெறுகிறதையடுத்து, நீதிபதி ஆர்.சுப்பையாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் பிரிவுபசார விழா ஜூன் 19 ஆம் தேதி நடந்தது. நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, மூத்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ் உள்ளிட்ட நீதிபதிகள் கலந்துகொண்டனர். பல நீதிபதிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் வாழ்த்தி பேசினார்.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த ஒதுக்கீடு எண்ணிக்கை 75 ஆகும். தற்போது 60 நீதிபதிகள் பதவியில் உள்ளனர். நீதிபதி ஆர்.சுப்பையா ஓய்வு பெறுவதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 59 ஆகக்
குறைந்துள்ளது. தற்போதுமாநில நுகர்வோர் குறைதீர் தீர்ப்பாய தலைவராக ஜூன் 21 ஆம் தேதியில் ஓய்வுபெற்ற நீதியரசர் R.சுப்பையாவை நியமனம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியீடப்படடது.
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை இந்திய அரசின் முன் ஒப்புதலுடன் ஒவ்வொரு மாநில அரசும் மாநிலத் தலைநகரில் அமைத்திட வேண்டும். இந்த ஆணையத்தின் தலைவர் பதவிக்கு மாநில அரசால் நியமிக்கப்பட்ட உயர்நீதி மன்றத்தின் நீதிபதி தலைவராகவும், இரண்டு உறுப்பினர்களைக் கொண்டும் அமைக்கப்பட வேண்டும். இருவரில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும். இரு உறுப்பினர்களும் சமூக சேவை, பொருளாதாரம், வணிகம், தொழில், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் போதுமான அறிவும் முன் அனுபவமும் இருக்க வேண்டும். ஆக இந்த மன்றத்தில் தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் இருப்பர். இந்த ஆணையத்தில் மாநில எல்லையிலான 20 இலட்சத்திற்கு மேல் 100 இலட்சம் ரூபாய் வரையிலான நஷ்ட ஈட்டுக்கான வழக்குகள் மற்றும் மாவட்டக் குறைதீர் மன்றத்தின் ஆணையின் மேலான முறையீடுகள் நடத்தப் பெறுகின்றன.
கருத்துகள்