முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்ற வாராங்கல் காக்காத்தியப் பேரரசின் ராமப்பா கோவில்

 கலாசாரத்துறை அமைச்சகம் இந்தியாவின் 39 வது உலக பாரம்பரிய இடம்: தெலங்கானா, வாராங்கல், பாலம்பேட்டில் உள்ள ருத்ரேஷ்வரா கோயில் (ராமப்பா கோயில்) யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றது


மற்றொரு மைல்கல் சாதனையாக, இந்தியாவின் பரிந்துரையால், தெலங்கானா மாநிலத்தின் வாராங்கல் அருகே முலுகு மாவட்டத்தில் பாலம்பேட் என்ற இடத்தில் அமைந்துள்ள ராமப்பா கோயில் என அழைக்கப்படும்  ருத்ரேஷ்வரா கோயில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 

இந்த முடிவு இன்று நடந்த, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய குழுவின் 44வது கூட்டத்தில் எடுக்கப்பட்டது.




13ம் நூற்றாண்டின் பொறியியல் அற்புதமான ராமப்பா கோயிலை உருவாக்கியவர் ராமப்பா. இதை 2019ம் ஆண்டுக்கான, யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடம் பட்டியலில் சேர்க்கும்படி மத்திய அரசு பரிந்துரை செய்தது.

அதன்படி யுனெஸ்கோ இன்று வெளியிட்ட சுட்டுரை செய்தியில், ‘‘இந்தியாவின் தெலங்கானா பகுதியில் உள்ள காகத்தியா ருத்ரேஷ்வரா (ராமப்பா) கோயில், உலக பாரம்பரிய இடமாக இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. சபாஷ்!’’ என குறிப்பிட்டுள்ளது.

காகத்தியா ராமப்பா கோயிலை, உலக பாரம்பரிய இடமாக, யுனெஸ்கோ அறிவித்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கம்பீரமான இந்த கோயில் வளாகத்துக்கு சென்று, அதன் பிரம்மாண்டத்தின் முதல் அனுபவத்தை பெற வேண்டும் என அவர் மக்களை கேட்டுக் கொண்டார்.



யுனெஸ்கோ வெளியிட்டுள்ள சுட்டுரைக்கு பதில் அளித்துள்ள பிரதமர் ;

அருமை! அனைவருக்கும், குறிப்பாக தெலங்கானா மக்களுக்கு வாழ்த்துகள்.

நினைவு சின்னமான ராமப்பா கோயில், மிகச் சிறந்த காகத்தியா வம்சத்தின் சிறப்பான கைவினைத்திறனைக் காட்டுகிறது. இந்த கம்பீரமான கோயில் வளாகத்தை பார்வையிடவும், அதன் பிரம்மாண்டத்தின்  முதல் அனுபவத்தைப் பெறவும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.’’ என குறிப்பிட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தின் வாராங்கல் அருகே முலுகு மாவட்டத்தில் பாலம்பேட் என்ற இடத்தில் அமைந்துள்ள ராமப்பா கோயில் என அழைக்கப்படும்  ருத்ரேஷ்வரா கோயிலை  உலக பாரம்பரிய பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்ததற்கு, வழிகாட்டியதற்காகவும்,  ஆதரவு அளித்ததற்காகவும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்  திரு ஜி கிஷன் ரெட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம்

காகத்தியா ராமப்பா கோயிலை, உலக பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்ததற்கு பிரதமர் மகிழ்ச்சி

காகத்தியா ராமப்பா கோயிலை, உலக பாரம்பரிய இடமாக, யுனெஸ்கோ அறிவித்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கம்பீரமான இந்த கோயில் வளாகத்துக்கு சென்று, அதன் பிரம்மாண்டத்தின் முதல் அனுபவத்தை பெற வேண்டும் என அவர் மக்களை கேட்டுக் கொண்டார்.

யுனெஸ்கோ வெளியிட்டுள்ள சுட்டுரைக்கு பதில் அளித்துள்ள பிரதமர் ;

அருமை! அனைவருக்கும், குறிப்பாக தெலங்கானா மக்களுக்கு வாழ்த்துகள்.

நினைவு சின்னமான ராமப்பா கோயில், மிகச் சிறந்த காகத்தியா வம்சத்தின் சிறப்பான கைவினைத்திறனைக் காட்டுகிறது. இந்த கம்பீரமான கோயில் வளாகத்தை பார்வையிடவும், அதன் பிரம்மாண்டத்தின்  முதல் அனுபவத்தைப் பெறவும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.                வாராங்கல் ஆண்ட காக்காத்தியர்  தெலுங்கு வம்சம் பொது ஆண்டு 1083 முதல் 1323 ஆம் ஆண்டு வரை  ஆந்திரப் பிரதேச பகுதிகளை ஆண்டவர்கள். காகத்தியர்கள் சமண மதத்தைப் பின்பற்றி, பின் இந்து மதத்தின்  சைவ வழி மாறியவர்கள்.

காக்காத்தியாப் பேரரசரான கணபதிதேவர், தற்கால ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா மற்றும் தமிழ்நாட்டின் பெரும்பகுதிகளை ஆட்சி செய்தார். கணபதிதேவருக்குப் பின் வந்த ருத்திரமாதேவி பொது ஆண்டு 1259 முதல் 1295 வரை வாரங்கல்லை ஆண்ட காகதீயப் பேரரசியாவார். யாதவத் தலைவர் மகாதேவர், ருத்திரமாதேவியை எதிர்த்துத் தோல்வியடைந்தார். 1295 ஆம் ஆண்டில் ருத்திரமாதேவி காலமான போது , அவரது பேரன் பிரதாபருத்திரன் முடிசூடினார். பொது ஆண்டு 1323 ல் டில்லி சுல்தான் முகமது பின் துக்ளக்கின் படைகள், காக்காத்திய அரசை கைப்பற்றி, கப்பம் வசூலித்தான் பின் அலாவுதீன் கில்ஜி படை மாலிக்காபூர் தலைமையில் தேவகிரி யாதவர்களை வென்று பின்னர் வாராங்கல் காக்காத்தியரை வென்று பின்னர் துவாரசமுத்திரத்தின் ஹெய்சாலர்களை வென்று பின்னர் மதுரை பாண்டியர்களை சூழ்ச்சியில் வென்று கொள்ளையடித்துச் சென்ற வரலாறு உண்டு. அதன் பின்னர் முசுனூரி நாயக்கர்கள்

பொது ஆண்டு 1326 முதல் ஐம்பது ஆண்டுகள் ஆண்டனர் தெலுங்கானாவின் முசுனூரி நாயக்கர்கள், காகதீயர்களை வெற்றி கொண்டு, தில்லி சுல்தானகத்தின் பிடியிலிருந்து வாரங்கல்லை மீட்டனர். முசினூரி நாயக்க வம்சத்தின் காப்பையா நாயக்கர் (ஆட்சிக் காலம் 1333–1368) இசுலாமியர்களை வாரங்கல்லை விட்டு 1336 ல் வெளியேற்றினர். காப்பபைய நாயக்கர் தெலங்கானாவை 1368 வரை ஆட்சி செய்தார். அதன் பின்னர்

ரெட்டிப் பேரரசு, பொது ஆண்டு 1325 முதல் 1448 வரை தற்கால ஆந்திரப் பிரதேசத்தை ஆண்டனர். காக்கத்தியப் பேரரசில், ரெட்டி இன மக்கள் படைத் தலைவரகளாகவும், குறுநில மன்னர்களாகவும் இருந்தனர். 1323 ல் காக்காத்தியர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் புரோலய வேமா ரெட்டி என்பவர் ரெட்டிப் பேரரசை பொது ஆண்டு 1325 ல் நிறுவினார். தற்கால பிரகாசம் மாவட்டம், அத்தங்கியில் தற்காலிகமாக தலைநகரத்தை நிறுவி பின்னர் ராஜமுந்திரிக்கு மாற்றினார். ரெட்டிப் பேரரசு உச்சத்திலிருந்தபோது, வடக்கில் ஒடிசாவின் கட்டாக் முதல் தெற்கில் காஞ்சிபுரம் மற்றும் மேற்கில் ஸ்ரீசைலம் வரை விரிவு படுத்தப்பட்டது. ரெட்டிப் பேரரசர்கள் சைவம் மற்றும் வைணவப் பிரிவையும் ஆதரித்தனர்.

விஜய் நகர பேரரசின் கிருஷ்ணதேவராயரால், கஜபதி பேரரசு வெற்றி கொள்ளப்பட்ட போது, ரெட்டிப் பேரரசும் வெற்றிக் கொள்ளப்பட்டது. வரலாறு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...