பிக்கப் படத்திற்காக வனிதாவை பேக்கப் செய்த சீனிவாசன் வைரல் விடியோ பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா...என மூன்று நாட்கள் முன்பு வைரலான புகைப்படம் அதன் பிண்ணனி வேறு என்பது நாம் அறிந்த காரணமாக நாம் வெளியிடாத செய்தி
பவர் ஸ்டார் எனும் சீனிவாசன் இவர் சென்னை திருவெற்றியூர் பகுதியில் வசித்த போதே அறிவோம்.
நடிகை வனிதா நடிகர் விஜயகுமார் மகள் இவருக்கு 4 வது திருமணம் செய்துக் கொள்ளும் யோகம் இருப்பதாக செய்தி வெளியான நிலையில், திருமண செய்ததாக ஒரு புகைப்படம் வெளியானது.
பிக்பாஸ் எனும் கலாச்சாரக் சீரழிவு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தும் பெற்றவர், கடந்தாண்டில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் சினிமா கலைஞர் பீட்டர்பாலை 3-வது திருமணம் செய்தவர் பின்னர் அவரை உதறித் தள்ளி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் வனிதா 4-வது திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகவே மறுப்பு தெரிவித்தார். பின் வனிதாவின் ஜோதிடர் ஒருவர், அவருக்கு மீண்டும் திருமணம் நடக்கும் என்று கூறியிருந்த. நிலையில், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலை சூடிய புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் திருமண வாழ்த்துகள் என்று கமெண்ட் செய்து அதை வைரலாகும் படி செய்தார்கள். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வர பலர் செய்திகள் வெளியிட்டனர் உண்மை தெரியாமல். 1990 க்கு முன் ஆடி, மாசி,பங்குனி மாதங்களில் நடைபெறும் கிராமத்தில் தெருக்கூத்து அதில் நடிக்கும் ராஜபார்ட் நடிகர் ஸ்ரீ பார்ட் நடிகைக்கு மாலை மாற்றும் நிகழ்வு நடைபெறும் அதைத் திருமணம் என்று கூற முடியாது அது போல இதுவும் ஒரு படத்தில் வரும் காட்சிகள் அதை வைரலாக்குவது கூத்தாடிகளுக்கு வருமானம் மக்களின் பொழுது போக்கு அவ்வளவுதான்
இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்கள் என்பதும் அந்த திரைப்படத்தின் டைட்டில் ’பிக்கப் டிராப்’ என்றும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை வடபழனியில் நடந்தது பவர் ஸ்டார் எனும் புனைப்பெயரில் அறியப்படும் நடிகர் சீனிவாசன் தமிழ்த்திரைப்பட நடிகர், தயாரிப்பளர், இயக்குனர். 2013 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதியில் நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் முன்னணி நகைச்சுவை வேடத்தில் நடித்தார். இதற்கு முன்னர் லத்திக்கா எனும் தமிழ்த்திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார்.
2012 ஆம் ஆண்டு. குரோம்பேட்டையிலுள்ள ஆர்.பி.எஸ் இன்டர்நேசனலின் உரிமையாளர் ஜி.யு.பாலசுப்பிரமணியனை ஏமாற்றி மோசடி செய்ததற்காக நடிகர் சீனிவாசன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பாலசுப்பிரமணியனின் கூற்றுப்படி சீனிவாசன் தனக்கு 10 கோடி ரூபாய் தர உறுதியளித்ததாகவும் அதற்கு சேவைக்கட்டணமாக 65 இலட்சம் வாங்கியதாகவும் ஆனால் கடனையோ சேவைக்கட்டணத்தையோ தரவில்லை எனக்கூறினார். இரண்டு வாரங்களின் பின்னர் சீனிவாசன் பிணையில் விடுதலையானார். வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதியில் மத்தியக் குற்றப்பிரிவு மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது. இதற்கு பல்வேறு மோசடி வழக்குகளில் அவர் தொடர்புபட்டிருந்தமை காரணமாகும்.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் தேதியில் பவர் ஸ்டார் சீனிவாசனைக் காணவில்லை என அவரது மனைவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதியில் பவர் ஸ்டார் கடத்தியது யார் என தெரிந்தது. - திடுக்கிட வைக்கும் பின்னணி.கொண்டவர். பின் இவர் பாஜகவில் இணைந்தார். தற்போது பிக்கப் டிராப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் வனிதா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார், ‘நான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என்றும் அது தன்னுடைய விருப்பம் என்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்க தனக்குத் தைரியமிருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் நான் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று என்னுடைய ஜோதிடர் கூறினார் ஆனால் அரசியலில் எனக்கு விருப்பமில்லை எனவும் பேசினார். அடுத்துப் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், ’ஒரு பெண் இந்த உலகில் தனியாக வாழ்வது மிகவும் கடினம் என்றும் அதனால் வனிதா திருமணம் செய்து கொள்வது குறித்து யாரும் கேள்வி கேட்க வேண்டாமென்றும் அது அவருடைய தனிப்பட்ட உரிமை என்றும் தெரிவித்தார். மேலும் வனிதா அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு பல அவமானங்களைச் சந்தித்து இந்த இடத்திற்கு வந்துள்ளாரென்றும் அவர் கூறினார். சினிமாகாரர்களை கடந்த தலைமுறை தள்ளிவைத்து பார்த்த நிலை தற்போது இல்லை ஆகவே இந்த அர்த்தமற்ற செய்திகள் வைரலாகும் நிலை .
கருத்துகள்