அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம். தமிழக அரசு அறிவிப்பு..
நாளை 06 ஜூலை 2021 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு செய்தித்துறை ஏற்பாடு செய்துள்ள இந்த தடுப்பூசி முகாமை பத்திரிகையாளர்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவரவர் பணியாற்றும் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை கொண்டு வருவது அவசியம்.
தொடர்புக்கு: தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத் த லைமையகம். தொலைபேசி:9840035480 தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4.73 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் - 1.56 கோடி நபர்கள்.மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன் தகவல் ;
தமிழ்நாட்டிற்கு 11 ஆம் தேதி தான் கொரோனா தடுப்பூசிகள் வரும். தற்போது தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாத காரணத்தால் 11 ஆம் தேதிக்கு முன்பே தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம் என்று தகவல்.
கருத்துகள்