முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாரணாசியில் ருத்ராக்‌ஷ் என்ற சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையம்


பிரதமர் அலுவலகம் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் - வாரணாசியில் ருத்ராக்‌ஷ்

கொவிட் தொற்று இருந்தபோதும், காசியில் வளர்ச்சி பணியின் வேகம் அப்படியே உள்ளது: பிரதமர்

இந்தியா மற்றும் ஜப்பான் இடையே வலுவான பிணைப்பை இந்த மாநாட்டு மையம் காட்டுகிறது: பிரதமர்

இந்த மாநாட்டு மையம் ஒரு கலாச்சார மையமாகவும், வெவ்வேறு மக்களை ஒன்றிணைக்கும் வழியாகவும் இருக்கும் : பிரதமர்

கடந்த 7 ஆண்டுகளில் காசி பல வளர்ச்சி திட்டங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது மற்றும் இது ருத்ராக்‌ஷம் இன்றி நிறைவடையாது: பிரதமர்

வாரணாசியில் ருத்ராக்‌ஷ்  என்ற சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மைய


த்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இது ஜப்பான் உதவியுடன் கட்டப்பட்டுள்ளது.  பிறகு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கைகள் கொண்ட தாய், சேய் சுகாதார பிரிவை அவர் பார்வையிட்டார். கொவிட் தயார்நிலை குறித்து ஆராய அவர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களையும் சந்தித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்,  கொவிட் தொற்று இருந்தபோதிலும், காசியில் வளர்ச்சி பணியின் வேகம் அப்படியே உள்ளது என்றார்.  படைப்பாற்றல் மற்றும் ஆற்றலின் விளைவாக சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையம் - ருத்ராக்‌ஷ் உள்ளது என பிரதமர் கூறினார்.  இந்த மையம் இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான வலுவான இணைப்பை காட்டுகிறது என அவர் கூறினார்.  இந்த மாநாட்டு மையம் கட்ட உதவுவதில் ஜப்பானின் முயற்சியை அவர் பாராட்டினார்.

இந்த திட்டம் தொடங்கியபோது, திரு சுகா யோஷிஹைடே , அமைச்சரவையில்  தலைமை அமைச்சராக இருந்ததாகவும், பின்னர் அவர் பிரதமர் ஆனார் எனவும் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவுக் கூர்ந்தார்.  அவர் பிரதமர் ஆகும் வரை, இத்திட்டத்தில் அவர் தன்னை ஈடுபடுத்தினார் எனவும், இந்தியா மீதான அவரது உறவுக்கு, ஒவ்வொரு இந்தியரும் நன்றியுடன் இருப்பதாக பிரதமர் கூறினார்.

இன்றைய நிகழ்ச்சியுடன், ஜப்பானின் முன்னாள் பிரதமர் திரு ஷின்சோ அபேவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவுக் கூர்ந்தார்.  ஜப்பான் முன்னாள் பிரதமர் திரு ஷின்சோ அபே, காசி வந்தபோது, ருத்ராக்‌ஷ் குறித்து ஆலோசனை நடத்தியதையும் அவர் நினைவுக் கூர்ந்தார்.  இந்த கட்டிடம்  நவீனம் மற்றும் கலாச்சார பொலிவுடன் உள்ளதாகவும், இந்தியா-ஜப்பான் பிணைப்பு மற்றும் எதிர்கால ஒத்துழைப்பை கொண்டுள்ளதாகவும்,  பிரதமர் கூறினார்.  தான் ஜப்பான் பயணம் மேற்கொண்டதில் இருந்து  இது போன்ற மக்கள் இடையேயான உறவுகள் திட்டமிடப்பட்டதாகவும், ருத்ராக்‌ஷ் மற்றும் அகமதாபாத்தில் ஜென் பூங்கா போன்றவை இந்த உறவின் அடையாளமாக உள்ளன எனவும் திரு நரேந்திர மோடி கூறினார்.

யுக்தி மற்றும் பொருளாதாரத்தில் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இருப்பதற்காக, ஜப்பானை பிரதமர் பாராட்டினார். ஜப்பானுடனான இந்தியாவின் நட்பு இயற்கையான கூட்டுறவாக கருதப்படுகிறது. நமது வளர்ச்சி நமது அழகுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதை  இந்தியா மற்றும் ஜப்பானின் கருத்தாக உள்ளது. இந்த வளர்ச்சி எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும், அனைவருக்கும் இருக்க வேண்டும், எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

பாட்டுகள், இசை மற்றும் கலை ஆகியவை பனாரஸின் நரம்புகளில் ஓடுகின்றன.  கங்கையின் படித்துறைகளில் பல கலைகள் உருவாகியுள்ளன.  அறிவு மாநாடு வரை சென்றுள்ளது. மனிதநேயம் தொடர்பான சீரிய சிந்தனைகள் ஏற்பட்டுள்ளன.  இதன் காரணமாகத்தான், பனாரஸ் இசை, மதம், உணர்வு, அறிவு மற்றும் அறிவியலின் மிகப் பெரிய உலகளாவிய மையமாக மாறியுள்ளது.  இந்த மையம் கலாச்சார மையமாகவும், பல மக்களை இணைக்கும் வழியாகவும் உள்ளது.  இந்த மையத்தை காக்க வேண்டும் என காசி மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 7 ஆண்டுகளில் காசி, பல வளர்ச்சி திட்டங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ருத்ராக்‌ஷா இல்லாமல் இந்த அலங்கரிப்பு எப்படி நிறைவடைய முடியும்? என பிரதமர் கூறினார்.  தற்போது உண்மையான சிவனாக  இருக்கும் இந்த காசி, ருத்ராக்‌ஷாவை அணித்துள்ளது, காசியின் வளர்ச்சி மேலும் ஜொலிக்கும், காசியின் அழகு மேலும் அதிகரிக்கும் என்றார் பிரதமர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,