தேர்தல் வாக்குறுதிகளில் முதலமைச்சர் ஒவ்வொன்றாகச் செயல்படுத்தி வருகிறாரென செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்
தமிழ்நாட்டின் மக்கள் நலனுக்காக தேர்தல் வாக்குறுதிகளில் முதலமைச்சர் ஒவ்வொன்றாகச் செயல்படுத்தி வருகிறாரென செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசிய தகவல்
விபரம். கலைஞரின் நல்லாசியுடன் தமிழக மக்களின் நலனுக்காக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறாரென செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் பெருமிதத்துடன் கூறினார்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், பொங்கலூர் லட்சுமி திருமண மண்டபத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஜூலை 12 ஆம் தேதி வழங்கப் பட்ட ரூபாய் 2.25 இலட்சம் மதிப்பிலான 3 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக் டர் எஸ் வினீத் தலைமையில் பொங்கலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பயன்பாட்டிற்கு வழங்கினார்
வேற்றும் விதமாக ஒவ் வொன்றாக செயல் படுத்தி வருகிறார். தமிழக அரசு பொறுப்பேற்று கடந்த ஒன்றரை மாத காலத்தில் கொரோளா நோய் தடுப்புப் பணிகள் போர்க் கால அடிப்படையில் மேற் கொண்டதன் விளை வாக திருப்பூர் மாவட்டத்தில் நோய்த் தொற்றின் தினசரி பாதிப்பு 150 க்கும் கீழ் என்ற நிலை உருவாகியுள்ளது
தமிழக அரசு அறி வித்த ஊரடங்கில் பொதுமக்கள் வழங்கிய முழு ஒத்துழைப்பின் காரணமாக இன்று கொரோனா தோய்த் தொற்றில்லாத நிலை உருவாகி வருகிறது. கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நட வடிக்கைகள் மிகவும் சவாலான செயலானது இனிவரும் காலங்களிலும் கொரோனா நோய்த் தொற்று முற்றிலும் இல்லாத நிலையடைய பொதுமக்கள் அலட்சியமாக செயல்படாமல், ஏற்கனவே தமிழக அரசுக்களித்த ஒத்துழைப்பை மீண்டும் வழங்க வேண்டும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா நோய்த் தொற்று பாதிப்பி னால் மிகவும் கடுமையான சூழ்நிலை நிலவி வருகிறது.
தமிழ்நாடு அரசு தற்பொழுது பொது மக்களுக்குத் தேவையான சாலை வசதி, குடிநீர் வாதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் விதமாக அனைத்துப் பணிகளும் துவங்கப்பட்டுள்ளது எனவே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யக்கூடிய சூழ்நிலை விரைவாக வரவிறுக்கிறது. அதற்கு பிறகு அனைத்துத் திட்டங் களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து பொது மக்களுக்குச் சென்றடையும் சூழல் ஏற்படுத்தப்படும்
முதலமைச்சர் கொரொனா தொற் றால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை இரண்டு தவணையாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தையும், 14 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப் பினை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத் தார்கள்
அதேபோல் நகர்ப்புற பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவசமாக பயணம் மேற்கொள்வதற்காக இலவச பேருந்து திட்டத்தினை அறிவித்து செயல் படுத்தியுள்ளார்கள் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து தமிழகம் முழுவதும் விற்பனையாகி வருகிறது. இது குடும்பத் தலைவிகளின் மத்தியில் நன் மதிப்பைப் பெறுகிறது
இனி வரும் காலங்களிலும் முதலமைச்சர் அவர்கள் அனைத்துத் துறைகளின் மூலம்
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இன்னும் பல நல்ல திட்டங்களை அறிவித்துச் செயல் படுத்தவுள்ளார்கள் என் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்
மாவட்டப் பொறுப்பாளர் இல பத்மநாபன், பொங்கலூர் ஒன்றியப் பொறுப்பாளர் பொ அசோகன், ஒன்றி யக் குழுத்தலைவர் வழக்கறிஞர் எஸ்குமார் துணைத்தலைவர் அபிராமி அசோக் உள்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.
கருத்துகள்