முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நூற்றாண்டு விழா, கலைஞர் மு.கருணாநிதி படத்திறப்பு - குடியரசுத் தலைவருக்கு முதல்வர் அழைப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நூற்றாண்டு விழா, கலைஞர் மு.கருணாநிதி படத்திறப்பு - குடியரசுத் தலைவருக்கு முதல்வர் அழைப்பு :




தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின், இரண்டாம் முறையாக  மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்.  குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார். 30 நிமிடங்கள் நடந்த சந்திப்பின் போது, முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான டி.ஆர்.பாலு உடன் இருந்தார். குடியரசுத் தலைவரை சந்தித்த தமிழக முதல்வர். மனோகர் தேவதாஸ் எழுதி, வரைந்த நூலான The Multiple Facets of My Madurai எனும் நூலினை அளித்துள்ளதை விட மகிழ்வான செய்தி என்ன இருக்க முடியும்?

தான் வெளிச்சத்தில் பார்த்து ரசித்ததை பார்வை இழந்து இருட்டில் வரைந்து கொண்டிருப்பவர் மனோ.

வாழ்வும், காலமும் அவரிடமிருந்து எதைப் பறித்துக்கொண்தோ அதனை தனது ஆற்றலின் மூலம் வென்றெடுத்த மகத்தான கலைஞன் மனோகர் தேவதாஸ்.

மாமதுரையின் அழகை மனோவின் ஓவியத்தின் வழியே காண்பது பேரனுபவம். இந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் தெரிவித்ததாவது:

மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களை குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தேன்.


சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்து நூறாண்டு நிறைவுபெற்றதற்கான விழாவுக்குத் தலைமைதாங்கி, முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்தைத் திறந்துவைக்க அழைப்புவிடுத்தேன்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றதற்கு குடியரசுத் தலைவர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் செயல்பட்ட சட்டப்பேரவை, 1921 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதியில் துவக்கி வைக்கப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில், சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவைக் கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது. அவ் விழாவுக்குத் தலைமை தாங்க குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.

அந்த விழாவில், முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க வேண்டுமென்றும் கூறியுள்ளோம்.

அத்துடன், மதுரையில் கலைஞர் பெயரில் அமையவுள்ள மிகப் பெரிய நூலகம், சென்னை கிண்டியில் அமையவுள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனை, இந்தியா சுதந்திரம் பெற்று 75 வது ஆண்டைக் குறிக்கும் வகையில் சென்னை கடற்கரைச் சாலையில் அமையவிருக்கும் நினைவுத்தூண் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டவும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்துள்ளார்கள். அதற்கான தேதியை இரண்டொரு நாளில் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு

நீட் தேர்வு, 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கைகள் பற்றி பேசவில்லை. முதல்வராக பொறுப்பேற்றதுமே 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. சட்டப்படி அதை நீதிமன்றத்தின் மூலமாகத்தான் நாட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. எனவே, தொடர்ந்து திமுக குரல் கொடுக்கும்.

கரோனா மூன்றாவது அலை வரக்கூடாது என்பதுதான் எல்லோருடைய எண்ணமும். ஒரு வேளை வந்தால் அதை எப்படி சமாளிப்பது என்பதற்கான திட்டங்களுடன் தமிழக அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளை இப்போதைய சூழ்நிலையில் திறக்க முடியாத நிலை உள்ளது.

மேகேதாட்டு விவகாரம் குறித்து ஏற்கனவே பிரதமரைச் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளேன். தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சி குழு டெல்லியில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரைச் சந்தித்து விவாதித்துள்ளது. மத்திய அமைச்சரும் நிச்சயமாக மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி தரமாட்டோம் என்று உறுதி அளித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரள அரசுகள் எதிர்த்தாலும் கண்டிப்பாக அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக கூறினாலும்.

எங்களுக்குப் பிரதமர் நம்பிக்கையுடன் உறுதி அளித்துள்ளார். மத்திய அமைச்சரும் உறுதி அளித்துள்ளார். அந்த நம்பிக்கையுடன் உள்ளோம். இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால், சட்டப்படி சந்திப்போம்.

மேகேதாட்டு அணை குறித்த ஆலோசனைக்கு கர்நாடக அரசு

பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி என்னென்ன விவகாரங்கள் தொடர்பாக பேச வேண்டும் என்று விவாதித்துள்ளோம். அதுகுறித்து நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை குழு தலைவர்கள் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடம் சொல்லி அந்த அடிப்படையில் பேச இருக்கிறோமென அவர் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...