முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத்திய அரசின் நிதியில் இயங்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் இயக்குனர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

பிரதமர் அலுவலகம்    மத்திய அரசின் நிதியில் இயங்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் இயக்குனர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்


தொழில்நுட்ப தீர்வுகள் விரைந்து கிடைக்கச் செய்வதற்காக இளம் புத்தாக்க நிபுணர்களின் முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு

கற்போரின் தேவைகளுக்கு ஏற்ப நெகிழ்வான, இடைவெளி இல்லாத மற்றும் கற்றல் வாய்ப்புகளை வழங்கக் கூடிய கல்வி மாதிரிகளை உருவாக்குவதை நோக்கி முன்னேற வேண்டிய தேவை உள்ளது: பிரதம மந்திரி

வரும் பத்தாண்டில் நமது தொழில்நுட்ப மற்றும் ஆர்&டி நிறுவனங்கள் மிக முக்கிய பங்கினை ஆற்றும் – “இந்தியாவின் டெக்கேட்: பிரதம மந்திரி

நடைபெற்று வரும் ஆர்&டி பணிகளை, அதிலும் குறிப்பாக கோவிட் தொடர்புடைய பணிகள் குறித்து பிரதமர் தெரிவித்தார்

மத்திய அரசின் நிதியில் இயங்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் இயக்குனர்களுடன் இன்று (8 ஜுலை 2021) பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி காணொலி கருத்தரங்கு மூலம் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலில் பிரதமருடன் 100க்கும் அதிகமான கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கோவிட் முன்வைத்துள்ள சவால்களைச் சந்தித்து அவற்றை தீர்த்து வைப்பதில் இந்த நிலையங்கள் மேற்கொண்டுள்ள ஆர்&டி பணிகளைப் பிரதம மந்திரி பாராட்டினார். தொழில்நுட்பத் தீர்வுகளை விரைந்து கிடைக்கச் செய்வதற்காக இளம் புத்தாக்க நிபுணர்களின் முயற்சிகளுக்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

மாறிவரும் சூழல் மற்றும் உருவாகி வரும் சவால்களுக்கு ஏற்ற வகையில் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியானது தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது எனப் பிரதம மந்திரி தெரிவித்தார். தங்களுக்குத் தாங்களே மீள்புத்தாக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் மீள்மதிப்பீடு செய்தல், நாட்டின் மற்றும் சமுதாயத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைக்கு ஏற்ப மாற்றுவகை மாதிரிகளையும் புத்தாக்க மாதிரிகளையும் உருவாக்குதல் ஆகியவற்றை இத்தகைய நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்தார். தொடர்ச்சியான இடையூறுகள் மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப, நான்காவது தொழில் புரட்சியைக் கவனத்தில் கொண்டு நமது இளைஞர்களை உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் தயார் செய்ய வேண்டிய தேவை உள்ளது என பிரதம மந்திரி வலியுறுத்தினார்.

கற்போரின் தேவைகளுக்கு ஏற்ப, நெகிழ்வான, இடைவெளி இல்லாத மற்றும் கற்றல் வாய்ப்புகளை வழங்கக் கூடிய கல்வி மாதிரிகளை உருவாக்குவதை நோக்கி முன்னேற வேண்டிய தேவை உள்ளதை பிரதம மந்திரி அடிக்கோடிட்டு உணர்த்தினார். அத்தகைய கல்வி மாதிரிகளின் அடிப்படை மதிப்புகளாக அணுகும் வாய்ப்பு, குறைந்த செலவு, சமநிலை மற்றும் தரம் ஆகியவை இருந்தாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில வருடங்களில் உயர்கல்வியில் சேர்ந்த மொத்த மாணவர் சேர்ப்பு விகிதம் (GER) மேம்பட்டுள்ளதை பிரதமர் பாராட்டினார். உயர்கல்வியை டிஜிட்டல் மயமாக்குதல் என்பது ஜிஇஆர் அதிகரிப்பதில் முக்கிய பங்கினை வகிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனால் மாணவர்கள் உயர்தரத்திலான மற்றும் குறைந்த செலவிலான கல்வியைப் பெற முடியும். ஆன்லைன் இளநிலை மற்றும் முதுநிலை பட்ட படிப்புகளை அறிமுகப்படுத்துவது போன்று டிஜிட்டல் மயமாக்குவதற்கு கல்வி நிலையங்கள் எடுத்து வரும் பல்வேறு முன்னெடுப்புகளையும் பிரதம மந்திரி பாராட்டினார்.

இந்திய மொழிகளில் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதற்கும் பிராந்திய மொழிகளில் சர்வதேச ஆய்வு இதழ்களை மொழிபெயர்க்கவும் தேவையான சூழல்சார் அமைப்பை உருவாக்க வேண்டியதன் தேவையையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்திய சுதந்திரத்தின் 100ஆம் ஆண்டைக் கொண்டாடும் போது, அதாவது வருகின்ற 25 ஆண்டுகளில் இந்தியாவின் ஆசைகள் மற்றும் கனவுகளுக்கான அடிப்படையை சுய-சார்பு இந்தியா இயக்கம் உருவாக்கித் தரும் என்றும் குறிப்பிட்டார். வரும் பத்தாண்டுகளில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆர்&டி நிறுவனங்கள் மிக முக்கிய பங்கினை ஆற்றும்.  இந்தப் பத்தாண்டு “இந்தியாவின் டெக்கேட் (“India’s Techade”) என்று அழைக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, வேளாண்மை, பாதுகாப்பு மற்றும் சைபர் தொழில்நுட்பங்களில் அதிநவீன எதிர்கால தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டிய தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

உயர்கல்வி நிறுவனங்களில் மிகத் தரமான உள்கட்டமைப்பு வசதி இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது எனப் பிரதமர் கூறினார். செயற்கை நுண்ணறிவு, ஸ்மார்ட் அணிகலன்கள், மெய்நிகர் அமைப்புகள் மற்றும் டிஜிட்டல் உதவியாளர் ஆகியவற்றோடு தொடர்புடைய உற்பத்திப் பொருட்கள் சாதாரண மனிதருக்கும் சென்று சேர்வதை அப்போதுதான் உறுதிப்படுத்த முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, ஐஐஎஸ் பெங்களூருவின் பேரா.கோவிந்தன் ரெங்கராஜன், ஐஐடி பம்பாயின் பேரா.சுபாசிஸ் சௌத்ரி, ஐஐடி மெட்ராசின் பாஸ்கர் ராமமூர்த்தி, ஐஐடி கான்பூரின் பேரா.அபய் கரன்திகர் ஆகியோர் பிரதமருக்கு தங்களுடைய எடுத்துரைப்புகளை முன்வைத்தனர். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்திட்டங்கள், கல்விசார் பணிகள் மற்றும் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய ஆராய்ச்சிகளையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

கோவிட் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள் குறித்தும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. பரிசோதனை, கோவிட் தடுப்பூசி கண்டுபிடித்தல், உள்நாட்டு ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள், ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், புற்றுநோய் செல் சிகிச்சை, மாடுலர் மருத்துவமனைகள், தொற்றுக்குவி மையத்தை கணித்தல், வென்ட்டிலேட்டர் உற்பத்தி முதலானவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய தொழில் உத்திகள் குறித்தும் இவர்கள் பிரதமருக்கு விளக்கி கூறினார்கள். அதே போன்று ரோபோட்டிக்ஸ், ட்ரோன், ஆன்லைன் கல்வி, பேட்டரி தொழில்நுட்பம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளையும் எடுத்துரைத்தனர். மாறிவரும் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு வரும் ஆன்லைன் வகுப்புகள் உட்பட புதிய பாட வகுப்புகள், பாடத்திட்டங்கள் குறித்தும் பிரதமருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.

மத்திய கல்வி அமைச்சர் மற்றும் கல்வி இணையமைச்சர்களும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த