முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத்திய அரசின் நிதியில் இயங்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் இயக்குனர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

பிரதமர் அலுவலகம்    மத்திய அரசின் நிதியில் இயங்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் இயக்குனர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்


தொழில்நுட்ப தீர்வுகள் விரைந்து கிடைக்கச் செய்வதற்காக இளம் புத்தாக்க நிபுணர்களின் முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு

கற்போரின் தேவைகளுக்கு ஏற்ப நெகிழ்வான, இடைவெளி இல்லாத மற்றும் கற்றல் வாய்ப்புகளை வழங்கக் கூடிய கல்வி மாதிரிகளை உருவாக்குவதை நோக்கி முன்னேற வேண்டிய தேவை உள்ளது: பிரதம மந்திரி

வரும் பத்தாண்டில் நமது தொழில்நுட்ப மற்றும் ஆர்&டி நிறுவனங்கள் மிக முக்கிய பங்கினை ஆற்றும் – “இந்தியாவின் டெக்கேட்: பிரதம மந்திரி

நடைபெற்று வரும் ஆர்&டி பணிகளை, அதிலும் குறிப்பாக கோவிட் தொடர்புடைய பணிகள் குறித்து பிரதமர் தெரிவித்தார்

மத்திய அரசின் நிதியில் இயங்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் இயக்குனர்களுடன் இன்று (8 ஜுலை 2021) பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி காணொலி கருத்தரங்கு மூலம் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலில் பிரதமருடன் 100க்கும் அதிகமான கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கோவிட் முன்வைத்துள்ள சவால்களைச் சந்தித்து அவற்றை தீர்த்து வைப்பதில் இந்த நிலையங்கள் மேற்கொண்டுள்ள ஆர்&டி பணிகளைப் பிரதம மந்திரி பாராட்டினார். தொழில்நுட்பத் தீர்வுகளை விரைந்து கிடைக்கச் செய்வதற்காக இளம் புத்தாக்க நிபுணர்களின் முயற்சிகளுக்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

மாறிவரும் சூழல் மற்றும் உருவாகி வரும் சவால்களுக்கு ஏற்ற வகையில் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியானது தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது எனப் பிரதம மந்திரி தெரிவித்தார். தங்களுக்குத் தாங்களே மீள்புத்தாக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் மீள்மதிப்பீடு செய்தல், நாட்டின் மற்றும் சமுதாயத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைக்கு ஏற்ப மாற்றுவகை மாதிரிகளையும் புத்தாக்க மாதிரிகளையும் உருவாக்குதல் ஆகியவற்றை இத்தகைய நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்தார். தொடர்ச்சியான இடையூறுகள் மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப, நான்காவது தொழில் புரட்சியைக் கவனத்தில் கொண்டு நமது இளைஞர்களை உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் தயார் செய்ய வேண்டிய தேவை உள்ளது என பிரதம மந்திரி வலியுறுத்தினார்.

கற்போரின் தேவைகளுக்கு ஏற்ப, நெகிழ்வான, இடைவெளி இல்லாத மற்றும் கற்றல் வாய்ப்புகளை வழங்கக் கூடிய கல்வி மாதிரிகளை உருவாக்குவதை நோக்கி முன்னேற வேண்டிய தேவை உள்ளதை பிரதம மந்திரி அடிக்கோடிட்டு உணர்த்தினார். அத்தகைய கல்வி மாதிரிகளின் அடிப்படை மதிப்புகளாக அணுகும் வாய்ப்பு, குறைந்த செலவு, சமநிலை மற்றும் தரம் ஆகியவை இருந்தாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில வருடங்களில் உயர்கல்வியில் சேர்ந்த மொத்த மாணவர் சேர்ப்பு விகிதம் (GER) மேம்பட்டுள்ளதை பிரதமர் பாராட்டினார். உயர்கல்வியை டிஜிட்டல் மயமாக்குதல் என்பது ஜிஇஆர் அதிகரிப்பதில் முக்கிய பங்கினை வகிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனால் மாணவர்கள் உயர்தரத்திலான மற்றும் குறைந்த செலவிலான கல்வியைப் பெற முடியும். ஆன்லைன் இளநிலை மற்றும் முதுநிலை பட்ட படிப்புகளை அறிமுகப்படுத்துவது போன்று டிஜிட்டல் மயமாக்குவதற்கு கல்வி நிலையங்கள் எடுத்து வரும் பல்வேறு முன்னெடுப்புகளையும் பிரதம மந்திரி பாராட்டினார்.

இந்திய மொழிகளில் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதற்கும் பிராந்திய மொழிகளில் சர்வதேச ஆய்வு இதழ்களை மொழிபெயர்க்கவும் தேவையான சூழல்சார் அமைப்பை உருவாக்க வேண்டியதன் தேவையையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்திய சுதந்திரத்தின் 100ஆம் ஆண்டைக் கொண்டாடும் போது, அதாவது வருகின்ற 25 ஆண்டுகளில் இந்தியாவின் ஆசைகள் மற்றும் கனவுகளுக்கான அடிப்படையை சுய-சார்பு இந்தியா இயக்கம் உருவாக்கித் தரும் என்றும் குறிப்பிட்டார். வரும் பத்தாண்டுகளில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆர்&டி நிறுவனங்கள் மிக முக்கிய பங்கினை ஆற்றும்.  இந்தப் பத்தாண்டு “இந்தியாவின் டெக்கேட் (“India’s Techade”) என்று அழைக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, வேளாண்மை, பாதுகாப்பு மற்றும் சைபர் தொழில்நுட்பங்களில் அதிநவீன எதிர்கால தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டிய தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

உயர்கல்வி நிறுவனங்களில் மிகத் தரமான உள்கட்டமைப்பு வசதி இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது எனப் பிரதமர் கூறினார். செயற்கை நுண்ணறிவு, ஸ்மார்ட் அணிகலன்கள், மெய்நிகர் அமைப்புகள் மற்றும் டிஜிட்டல் உதவியாளர் ஆகியவற்றோடு தொடர்புடைய உற்பத்திப் பொருட்கள் சாதாரண மனிதருக்கும் சென்று சேர்வதை அப்போதுதான் உறுதிப்படுத்த முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, ஐஐஎஸ் பெங்களூருவின் பேரா.கோவிந்தன் ரெங்கராஜன், ஐஐடி பம்பாயின் பேரா.சுபாசிஸ் சௌத்ரி, ஐஐடி மெட்ராசின் பாஸ்கர் ராமமூர்த்தி, ஐஐடி கான்பூரின் பேரா.அபய் கரன்திகர் ஆகியோர் பிரதமருக்கு தங்களுடைய எடுத்துரைப்புகளை முன்வைத்தனர். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்திட்டங்கள், கல்விசார் பணிகள் மற்றும் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய ஆராய்ச்சிகளையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

கோவிட் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள் குறித்தும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. பரிசோதனை, கோவிட் தடுப்பூசி கண்டுபிடித்தல், உள்நாட்டு ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள், ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், புற்றுநோய் செல் சிகிச்சை, மாடுலர் மருத்துவமனைகள், தொற்றுக்குவி மையத்தை கணித்தல், வென்ட்டிலேட்டர் உற்பத்தி முதலானவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய தொழில் உத்திகள் குறித்தும் இவர்கள் பிரதமருக்கு விளக்கி கூறினார்கள். அதே போன்று ரோபோட்டிக்ஸ், ட்ரோன், ஆன்லைன் கல்வி, பேட்டரி தொழில்நுட்பம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளையும் எடுத்துரைத்தனர். மாறிவரும் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு வரும் ஆன்லைன் வகுப்புகள் உட்பட புதிய பாட வகுப்புகள், பாடத்திட்டங்கள் குறித்தும் பிரதமருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.

மத்திய கல்வி அமைச்சர் மற்றும் கல்வி இணையமைச்சர்களும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...