பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை
யை கட்டுக்குள் கொண்டுவராமல் தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று கரூர் நகரத்தில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.
பேரிடர் காலத்தில் கூட மக்கள் வயிற்றில் அடிக்கும் போக்கை மோடி அரசு கைவிட வேண்டும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை வெகுவாக பாதிக்கின்ற பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பது மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகும் என கரூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் எஸ். ஜோதிமணி சைக்கிள் மூலம் மக்களிடம் பரப்புரை செய்தார் அவருடன் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக மாவட்டம் தோறும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக மக்களுக்காக குரல் எழுப்பும் விதமாக பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக இன்று நாகர்கோவிலில் நடைபெற்ற மாபெரும் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்த கன்னியாகுமரி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் விஜய் வசந்தகுமாருடன் மகிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகர தலைவர் அலெக்ஸ் மற்றும் ஏராளமான கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்த நிகழ்வுகளில் கட்சியின் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள்