முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னாள் அமைச்சர் இரவி சங்கர் பிரசாத் தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்பு

முன்னாள் அமைச்சர்  திரு. இரவி சங்கர் பிரசாத்   தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்பு  

 30 ஆகஸ்ட் 1954 ல் பிறந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞராவார். 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் முதல் அமைச்சரவையிலும் மற்றும் 2019 ஆம் ஆண்டு இரண்டாம் அமைச்சரவையிலும் சட்டம் மற்றும் நீதித் துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகங்களின் அமைச்சராக இருந்தார். மாநிலங்களவை உறுப்பினரான இரவி சங்கர் பிரசாத் மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்துள்ளார். இந்திய உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞர்களாக ஏற்கப்பட்டவர்களில் ஒருவராவார்.2001 ல் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியரசில் நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சராகவும், 2002 ஆம் ஆண்டில் கூடுதல் பொறுப்பாக நீதித் துறை வழங்கப்பட்டபோது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் பல திருத்தங்களைக் கொண்டு வந்தார். தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராகவுமிருந்தார்.பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைமைச் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார்

.

 பீகார் மாநிலத்தில் பாட்னாவிலுள்ள ஓர் மத சித்ரகுப்தன்ஷி கயஸ்தா குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை தாகூர் பிரசாத் பாட்னா உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும், பாரதீய ஜனதா கட்சியின் முன்னோடியான ஜனசங்கத்தின் முன்னணி நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்தார். இவரது சகோதரி, ராஜீவ் சுக்லாவின் மனைவி அனுராதா பிரசாத் ஆவார். இவர் பிஏஜி பிலிம்ஸ் அண்ட் மீடியா லிமிடெட் உரிமையாளர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராவார். பிரசாத் பாட்னா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹான்ஸ், எம்.ஏ (அரசியல் அறிவியல்) மற்றும் எல்.எல்.பி பட்டங்களை பெற்றார். 1980 ஆம் ஆண்டு முதல் பாட்னா உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1999 ஆம் ஆண்டில் பாட்னா உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும், 2000 ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றினார். 'ராம் லல்லா' தெய்வத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ராம் ஜன்மபூமி அயோத்தி சர்ச்சை வழக்கில் பிரசாத் வழக்கறிஞராகப் பணியாற்றினார். முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானிக்காக வாதாடினார். நர்மதா பச்சாவ் அந்தோலன் வழக்கு, டி.என். திருமுல்பாட் சுற்றுச்சூழல் வழக்குகள், பீகார் சட்டசபை கலைப்பு வழக்கு உள்ளிட்ட பல முன்னணி வழக்குகளில் ஆஜரானார்


.

1970 ஆம் ஆண்டுகளில் இந்திரா காந்தி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை ஏற்பாடு செய்த மாணவர் தலைவராக பிரசாத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் 1975 ஆம் ஆண்டில் காந்தியின் அரசாங்கத்தால் அவசரகாலச் சட்டம் விதிக்கப்பட்டபோது சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையில் பீகாரில் மாணவர் இயக்கத்தில் பணியாற்றியவர், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) தன்னார்வலராக தன்னை இணைத்துக்கொண்டார். ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் மற்றும் ஏபிவிபியுடன் பல ஆண்டுகளாக தொடர்பு கொண்டிருந்தவர், இந்த அமைப்புகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். தனது கல்லூரி நாட்களில் இவர் பாட்னா பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் உதவிப் பொதுச் செயலாளராகவும், பல்கலைக்கழக பேரவை, நிதிக் குழு, கலை மற்றும் சட்ட பீடங்களின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.பிரசாத் பாஜகவின் பல தேசிய அளவிலான முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். 1995 ஆம் ஆண்டு முதல் பிரசாத் கட்சியின் உயர்மட்ட கொள்கை வகுக்கும் அமைப்பான பாஜக தேசிய நிர்வாகத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். சமீபத்தில், உத்தரகண்ட் சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் செயல்பாடுகளை மேற்பார்வையிட்டார்.

ஆகஸ்ட் 1995 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி (பி.ஜே.பி.) தேசிய செயற்குழு உறுப்பினரானார்

ஆகஸ்ட் 1996 ஆம் ஆண்டு பீகாரில் பிரபலமான கால்நடைத் தீவன ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. பாட்னா உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்து சிபிஐ விசாரணை கோரினார்.

ஏப்ரல் 2000 ஆம் ஆண்டு முதல் முறையாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜூன் 2001 ஆம் ஆண்டு தேசிய ஒருங்கிணைப்பாளர், பாஜக-சட்டப் பிரிவு

செப்டம்பர் 2001 ஆம் ஆண்டு நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகத்தின் இணை அமைச்சர்.

ஜூலை 2002 ஆம் ஆண்டு சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் இணை அமைச்சர்.

ஜனவரி 2003 ஆம் ஆண்டு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் (சுயாதீன பொறுப்பு)

ஆகஸ்ட் 2005 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.

மார்ச் 2006 ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 2006 ஆம் ஆண்டு உறுப்பினர், தகவல் தொழில்நுட்பத்திற்கான நிலைக்குழு

செப்டம்பர் 2006 ஆம் ஆண்டு உறுப்பினர், வெளியுறவு அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழு

அக்டோபர் 2009 ஆம் ஆண்டு அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக சபை உறுப்பினர்.

ஆகஸ்ட் 2009 ஆம் ஆண்டு உறுப்பினர், நிதி அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழு

ஏப்ரல் 2010 ஆம் ஆண்டு அகில இந்திய பொதுச் செயலாளர் மற்றும் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர்.

மார்ச் 2011 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு உரிமங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான விஷயங்களை ஆராய்வதற்காக கூட்டு நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினரானார்.

ஏப்ரல் 2012 ஆம் ஆண்டு  மாநிலங்களவைக்கு மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மே 2012 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவரானார்.

மே 2013 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் சலுகைகள் தொடர்பான குழுவில் உறுப்பினரானார்.

மே 2014 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்திற்கான மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.

ஏப்ரல் 2018 ஆம் ஆண்டு நான்காவது முறையாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

23 மே 2019 ஆம் ஆண்டு மக்களைவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மே 2019, சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம். உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தார்.

பிப்ரவரி 3, 1982 ஆம் ஆண்டுல், பாட்னா பல்கலைக்கழகத்தில் வரலாற்றாசிரியரும் வரலாற்றுப் பேராசிரியருமான மாயா சங்கரை பிரசாத் மணந்தார். இவர்களுக்கு மகனும் மகளும் என இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது தமிழகத்தில் சட்டம் அறிந்த அறிஞர் என்ற நிலையில்  ஆளுநராக குடியரசு தலைவரால் விரைவில் நியமிக்கப்பட வாய்ப்பு அதன் காரணமாகவே தற்போது பதவி விலகியதாக அரசியல் வட்டாரத்தில் தகவல். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த