முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

INO-PtRC ஆய்வகம் மதிகெட்டான் சோலை முதல் பெரியார் வரை திட்ட இயக்குநர் விளக்கம்

 ”INO-PtRC ஆய்வகம் மதிகெட்டான் சோலை முதல் பெரியார் வரையிலான புலிகளின் வழித்தடத்திற்கு இடையூறு விளைவிக்காது” - பொட்டிபுரம் ஆராய்ச்சி மையத்தின் திட்ட இயக்குநர் விளக்கம்









மும்பை டாட்டா அடிப்படை ஆராய்ச்சி மையத்தின் பொட்டிபுரம் ஆராய்ச்சி மைய திட்ட இயக்குநர் பேராசிரியர் கோபிந்தா மஜூம்தார்  வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

”PtRC ஆய்வகத்தின் கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட 31.45 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலமானது ”தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையினால் முன்மொழியப்பட்ட மதிகெட்டான் முதல் பெரியார் வரையிலான புலிகளின் வழித்தடத்தில் அமைந்துள்ளது” என்பது போன்ற உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஒரு சில ஊடகங்கள் வெளியிடுகன்றன.  இந்தத் தகவல்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வண்ணமும் மற்றும் இது சம்பந்தப்பட்ட உண்மை விவரங்கள் தரவும் இந்த செய்தி வெளியீட்டின் மூலம் விளக்க விரும்புகின்றோம்.



இந்த திட்டத்திற்கான 26.825 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலமானது, தரைத்தளம் சார்ந்த கட்டுமானத்திற்கும் மற்றும் 4.62 ஹெக்டேர் பரப்பளவு மலையினுள் சுரங்கப்பாதை மற்றும் ஆய்வகத்திற்கான குகை அமைக்கவும், ஒதுக்கப்பட்டதாகும்.

தரைத்தள கட்டுமானத்திற்கு ஒதுக்கப்பட்ட 26.825 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியானது பொது வருவாய் நிலமாகும்.  அது மட்டுமல்ல, இந்தப் பகுதியானது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லைக்கு வெளியே உள்ளது என்பது மிகக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்; ஆகையால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கோ அல்லது புலிகளின் வழித்தடத்திற்கோ எந்த ஒரு இடையூறும் விளையாது.

மலையின் உள்ளே அமைக்கவிருக்கும் கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட 4.62 ஹெக்டேரில் கிடைமட்டமான சுரங்கப்பாதை தொடர்வண்டி செல்ல வடிவமைக்கப்படும் சுரங்கப்பாதை போன்றது.  சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் பொது வருவாய் நிலத்தில் தொடங்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையை அடையும் போது மேற்பரப்பில் இருந்து பல மீட்டர் ஆழத்தினுள் கடந்து விடும்.  புலிகளின் வழித்தடமானது முழுவதுமாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியினுள் அமைந்துள்ளது.  எந்த ஒரு கட்டுமானமும் காட்டுப் பகுதியில் நடைபெறாத காரணத்தினாலும் சுரங்கப்பாதை அமைக்கும் பகுதி மேற்பரப்பில் இருந்து பல மீட்டர் (10 முதல் 1000 மீட்டர் வரை)  மலைப் பாறையின் ஆழத்தில் சென்று விடுவதாலும், வனப்பகுதியில் உள்ள புலிகளுக்கோ மற்றும் எந்த வன உயிர்களின் நடமாட்டத்திற்கும் தடை ஏற்படாது.  சுரங்கப்பாதை மற்றும் குகைக்கான 4.62 ஹெக்டேரில் மூன்று ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி வரையறுக்கப்பட்ட புலிகளின் வழித்தடத்திற்குள் பல நூறு மீட்டர் மலையின் அடியில்  (உட்புறம்)  உள்ளது.  புலிகளின் வழித்தடம் மேற்பரப்பில் உள்ளதால் மலையினுள் அமைக்கப்படும் சுரங்கப்பாதை மற்றும் குகையானது எந்த ஒரு வகையிலும் மலையின் மேல் செல்லும் புலிகளின் வழித்தடத்தைப் பாதிக்காது என்பதை முன்னிலைப்படுத்துகிறோம்.

நாங்கள் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால் PtRC ஆராய்ச்சி மையம் ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியான அறிவியல் திட்டமாகும்.  அது சுற்றுச்சூழலுக்கோ அல்லது அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்திற்கோ எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாது.  மேலும், இந்த ஆய்வகத்தில் எந்த ஒரு அபாயகரமான கதிர்வீச்சுப் பொருளோ அல்லது விஷத்தன்மை வாய்ந்த உமிழ்வோ இல்லவே இல்லை.  இந்த அறிவியல் ஆய்வகம் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளைச் சார்ந்த மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு சாதனை படைக்கவும், நம் நாட்டின் அடிப்படைத் தேவையான அறிவியல் கண்ணோட்டம் வளர்க்கவும் வித்தாக அமையும்.”                       பின்குறிப்பு : மதிகெட்டான் சோலை என்பது பூங்காவில் நுழையும் போது ஏற்பட்ட வழிக் குழப்பத்தினால் இப்பெயர் வந்தது. பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பேணவும், வனவிலங்குகளைக் காக்கவும் இது தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சிக் காலத்தில் 1897 ஆம் ஆண்டில் இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதி இப்பூங்காவின் சுற்றுச் சூழல், தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் பறவைகளைப் பேண வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.மர்மங்கள் நிறைந்த வனம் மதிகெட்டான் சோலை

ஒரு அரசாங்கமே இந்தக் கம்பி வேலியைத் தாண்டிச் சென்று 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்று எச்சரித்து ஒரு அறிவிப்புப் பலகையே வைத்துள்ளார்கள் என்றால் அந்த இடத்தைச் பற்றி நீங்களே யூகியுங்கள்.

இந்த இடம்  கொடைக்கானல் உள்ள பேரிஜம் பகுதிக்கு அருகில் 12 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள காடு தான் மதிகெட்டான் சோலை. காட்டிற்குள் சென்ற யாருமே இதுவரை திரும்பியதில்லை. இதற்கு பல காரணங்களைக் கூறுகிறார்கள்.

அதில் ஒன்று இந்த மூலிகை காட்டில் திகைப்பூண்டு என்கிற ஒரு வகை  மூலிகையை மிதித்து விட்டால் அதை மிதித்தவரின் மதி (அறிவு) மழுங்கடித்து அவர் அந்த காட்டை விட்டு வெளியேற வழி தெரியாமல் அந்த காட்டையே உயிர் போகும் வரை சுற்றிக்கொண்டிருப்பார்கள் என்று நம்பும்படி கூறப்படுகிறது.

தெரியாமல் தப்பித்தவறி காட்டுக்குள் நுழைந்தவர்கள் மதி கெட்டு வந்த வழி தெரியாமல் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் அலைந்து திரிகின்றனர்.அப்படியே வெளியே வந்தாலும் கிறுகிறுப்பு தீராது.

சிலபேர் இந்த மதிகெட்டான் சோலையில்ஒருவிதமான பூ நாகப் பூக்கள் இருப்பதாகவும் சொல்கின்றனர். 

அந்தப் பூக்கள் பூத்து அதன் பின்னர் வாடி கீழே உதிர்ந்து விடும். அப்படி விழும் மலர்கள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய் விடும். 

அப்போது ஒருவித வாசம் பரவும். அந்த வாசம் வருடம் முழுவதும் வீசிக் கொண்டே இருக்கும். இந்த வாசனையை கொஞ்ச நேரம் முகர்ந்தாலே போதை போன்ற மயக்கம் ஏற்படும் என்றும். 

இந்த மயக்கம் மனிதர்களை நிலை குலைத்து தூக்கிப் போட்டு பந்தாடும் பின்னர் எங்கிருக்கிறோம்? என்ன செய்யப் போகிறோம்? எனத் தீர்மானிக்க முடியாதாம். இத்தனைக்கும் காரணம் பூநாகப் பூ என்று கூறப்பட்டாலும் அப்படியொரு பூவே கிடையாது என்கின்றனர் தாவரவியல் ஆய்வாளர்கள். 

அதனால் மதி கெட்டான் சோலையில் மதிகெட்டுப் போவதற்கு என்ன காரணம் என்ற மர்மம் நீடித்துக் கொண்டே இருக்கிறது. எது எப்படியோ இந்த மதி கெட்டான் சோலை இன்று வரை ஒரு விடை தெரியாத மர்ம தேசம் தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த