ஒலிம்பிக் சுபேதார் நீரஜ் சோப்ரா 4ஆவது பட்டாலியன் ராஜ்புதானா ரைஃபிள்ஸ் படையணியை சேர்ந்த ராணுவ வீரர் இந்திய நாட்டிற்கு தங்கம் வென்றார்
சுபேதார் நீரஜ சோப்ரா 4 ஆவது பட்டாலியன் ராஜ்புதானா ரைஃபிள்ஸ் படையணியை சேர்ந்த ராணுவ வீரர் இந்திய நாட்டிற்கு தங்கம் வென்று தந்துள்ளார். ஒலிம்பிக் ஈட்டி எறிதல் பைனலில் இன்று ஆடி தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர்களில் மிக முக்கியமானவராக, இந்தியாவின் நம்பர் 1 வீரராக மதிக்கப்படுபவர் நீரஜ் சோப்ரா. 24 வயதான இவர் ஹரியானா மாநிலத்தில் பானிபட்டில் பிறந்தவர். இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன்ட் ஆப்ஸர் ரேங்கில் பணியாற்றுகிறார்.
அண்டர் 20 ஆட்டங்கள் தொடங்கி 2014 ஆம் ஆண்டிலிருந்தே இந்தியாவிற்காக தேசிய அளவிலான போட்டிகளில் நீரஜ் சோப்ரா ஆடி வருகிறார். 2016 ஆம் ஆண்டில் உலக அண்டர் 20 சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஒரே முயற்சியில்
ஈட்டி எறிதலில் டாப்பில் வந்து அசத்திய இந்தியாவின் நீரஜ் சோப்ரா பைனலுக்கு தகுதி பெற்றது முதல் பதக்கம் உறுதி என்ற நிலையில்
இந்தப் போட்டியிலேயே 86.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து புதிய அண்டர் 20 உலக சாதனையை நீரஜ் படைத்தார். இந்தியாவிற்காக அண்டர் 20 தடகளத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் இவர்தான். தேசிய அளவில் ஈட்டி எறிதலில் ரெக்கார்ட் வைத்து இருக்கும் வீரர் 88.07மீ என்ற ரெக்கார்ட் தேசிய அளவில் இவர் வசமுள்ளது. Will Neeraj Chopra be the 1-st person from India to win the Gold in Olympics in Athletics.1-st Javelin throw is 87.03 mts remember his best is 88.06 mts in 2018 Asian Games
2018 ஆம் ஆண்டில் ஆசிய போட்டியில் 88.06 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்றதுடன் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றார். இந்தியாவிற்காக 2018 ஆம் ஆண்டு ஆசிய போட்டிகளில் தேசிய கொடி ஏந்திச் சென்றிருக்கிறார். தற்போது ஒலிம்பிக் இறுதி போட்டியில் முதல் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
ஒலிம்பிக்கில் நடந்த தகுதி சுற்றில் மிக எளிதாக முதல் முயற்சியிலேயே நீரஜ் சோப்ரா வெற்றிபெற்று பைனலுக்குச் சென்றார். முதல்முறை ஈட்டி எறிந்து அதை 86.65 மீட்டர் தூரத்தில் வீசினார். இதனால் எளிதாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். தகுதி சுற்றில் 83.50 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறியும் வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்பதால் நீரஜ் எளிதாகச் சென்றார்
நீரஜ் சோப்ரா உலகின் 16 வது ரேங்க் கொண்ட வீரர். ஈட்டி எறிதல் போட்டிகளில் தனிப்பட்ட வகையில் உலகிலேயே முக்கியமான வீரர்களில் ஒருவராக நீரஜ் சோப்ரா மதிக்கப்படுகிறார்
காயத்தில் இருந்து இப்போதுதான் சோப்ரா மீண்டு வந்துள்ளார். இதன் காரணமாக ஒலிம்பிக் தகுதி சுற்றில் இவர் தனது பர்சனல் ரெக்கார்டை கூட தொட முடியவில்லை. ஆனாலும் பைனலுக்கு தகுதி பெற்று உள்ளதால் இன்றைய ஆட்டம் அவருக்கு கொஞ்சம் சவாலாகவே இருந்த போதிலும் தங்கம் வென்று சாதனை புரிந்தார்.
அதோடு ஜெர்மனி வீரர் வெட்டர் . உலகின் நம்பர் 1 வீரரான இவர் குழு ஆட்டத்தில் 85.64மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். இதனால் இவரும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். அதே சமயம் இவர்தான் தனிப்பட்ட வகையில் மிக சிறப்பான பர்சனல் ரெக்கார்ட் வைத்திருக்கும் வீரர்.
வெட்டர் தனிப்பட்ட வகையில் 97.76 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தனிப்பட்ட வகையில் ரெக்கார்ட் வைத்து இருக்கிறார். இதனால் அவரை முந்தி நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது சாதனை.பானிபட் எனும் யுத்த பூமியில் பிறந்த சுத்த வீரன் நீரஜ் சோப்ரா. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா நமது நாட்டிற்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே தங்கத்தை வென்று நாட்டிற்கு பெருமையை சேர்த்த வீரர் வாழ்த்துகள். தங்கம் வென்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் மைதானத்தில் இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.. தங்கம் வென்றால் தான் தேசிய கீதம் இசைக்கப்படும் என்பது நிகழ்வு. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில்
டோக்கியோ ஒலிம்பிக் 2020 -ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் பாராட்டு
டோக்கியோ ஒலிம்பிக் 2020 -ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அசாதாரணமான ஆர்வத்துடனும், ஈடு இணையற்ற விடாமுயற்சியுடனும் அவர் விளையாடியதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“டோக்கியோவில் வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது! நீரஜ் சோப்ரா இன்று மேற்கொண்டுள்ள சாதனை, என்றென்றும் நினைவுக்கூரப்படும். இளம் நீரஜ், மிகச் சிறப்பாக விளையாடியுள்ளார். அசாதாரணமான ஆர்வத்துடனும், ஈடு இணையற்ற விடாமுயற்சியுடனும் அவர் விளையாடினார். தங்கப்பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள்.”
கருத்துகள்