முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒலிம்பிக் சுபேதார் நீரஜ் சோப்ரா 4ஆவது பட்டாலியன் ராஜ்புதானா ரைஃபிள்ஸ் படையணியை சேர்ந்த ராணுவ வீரர் இந்திய நாட்டிற்கு தங்கம் வென்றார்


 சுபேதார் நீரஜ சோப்ரா 4 ஆவது பட்டாலியன் ராஜ்புதானா ரைஃபிள்ஸ் படையணியை சேர்ந்த ராணுவ வீரர் இந்திய நாட்டிற்கு தங்கம் வென்று தந்துள்ளார்.  ஒலிம்பிக் ஈட்டி எறிதல் பைனலில் இன்று ஆடி தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர்களில் மிக முக்கியமானவராக, இந்தியாவின் நம்பர் 1 வீரராக மதிக்கப்படுபவர் நீரஜ் சோப்ரா. 24 வயதான இவர் ஹரியானா மாநிலத்தில் பானிபட்டில் பிறந்தவர். இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன்ட் ஆப்ஸர் ரேங்கில் பணியாற்றுகிறார்.


அண்டர் 20 ஆட்டங்கள் தொடங்கி 2014 ஆம் ஆண்டிலிருந்தே இந்தியாவிற்காக தேசிய அளவிலான போட்டிகளில் நீரஜ் சோப்ரா ஆடி வருகிறார். 2016 ஆம் ஆண்டில் உலக அண்டர் 20 சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஒரே முயற்சியில்




ஈட்டி எறிதலில் டாப்பில் வந்து அசத்திய இந்தியாவின் நீரஜ் சோப்ரா பைனலுக்கு தகுதி பெற்றது முதல் பதக்கம் உறுதி என்ற நிலையில் 


இந்தப் போட்டியிலேயே 86.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து புதிய அண்டர் 20 உலக சாதனையை நீரஜ் படைத்தார். இந்தியாவிற்காக அண்டர் 20 தடகளத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் இவர்தான். தேசிய அளவில் ஈட்டி எறிதலில் ரெக்கார்ட் வைத்து இருக்கும் வீரர் 88.07மீ என்ற ரெக்கார்ட் தேசிய அளவில் இவர் வசமுள்ளது.      Will Neeraj Chopra be the 1-st person from India to win the Gold in Olympics in Athletics.1-st Javelin throw is 87.03 mts remember his best is 88.06 mts in 2018 Asian Games


 2018 ஆம் ஆண்டில் ஆசிய போட்டியில் 88.06 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்றதுடன் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றார். இந்தியாவிற்காக 2018 ஆம் ஆண்டு ஆசிய போட்டிகளில் தேசிய கொடி ஏந்திச் சென்றிருக்கிறார். தற்போது ஒலிம்பிக் இறுதி போட்டியில் முதல் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.


ஒலிம்பிக்கில் நடந்த தகுதி சுற்றில் மிக எளிதாக முதல் முயற்சியிலேயே நீரஜ் சோப்ரா வெற்றிபெற்று பைனலுக்குச் சென்றார். முதல்முறை ஈட்டி எறிந்து அதை 86.65 மீட்டர் தூரத்தில் வீசினார். இதனால் எளிதாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். தகுதி சுற்றில் 83.50 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறியும் வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்பதால் நீரஜ் எளிதாகச் சென்றார்



நீரஜ் சோப்ரா உலகின் 16 வது ரேங்க் கொண்ட வீரர். ஈட்டி எறிதல் போட்டிகளில் தனிப்பட்ட வகையில் உலகிலேயே முக்கியமான வீரர்களில் ஒருவராக நீரஜ் சோப்ரா மதிக்கப்படுகிறார்

காயத்தில் இருந்து இப்போதுதான் சோப்ரா மீண்டு வந்துள்ளார். இதன் காரணமாக ஒலிம்பிக் தகுதி சுற்றில் இவர் தனது பர்சனல் ரெக்கார்டை கூட தொட முடியவில்லை. ஆனாலும் பைனலுக்கு தகுதி பெற்று உள்ளதால் இன்றைய ஆட்டம் அவருக்கு கொஞ்சம் சவாலாகவே இருந்த போதிலும் தங்கம் வென்று சாதனை புரிந்தார்.

அதோடு ஜெர்மனி வீரர் வெட்டர் . உலகின் நம்பர் 1 வீரரான இவர் குழு ஆட்டத்தில் 85.64மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். இதனால் இவரும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். அதே சமயம் இவர்தான் தனிப்பட்ட வகையில் மிக சிறப்பான பர்சனல் ரெக்கார்ட் வைத்திருக்கும் வீரர்.


வெட்டர் தனிப்பட்ட வகையில் 97.76 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தனிப்பட்ட வகையில் ரெக்கார்ட் வைத்து இருக்கிறார். இதனால் அவரை முந்தி நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது  சாதனை.பானிபட் எனும் யுத்த பூமியில் பிறந்த சுத்த வீரன் நீரஜ் சோப்ரா. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா  நமது நாட்டிற்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 


தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே தங்கத்தை வென்று நாட்டிற்கு பெருமையை சேர்த்த வீரர்  வாழ்த்துகள். தங்கம் வென்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் மைதானத்தில் இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.. தங்கம் வென்றால் தான் தேசிய கீதம் இசைக்கப்படும் என்பது நிகழ்வு.     பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில்

டோக்கியோ ஒலிம்பிக் 2020 -ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் பாராட்டு

டோக்கியோ ஒலிம்பிக் 2020 -ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அசாதாரணமான ஆர்வத்துடனும், ஈடு இணையற்ற விடாமுயற்சியுடனும் அவர் விளையாடியதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:


“டோக்கியோவில் வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது! நீரஜ் சோப்ரா இன்று மேற்கொண்டுள்ள சாதனை, என்றென்றும் நினைவுக்கூரப்படும். இளம் நீரஜ், மிகச் சிறப்பாக விளையாடியுள்ளார். அசாதாரணமான ஆர்வத்துடனும், ஈடு இணையற்ற விடாமுயற்சியுடனும் அவர் விளையாடினார். தங்கப்பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள்.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...