முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒலிம்பிக் சுபேதார் நீரஜ் சோப்ரா 4ஆவது பட்டாலியன் ராஜ்புதானா ரைஃபிள்ஸ் படையணியை சேர்ந்த ராணுவ வீரர் இந்திய நாட்டிற்கு தங்கம் வென்றார்


 சுபேதார் நீரஜ சோப்ரா 4 ஆவது பட்டாலியன் ராஜ்புதானா ரைஃபிள்ஸ் படையணியை சேர்ந்த ராணுவ வீரர் இந்திய நாட்டிற்கு தங்கம் வென்று தந்துள்ளார்.  ஒலிம்பிக் ஈட்டி எறிதல் பைனலில் இன்று ஆடி தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர்களில் மிக முக்கியமானவராக, இந்தியாவின் நம்பர் 1 வீரராக மதிக்கப்படுபவர் நீரஜ் சோப்ரா. 24 வயதான இவர் ஹரியானா மாநிலத்தில் பானிபட்டில் பிறந்தவர். இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன்ட் ஆப்ஸர் ரேங்கில் பணியாற்றுகிறார்.


அண்டர் 20 ஆட்டங்கள் தொடங்கி 2014 ஆம் ஆண்டிலிருந்தே இந்தியாவிற்காக தேசிய அளவிலான போட்டிகளில் நீரஜ் சோப்ரா ஆடி வருகிறார். 2016 ஆம் ஆண்டில் உலக அண்டர் 20 சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஒரே முயற்சியில்




ஈட்டி எறிதலில் டாப்பில் வந்து அசத்திய இந்தியாவின் நீரஜ் சோப்ரா பைனலுக்கு தகுதி பெற்றது முதல் பதக்கம் உறுதி என்ற நிலையில் 


இந்தப் போட்டியிலேயே 86.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து புதிய அண்டர் 20 உலக சாதனையை நீரஜ் படைத்தார். இந்தியாவிற்காக அண்டர் 20 தடகளத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் இவர்தான். தேசிய அளவில் ஈட்டி எறிதலில் ரெக்கார்ட் வைத்து இருக்கும் வீரர் 88.07மீ என்ற ரெக்கார்ட் தேசிய அளவில் இவர் வசமுள்ளது.      Will Neeraj Chopra be the 1-st person from India to win the Gold in Olympics in Athletics.1-st Javelin throw is 87.03 mts remember his best is 88.06 mts in 2018 Asian Games


 2018 ஆம் ஆண்டில் ஆசிய போட்டியில் 88.06 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்றதுடன் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றார். இந்தியாவிற்காக 2018 ஆம் ஆண்டு ஆசிய போட்டிகளில் தேசிய கொடி ஏந்திச் சென்றிருக்கிறார். தற்போது ஒலிம்பிக் இறுதி போட்டியில் முதல் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.


ஒலிம்பிக்கில் நடந்த தகுதி சுற்றில் மிக எளிதாக முதல் முயற்சியிலேயே நீரஜ் சோப்ரா வெற்றிபெற்று பைனலுக்குச் சென்றார். முதல்முறை ஈட்டி எறிந்து அதை 86.65 மீட்டர் தூரத்தில் வீசினார். இதனால் எளிதாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். தகுதி சுற்றில் 83.50 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறியும் வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்பதால் நீரஜ் எளிதாகச் சென்றார்



நீரஜ் சோப்ரா உலகின் 16 வது ரேங்க் கொண்ட வீரர். ஈட்டி எறிதல் போட்டிகளில் தனிப்பட்ட வகையில் உலகிலேயே முக்கியமான வீரர்களில் ஒருவராக நீரஜ் சோப்ரா மதிக்கப்படுகிறார்

காயத்தில் இருந்து இப்போதுதான் சோப்ரா மீண்டு வந்துள்ளார். இதன் காரணமாக ஒலிம்பிக் தகுதி சுற்றில் இவர் தனது பர்சனல் ரெக்கார்டை கூட தொட முடியவில்லை. ஆனாலும் பைனலுக்கு தகுதி பெற்று உள்ளதால் இன்றைய ஆட்டம் அவருக்கு கொஞ்சம் சவாலாகவே இருந்த போதிலும் தங்கம் வென்று சாதனை புரிந்தார்.

அதோடு ஜெர்மனி வீரர் வெட்டர் . உலகின் நம்பர் 1 வீரரான இவர் குழு ஆட்டத்தில் 85.64மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். இதனால் இவரும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். அதே சமயம் இவர்தான் தனிப்பட்ட வகையில் மிக சிறப்பான பர்சனல் ரெக்கார்ட் வைத்திருக்கும் வீரர்.


வெட்டர் தனிப்பட்ட வகையில் 97.76 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தனிப்பட்ட வகையில் ரெக்கார்ட் வைத்து இருக்கிறார். இதனால் அவரை முந்தி நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது  சாதனை.பானிபட் எனும் யுத்த பூமியில் பிறந்த சுத்த வீரன் நீரஜ் சோப்ரா. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா  நமது நாட்டிற்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 


தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே தங்கத்தை வென்று நாட்டிற்கு பெருமையை சேர்த்த வீரர்  வாழ்த்துகள். தங்கம் வென்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் மைதானத்தில் இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.. தங்கம் வென்றால் தான் தேசிய கீதம் இசைக்கப்படும் என்பது நிகழ்வு.     பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில்

டோக்கியோ ஒலிம்பிக் 2020 -ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் பாராட்டு

டோக்கியோ ஒலிம்பிக் 2020 -ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அசாதாரணமான ஆர்வத்துடனும், ஈடு இணையற்ற விடாமுயற்சியுடனும் அவர் விளையாடியதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:


“டோக்கியோவில் வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது! நீரஜ் சோப்ரா இன்று மேற்கொண்டுள்ள சாதனை, என்றென்றும் நினைவுக்கூரப்படும். இளம் நீரஜ், மிகச் சிறப்பாக விளையாடியுள்ளார். அசாதாரணமான ஆர்வத்துடனும், ஈடு இணையற்ற விடாமுயற்சியுடனும் அவர் விளையாடினார். தங்கப்பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள்.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த