முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுதந்திர இந்தியாவின் 75 வது ஆண்டு விழா: தமிழ்நாட்டில் இருந்து அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவுகூறப்பட்டனர்

சுதந்திர இந்தியாவின் 75 வது ஆண்டு விழா: தமிழ்நாட்டில் இருந்து அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவுகூறப்பட்டனர்


இந்தியாவின் 75வது சுதந்திரத்தை கொண்டாடும் வகையில், ‘சுதந்திர போராட்டத்தின் போற்றப்படாத நாயகர்கள்’ என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்கை, மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னையில் உள்ள மண்டல மக்கள் தொடர்பு துறை அலுவலகம், பத்திரிகை தகவல் அலுவலகத்துடன் இணைந்து நடத்தியது.

சுதந்திர போராட்ட இயக்கத்தின் போற்றப்படாத நாயகர்களை வாழ்த்தி பேசிய, சென்னை கிறிஸ்த்துவ கல்லூரியின், வரலாற்றுத்துறை உதவி போராசிரியர் டாக்டர் மரிலின் கிரேஸி அகஸ்ட்டின், சுப்பிரமணிய சிவா, டி.எம்.கலையண்ணன், யகுன் ஹாசன் சயீத் மற்றும் லட்சுமி சாகல் போன்ற தலைவர்கள் குறித்து பேசினார். சுத்த தமிழ் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான, திரு சுப்பிரமணிய சிவா, தனி தமிழ் இயக்கத்தை தோற்றுவித்து, அதை தனது மாத இதழ் ஞானபானு மூலம் பிரபலப்படுத்தினார்.  அவர் வஉசி மற்றும் பாரதி ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.  திலகரின் கொள்கைகளை பின்பற்றி, ஆங்கிலேயர்களை வன்மையாக எதிர்க்க இளைஞர்களை சுப்பிரமணிய சிவா ஊக்குவித்தார். சென்னை சிறையில் முதல் அரசியல் கைதியாக இருந்த சுப்பிரமணிய சிவா, சிறையில் தோல் தொழிற் சாலையில் சுகாதாரமற்ற சூழ்நிலையில் பணியாற்றியதால், கடுமையான தொழுநோய்க்கு ஆளானார். இது பரவும் என பயந்து, சேலம் சிறைக்கு வெறும் காலுடன் நடந்து செல்லும்படி சுப்பிரமணிய சிவா வற்புறுத்தப்பட்டார். இதனால் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது. திரு கலையண்ணன் பற்றி பேசிய டாக்டர் மர்லின், காந்தியவாதியான கலையண்ணன், இந்திய தேசிய காங்கிரஸில் தனது 19ம் வயதில் இணைந்தார் என கூறினார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு பெற்ற அவர், கடந்த 1949ம் ஆண்டு சட்டசபையில் இளம் உறுப்பினர் ஆனார். அவர் 3 முறை சட்டசபை உறுப்பினராக இருந்தார். சேலம் பகுதியில், அவர் சுமார் 1000 பள்ளிகளை தொடங்கினார் மற்றும் நலத்திட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.  யகூப் ஹாசன் சயீத் பற்றி கூறுகையில், அவர் நாக்பூரில் பிறந்து சென்னைக்கு 1901ம் ஆண்டு வந்தார் என டாக்டர் மர்லின் கூறினார். முஸ்லிம் லீக் அமைப்பை ஏற்படுத்திய நிறுவனர்களில் அவரும் ஒருவர். தொழிலதிபரான இவர், இந்திய தேசிய காங்கிரஸில் 1916ம் ஆண்டு இணைந்தார். பல முறை இவர் கைது செய்யப்பட்டார்.  இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து 1923ம் ஆண்டு விலகிய யகூப் ஹாசன சயீத், சென்னை மாகாண முஸ்லீம் லீக் அமைப்பை ஏற்படுத்தினார். காங்கிரஸில் மீண்டும் இணைந்த அவர், ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றார். ஒத்துழையாமை இயக்கம், கிலாபத் இயக்கம் ஆகியவற்றிலும் இங்கு பங்கெடுத்தார். திருமிகு லட்சுமி சாகல் பற்றிய பேசுகையில், அவர் கேப்டன் லட்சுமி என அறியப்பட்டார் என டாக்டர் மர்லின் கூறினார். மருத்துவரான லட்சுமி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் தூண்டப்பட்டார். கடந்த 1940ம் ஆண்டு, அவர் சிங்கப்பூர் சென்று இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து கேப்டன் ஆனார். சுபாஷ் சந்திர போசுடன் இணைந்து அவர் ஜான்சி ராணி படைப்பிரிவை ஏற்படுத்தினார். பர்மாவிலிருந்து இந்திய தேசிய ராணுவம் பின்வாங்கியதும், அவர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப்பின் அவர் இந்தியா அனுப்பப்பட்டார்.  சுதந்திரத்துக்குப்பின் சமூக சேவைக்காக தனது வாழ்வை அவர் அர்ப்பணித்தார். கடந்த 1971ம் ஆண்டு, வங்கதேச அகதிகளுக்காக அவர் நிவாரண முகாம்களை நடத்தினார். போபால் விஷ வாயு தாக்குதல் சம்பவத்துக்குப்பின் அவர் மருத்துவக் குழுவுக்கு தலைமை தாங்கி சென்றார் என டாக்டர் மர்லின் கூறினார். 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின், வரலாற்றுத்துறை உதவிப் போராசிரியர் டாக்டர் சி. ஜெயவீரதேவன், பாளையக்காரர்கள் காலத்து இளம் நாயகர்கள், பலரது பெயர் தென் தமிழகத்தில், இன்னும் பலருக்கு வைக்கப்படுவது பற்றி கூறினார்.  செவல் பாளையத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன், பூலித்தேவனுடன் இணைந்து கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தார். பூலித்தேவன் இறந்த பிறகு, அவரது குழந்தைகளை பராமரித்த ஒண்டிவீரன் கட்டபொம்மன் மற்றும் ஊமத்துரையுடன் இணைந்து சுதந்திர இயக்கத்துக்காக போராடினார். ஊமத்துரையுடன் கலந்து கொண்ட போரில் அவர் உயிரிழந்தார்.

சிவகங்கையில் ராணி வேலு நாச்சியாரின் நம்பிக்கைக்குரிய கமாண்டராக இருந்த குயிலி குறித்தும், உதவிப் போராசிரியர் சி. ஜெயவீரதேவன் விளக்கினார்.  வேலு நாச்சியாருடன் இணைந்து, ஆங்கிலேயருக்கு எதிராக அவர் எவ்வாறு போரிட்டார் என்பதை அவர் விளக்கினார். சுதந்திர இயக்கத்தின் முதல் மனித வெடிகுண்டாக அவர் செயல்பட்டு, ஆங்கிலேயர்களின் வெடிமருந்து கிடங்கை தகர்க்க உடலில் தீ வைத்துக் கொண்டார். மற்றொரு குறிப்பிடத்தக்க வீரர், கருப்பு சேர்வை. இவர் தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய தலைவர். இவர் திப்பு சுல்தானுடன் இணைந்து பயிற்சி பெற்றவர். கடந்த 1805ம் ஆண்டு, இவர் தீரன் சின்னமலையுடன் சேர்த்து கைது செய்யப்பட்டார். பின் அவர் தூக்கிலிடப்பட்டார். ஈரோடு மாவட்டம், நலமங்கா பாளையத்தைச் சேர்ந்த பொல்லன் மாதாரி குறித்து பேசிய, டாக்டர் ஜெயவீரதேவன், தீரன் சின்னமலையுடன் இணைந்து அவர் அனைத்து போரிலும் பங்கெடுத்தார். தீரன் சின்னமலையை பாதுகாப்பதில், அவர் சிறந்த ஒற்றனாக திகழ்ந்தார். 1805ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், ஜெயராமபுரத்தில் சுட்டுகொல்லப்பட்டார்.

தலைமை உரையாற்றிய, சென்னை, மண்டல மக்கள் தொடர்பு இயக்குனர் ஜே.காமராஜ், இந்த பெருந்தொற்று காலத்தில், 9 கள விளம்பரத்துறை அலுவலகங்கள், பல தலைப்புகளில் பல நிகழ்ச்சிகளை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் நடத்துகின்றன என கூறினார். சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, போற்றப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி, இந்த இணைய கருத்தரங்கம் நடத்தப்படுகிறது என அவர் கூறினார். போற்றப்படாத வீரர்களை கவுரவித்து பிரபலப்படுத்தும் முயற்சியாக, சுதந்திர இயக்கத்தைச் சேர்ந்த 140 தலைவர்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. அவர்களின் நினைவாக, நாடு முழுவதும் முதல் கட்டமாக, 75 சிறப்பு நிகழ்ச்சிகள்  ஆகஸ்ட் கடைசி வாரத்தில், நடத்தப்படுகின்றன. 

சென்னை மண்டல மக்கள் தொர்பு அலுவலகத்தின் களவிளம்பர அதிகாரி திருமிகு வித்யா ஏ.ஆர், வரவேற்புரை மற்றும் நன்றியுரை ஆற்றினார். மாணவர்கள், போராசிரியர்கள் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்களுக்கு இ-சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.                            சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம்  திருக்கோஷ்டியூர் கிராமத்தில் சுதந்திரப்போராட்ட தியாகியாக இருந்து காலம்சென்ற ஜெயவாணி அம்பலம் மனைவி  தனபாக்கியம் அம்மாவின் வயது-87 ஆகும் நிலையில் 



அவர்களுக்கு   75-வது சுதந்திர தின  விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் வருவாய் வட்டாட்சியர் ஜெயந்தி அவர்களால் சுதேசிக் கதராடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார். இதில் விடுதலையின் மூத்த  செய்தியாளர் திருக்கோஷ்டியூர் தனபாலன் திருக்கோஷ்டியூர் வருவாய் ஆய்வாளர் செல்வசேகர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் கள் உடனிருந்தனர்.

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை கொண்டாட நடத்தப்பட்ட  ‘சுதந்திர போராட்டத்தின் போற்றப்படாத நாயகர்கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் முக்கிய பேச்சாளர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் உதவி பேராசிரியர் டாக்டர் மரிலின் கிரேஸி அகஸ்ட்டின்.

சிறப்பு விருந்தினர் சேலம் பெரியார் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் சி.ஜெயவீரதேவன்.

தலைமை உரையாற்றும் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குனர் திரு. ஜே.காமராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த