முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுதந்திர இந்தியாவின் 75 வது ஆண்டு விழா: தமிழ்நாட்டில் இருந்து அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவுகூறப்பட்டனர்

சுதந்திர இந்தியாவின் 75 வது ஆண்டு விழா: தமிழ்நாட்டில் இருந்து அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவுகூறப்பட்டனர்


இந்தியாவின் 75வது சுதந்திரத்தை கொண்டாடும் வகையில், ‘சுதந்திர போராட்டத்தின் போற்றப்படாத நாயகர்கள்’ என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்கை, மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னையில் உள்ள மண்டல மக்கள் தொடர்பு துறை அலுவலகம், பத்திரிகை தகவல் அலுவலகத்துடன் இணைந்து நடத்தியது.

சுதந்திர போராட்ட இயக்கத்தின் போற்றப்படாத நாயகர்களை வாழ்த்தி பேசிய, சென்னை கிறிஸ்த்துவ கல்லூரியின், வரலாற்றுத்துறை உதவி போராசிரியர் டாக்டர் மரிலின் கிரேஸி அகஸ்ட்டின், சுப்பிரமணிய சிவா, டி.எம்.கலையண்ணன், யகுன் ஹாசன் சயீத் மற்றும் லட்சுமி சாகல் போன்ற தலைவர்கள் குறித்து பேசினார். சுத்த தமிழ் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான, திரு சுப்பிரமணிய சிவா, தனி தமிழ் இயக்கத்தை தோற்றுவித்து, அதை தனது மாத இதழ் ஞானபானு மூலம் பிரபலப்படுத்தினார்.  அவர் வஉசி மற்றும் பாரதி ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.  திலகரின் கொள்கைகளை பின்பற்றி, ஆங்கிலேயர்களை வன்மையாக எதிர்க்க இளைஞர்களை சுப்பிரமணிய சிவா ஊக்குவித்தார். சென்னை சிறையில் முதல் அரசியல் கைதியாக இருந்த சுப்பிரமணிய சிவா, சிறையில் தோல் தொழிற் சாலையில் சுகாதாரமற்ற சூழ்நிலையில் பணியாற்றியதால், கடுமையான தொழுநோய்க்கு ஆளானார். இது பரவும் என பயந்து, சேலம் சிறைக்கு வெறும் காலுடன் நடந்து செல்லும்படி சுப்பிரமணிய சிவா வற்புறுத்தப்பட்டார். இதனால் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது. திரு கலையண்ணன் பற்றி பேசிய டாக்டர் மர்லின், காந்தியவாதியான கலையண்ணன், இந்திய தேசிய காங்கிரஸில் தனது 19ம் வயதில் இணைந்தார் என கூறினார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு பெற்ற அவர், கடந்த 1949ம் ஆண்டு சட்டசபையில் இளம் உறுப்பினர் ஆனார். அவர் 3 முறை சட்டசபை உறுப்பினராக இருந்தார். சேலம் பகுதியில், அவர் சுமார் 1000 பள்ளிகளை தொடங்கினார் மற்றும் நலத்திட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.  யகூப் ஹாசன் சயீத் பற்றி கூறுகையில், அவர் நாக்பூரில் பிறந்து சென்னைக்கு 1901ம் ஆண்டு வந்தார் என டாக்டர் மர்லின் கூறினார். முஸ்லிம் லீக் அமைப்பை ஏற்படுத்திய நிறுவனர்களில் அவரும் ஒருவர். தொழிலதிபரான இவர், இந்திய தேசிய காங்கிரஸில் 1916ம் ஆண்டு இணைந்தார். பல முறை இவர் கைது செய்யப்பட்டார்.  இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து 1923ம் ஆண்டு விலகிய யகூப் ஹாசன சயீத், சென்னை மாகாண முஸ்லீம் லீக் அமைப்பை ஏற்படுத்தினார். காங்கிரஸில் மீண்டும் இணைந்த அவர், ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றார். ஒத்துழையாமை இயக்கம், கிலாபத் இயக்கம் ஆகியவற்றிலும் இங்கு பங்கெடுத்தார். திருமிகு லட்சுமி சாகல் பற்றிய பேசுகையில், அவர் கேப்டன் லட்சுமி என அறியப்பட்டார் என டாக்டர் மர்லின் கூறினார். மருத்துவரான லட்சுமி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் தூண்டப்பட்டார். கடந்த 1940ம் ஆண்டு, அவர் சிங்கப்பூர் சென்று இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து கேப்டன் ஆனார். சுபாஷ் சந்திர போசுடன் இணைந்து அவர் ஜான்சி ராணி படைப்பிரிவை ஏற்படுத்தினார். பர்மாவிலிருந்து இந்திய தேசிய ராணுவம் பின்வாங்கியதும், அவர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப்பின் அவர் இந்தியா அனுப்பப்பட்டார்.  சுதந்திரத்துக்குப்பின் சமூக சேவைக்காக தனது வாழ்வை அவர் அர்ப்பணித்தார். கடந்த 1971ம் ஆண்டு, வங்கதேச அகதிகளுக்காக அவர் நிவாரண முகாம்களை நடத்தினார். போபால் விஷ வாயு தாக்குதல் சம்பவத்துக்குப்பின் அவர் மருத்துவக் குழுவுக்கு தலைமை தாங்கி சென்றார் என டாக்டர் மர்லின் கூறினார். 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின், வரலாற்றுத்துறை உதவிப் போராசிரியர் டாக்டர் சி. ஜெயவீரதேவன், பாளையக்காரர்கள் காலத்து இளம் நாயகர்கள், பலரது பெயர் தென் தமிழகத்தில், இன்னும் பலருக்கு வைக்கப்படுவது பற்றி கூறினார்.  செவல் பாளையத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன், பூலித்தேவனுடன் இணைந்து கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தார். பூலித்தேவன் இறந்த பிறகு, அவரது குழந்தைகளை பராமரித்த ஒண்டிவீரன் கட்டபொம்மன் மற்றும் ஊமத்துரையுடன் இணைந்து சுதந்திர இயக்கத்துக்காக போராடினார். ஊமத்துரையுடன் கலந்து கொண்ட போரில் அவர் உயிரிழந்தார்.

சிவகங்கையில் ராணி வேலு நாச்சியாரின் நம்பிக்கைக்குரிய கமாண்டராக இருந்த குயிலி குறித்தும், உதவிப் போராசிரியர் சி. ஜெயவீரதேவன் விளக்கினார்.  வேலு நாச்சியாருடன் இணைந்து, ஆங்கிலேயருக்கு எதிராக அவர் எவ்வாறு போரிட்டார் என்பதை அவர் விளக்கினார். சுதந்திர இயக்கத்தின் முதல் மனித வெடிகுண்டாக அவர் செயல்பட்டு, ஆங்கிலேயர்களின் வெடிமருந்து கிடங்கை தகர்க்க உடலில் தீ வைத்துக் கொண்டார். மற்றொரு குறிப்பிடத்தக்க வீரர், கருப்பு சேர்வை. இவர் தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய தலைவர். இவர் திப்பு சுல்தானுடன் இணைந்து பயிற்சி பெற்றவர். கடந்த 1805ம் ஆண்டு, இவர் தீரன் சின்னமலையுடன் சேர்த்து கைது செய்யப்பட்டார். பின் அவர் தூக்கிலிடப்பட்டார். ஈரோடு மாவட்டம், நலமங்கா பாளையத்தைச் சேர்ந்த பொல்லன் மாதாரி குறித்து பேசிய, டாக்டர் ஜெயவீரதேவன், தீரன் சின்னமலையுடன் இணைந்து அவர் அனைத்து போரிலும் பங்கெடுத்தார். தீரன் சின்னமலையை பாதுகாப்பதில், அவர் சிறந்த ஒற்றனாக திகழ்ந்தார். 1805ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், ஜெயராமபுரத்தில் சுட்டுகொல்லப்பட்டார்.

தலைமை உரையாற்றிய, சென்னை, மண்டல மக்கள் தொடர்பு இயக்குனர் ஜே.காமராஜ், இந்த பெருந்தொற்று காலத்தில், 9 கள விளம்பரத்துறை அலுவலகங்கள், பல தலைப்புகளில் பல நிகழ்ச்சிகளை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் நடத்துகின்றன என கூறினார். சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, போற்றப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி, இந்த இணைய கருத்தரங்கம் நடத்தப்படுகிறது என அவர் கூறினார். போற்றப்படாத வீரர்களை கவுரவித்து பிரபலப்படுத்தும் முயற்சியாக, சுதந்திர இயக்கத்தைச் சேர்ந்த 140 தலைவர்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. அவர்களின் நினைவாக, நாடு முழுவதும் முதல் கட்டமாக, 75 சிறப்பு நிகழ்ச்சிகள்  ஆகஸ்ட் கடைசி வாரத்தில், நடத்தப்படுகின்றன. 

சென்னை மண்டல மக்கள் தொர்பு அலுவலகத்தின் களவிளம்பர அதிகாரி திருமிகு வித்யா ஏ.ஆர், வரவேற்புரை மற்றும் நன்றியுரை ஆற்றினார். மாணவர்கள், போராசிரியர்கள் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்களுக்கு இ-சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.                            சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம்  திருக்கோஷ்டியூர் கிராமத்தில் சுதந்திரப்போராட்ட தியாகியாக இருந்து காலம்சென்ற ஜெயவாணி அம்பலம் மனைவி  தனபாக்கியம் அம்மாவின் வயது-87 ஆகும் நிலையில் 



அவர்களுக்கு   75-வது சுதந்திர தின  விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் வருவாய் வட்டாட்சியர் ஜெயந்தி அவர்களால் சுதேசிக் கதராடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார். இதில் விடுதலையின் மூத்த  செய்தியாளர் திருக்கோஷ்டியூர் தனபாலன் திருக்கோஷ்டியூர் வருவாய் ஆய்வாளர் செல்வசேகர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் கள் உடனிருந்தனர்.

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை கொண்டாட நடத்தப்பட்ட  ‘சுதந்திர போராட்டத்தின் போற்றப்படாத நாயகர்கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் முக்கிய பேச்சாளர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் உதவி பேராசிரியர் டாக்டர் மரிலின் கிரேஸி அகஸ்ட்டின்.

சிறப்பு விருந்தினர் சேலம் பெரியார் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் சி.ஜெயவீரதேவன்.

தலைமை உரையாற்றும் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குனர் திரு. ஜே.காமராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...