முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈசன் நிழலில் இளைப்பாறச் சென்ற மதுரை ஞானசம்பந்தர் மடத்தின் ஆதீனம்

தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களிலே குழந்தை பிராயத்தில் திருவருள் பெற்று சமயம் வளர்ந்த


ஞானசம்பந்தர் துவங்கிய ஆதீனம் தான் மதுரை ஆதினம். 


292 வது மதுரை ஆதீனமாக சைவப்பிள்ளை ஆருனகிரிநாதர் பெயர் கொண்ட ஆதீனம் கர்த்தர்  77 வது வயதில் சிவலோக பதவியடைந்தார்

மதுரை ஆதினத்தின் 292-வது குருமகா சந்திதானமாக இருந்த அருணகிரிநாதர் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.தமிழகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.


மதுரையை பாண்டிய நாட்டில் ஆட்சி நடத்திய  கூன் பாண்டியன் மன்னன் சமண மதத்தைத் தழுவினார் ஆதலால் அவரது ஆட்சிக்குட்பட்ட பாண்டிய நாட்டின் சமண மதமிருந்தது. சிவாலயங்களில் பூசைகள் நடைபெறவில்லை. மக்கள் மத்தியில் சிவ வழிபாடு வீழ்ச்சியுற்றுக் காணப்பட்டது. கூன்பாண்டியனின் மனைவி மானியும் என மங்கையர்க்கரசிபாக  அறியப்பட்ட சைவ சமயத்தில் பற்றுக் கொண்டவர். மந்திரி குலச்சிறையாரும் சிவபக்தர். அரசியும், மந்திரியும் கலந்தாலோசித்து திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்தனர். மதுரைக்கு விஜயம் செய்த திருஞானசம்பந்தரை மந்திரி குலச்சிறையார் இம்மடத்தில் தங்கவைத்தார். சமணர்கள் சம்பந்தரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்குத் தீ வைத்தனர். சம்பந்தர் மடத்தை விட்டு வெளியில் வந்து ஆலவாய் அண்ணலை தேவாரப்பதிகப் பாடலால் வேண்டினார். நெருப்பு வெப்பு நோயாக மாறிக் கூன்பாண்டியனை வாட்டியது. சமணர்கள் மன்னனின் நோயைக் குணப்படுத்த பல முயற்சி செய்தும் பலனில்லை. திருஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடி மன்னனின் வெப்பு நோயை குணப்படுத்தினார். சமணர்கள் மீண்டும் போட்டிக்கு அழைத்தனர். அனல்வாதம், புனல்வாதம் அனைத்திலும் ஞானசம்பந்தர் வென்று கூன்பாண்டியனின் கூன் முதுகு நோயை நீக்கி நின்றசீர் நெடுமாறனாக மாற்றினார். பாண்டிய நாடும் ஆண்மீகத்தில் ஜொலிக்க


ஞானசம்பந்தப் பெருமான் சைவத்தையும், தமிழையும் மதுரையில் மீண்டும் நிலைநாட்டினார். எனும் செய்தி முழுவதும் பெரிய புராணம் அருளிய சேக்கிழார் பெருமான்  சுந்தரர் அருளிய திருத்தொண்டர் தொகையிலும், நம்பியாண்டார்நம்பிகள் அருளிய திருத்தொண்டர் அந்தாதியிலும் காணப்படும் தமிழகத் திருக்கோயில் கல்வெட்டுகள் மற்றும் தேவாரப்பதிகப் பாடல்கள் ஆகியவற்றில் இவ்வரலாற்றுச் செய்தி அறியலாம்.


திருஞானசம்பந்தர் ஒழுங்குபடுத்திய மதுரை ஆதீனம் மடம், சைவ சித்தாத்தங்களை அடிப்படையாகக் கொண்ட திருமடம் தற்போது வரை 292 ஆதீனங்கள் பீடாதிபதியாக இருந்துள்ளனர். 292 ஆவதாக அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இவர் முன்னாள் மாலைமுரசு பத்திரிகையாளர். இவர் தனக்கு அடுத்ததாக 293 வது பீடாதிபதியாக தூத்துக்குடி சைவ மதம் சார்ந்த சிறுவன் முதலில் தேர்வாக பின்னர் பல குழப்பங்களை ஏற்படுத்தி பிடதி நித்யானந்தா கைப்பற்ற முயன்ற கதை பெரிது தேர்ந்தெடுப்பதாக அறிவித்தார். அதற்கு முன்னர் இவர் துறவறம் இருந்தும் அரவக்குறிச்சி ஜெய்லானி மற்றும் காலம்சென்ற முனைவர் ம.நடராஜன் உடன் பல சம்பவங்களில் உடனிருந்தவராவார்.  நித்யனந்தா தங்க சிம்மாசனம் கிரீடம் சூட்டி மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்றும் பட்டமளித்தார். அதில் ஆதீனம் மீது மக்களின் வெறுப்பு கூடியது நாம் கடந்த காலத்தில் இந்த ஆதீனம் மீது மதுரை ஆதீனத்தின் குட்டி ஆதீனம் கட்டுரை அவர் படித்த பிறகு அவரைச் சந்தித்து பேசியபோது அவர் பழைய நிகழ்வு மறந்து பொது நிகழ்ச்சிகளில் நமக்கு விபூதி வழங்கிய பின்னர் பேசினார் அப்போது அவர் எதையும் பெரிதாக பார்க்காத நிகழ்வு நாம் உணர்ந்து பின்னர் எங்கு பார்த்தாலும் நன்றாகப் பேசுவார். அவர் மறைவு ஞானசம்பந்தர் பெருமாள் மடத்திற்கு மட்டும் இழப்பு இல்லை தமிழ் மரபு வழி சைவத் துறவிகள் சார்ந்த ஆண்மீக இழப்பு ஈசன் நிழலில் இளைப்பாறச் சென்ற ஆதீனம் மோட்சகதி அடைய இறைவன் அருளட்டும். .

மதுரை ஆதினத்திற்குரிய மூன்று கோயில்கள் தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் உள்ளது.     ஞான சம்பந்தர் திருப்பராய்த்துறை தாருகாவணேஸ்வர் பசும்பொன் மயிலாம்பிகை அம்பாளை வழிபட்டு பாடிய பதிகம்.     "நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை

கூறுசேர்வதொர் கோலமாய்ப்

பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை

ஆறுசேர்சடை யண்ணலே.

கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை

வந்தபூம்புனல் வைத்தவர்

பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை

அந்தமில்ல வடிகளே.

வேதர்வேதமெல் லாமுறையால்விரித்

தோதநின்ற வொருவனார்

பாதிபெண்ணுரு வாவர்பராய்த்துறை

ஆதியாய வடிகளே.

தோலுந்தம்மரை யாடைசுடர்விடு

நூலுந்தாமணி மார்பினர்

பாலுநெய்பயின் றாடுபராய்த்துறை

ஆலநீழ லடிகளே.

விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்

இரவினின்றெரி யாடுவர்

பரவினாரவர் வேதம்பராய்த்துறை

அரவமார்த்த வடிகளே. மறையுமோதுவர் மான்மறிக்கையினர்

கறைகொள்கண்ட முடையவர்

பறையுஞ்சங்கு மொலிசெய்பராய்த்துறை

அறையநின்ற வடிகளே.    விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்

சடையிற்கங்கை தரித்தவர்

படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை

அடையநின்ற வடிகளே,

தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை

நெருக்கினார்விர லொன்றினால்

பருக்கினாரவர் போலும்பராய்த்துறை

அருக்கன்றன்னை யடிகளே.

நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்

தோற்றமும்மறி யாதவர்

பாற்றினார்வினை யானபராய்த்துறை

ஆற்றன்மிக்க வடிகளே.

திருவிலிச்சில தேரமணாதர்கள்

உருவிலாவுரை கொள்ளேலும்

பருவிலாலெயி லெய்துபராய்த்துறை

மருவினான்றனை வாழ்த்துமே.

செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்

செல்வர்மேற்சிதை யாதன

செல்வன்ஞானசம் பந்தனசெந்தமிழ்

செல்வமாமிவை செப்பவே".

...... ஞான சம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...