முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈசன் நிழலில் இளைப்பாறச் சென்ற மதுரை ஞானசம்பந்தர் மடத்தின் ஆதீனம்

தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களிலே குழந்தை பிராயத்தில் திருவருள் பெற்று சமயம் வளர்ந்த


ஞானசம்பந்தர் துவங்கிய ஆதீனம் தான் மதுரை ஆதினம். 


292 வது மதுரை ஆதீனமாக சைவப்பிள்ளை ஆருனகிரிநாதர் பெயர் கொண்ட ஆதீனம் கர்த்தர்  77 வது வயதில் சிவலோக பதவியடைந்தார்

மதுரை ஆதினத்தின் 292-வது குருமகா சந்திதானமாக இருந்த அருணகிரிநாதர் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.தமிழகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.


மதுரையை பாண்டிய நாட்டில் ஆட்சி நடத்திய  கூன் பாண்டியன் மன்னன் சமண மதத்தைத் தழுவினார் ஆதலால் அவரது ஆட்சிக்குட்பட்ட பாண்டிய நாட்டின் சமண மதமிருந்தது. சிவாலயங்களில் பூசைகள் நடைபெறவில்லை. மக்கள் மத்தியில் சிவ வழிபாடு வீழ்ச்சியுற்றுக் காணப்பட்டது. கூன்பாண்டியனின் மனைவி மானியும் என மங்கையர்க்கரசிபாக  அறியப்பட்ட சைவ சமயத்தில் பற்றுக் கொண்டவர். மந்திரி குலச்சிறையாரும் சிவபக்தர். அரசியும், மந்திரியும் கலந்தாலோசித்து திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்தனர். மதுரைக்கு விஜயம் செய்த திருஞானசம்பந்தரை மந்திரி குலச்சிறையார் இம்மடத்தில் தங்கவைத்தார். சமணர்கள் சம்பந்தரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்குத் தீ வைத்தனர். சம்பந்தர் மடத்தை விட்டு வெளியில் வந்து ஆலவாய் அண்ணலை தேவாரப்பதிகப் பாடலால் வேண்டினார். நெருப்பு வெப்பு நோயாக மாறிக் கூன்பாண்டியனை வாட்டியது. சமணர்கள் மன்னனின் நோயைக் குணப்படுத்த பல முயற்சி செய்தும் பலனில்லை. திருஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடி மன்னனின் வெப்பு நோயை குணப்படுத்தினார். சமணர்கள் மீண்டும் போட்டிக்கு அழைத்தனர். அனல்வாதம், புனல்வாதம் அனைத்திலும் ஞானசம்பந்தர் வென்று கூன்பாண்டியனின் கூன் முதுகு நோயை நீக்கி நின்றசீர் நெடுமாறனாக மாற்றினார். பாண்டிய நாடும் ஆண்மீகத்தில் ஜொலிக்க


ஞானசம்பந்தப் பெருமான் சைவத்தையும், தமிழையும் மதுரையில் மீண்டும் நிலைநாட்டினார். எனும் செய்தி முழுவதும் பெரிய புராணம் அருளிய சேக்கிழார் பெருமான்  சுந்தரர் அருளிய திருத்தொண்டர் தொகையிலும், நம்பியாண்டார்நம்பிகள் அருளிய திருத்தொண்டர் அந்தாதியிலும் காணப்படும் தமிழகத் திருக்கோயில் கல்வெட்டுகள் மற்றும் தேவாரப்பதிகப் பாடல்கள் ஆகியவற்றில் இவ்வரலாற்றுச் செய்தி அறியலாம்.


திருஞானசம்பந்தர் ஒழுங்குபடுத்திய மதுரை ஆதீனம் மடம், சைவ சித்தாத்தங்களை அடிப்படையாகக் கொண்ட திருமடம் தற்போது வரை 292 ஆதீனங்கள் பீடாதிபதியாக இருந்துள்ளனர். 292 ஆவதாக அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இவர் முன்னாள் மாலைமுரசு பத்திரிகையாளர். இவர் தனக்கு அடுத்ததாக 293 வது பீடாதிபதியாக தூத்துக்குடி சைவ மதம் சார்ந்த சிறுவன் முதலில் தேர்வாக பின்னர் பல குழப்பங்களை ஏற்படுத்தி பிடதி நித்யானந்தா கைப்பற்ற முயன்ற கதை பெரிது தேர்ந்தெடுப்பதாக அறிவித்தார். அதற்கு முன்னர் இவர் துறவறம் இருந்தும் அரவக்குறிச்சி ஜெய்லானி மற்றும் காலம்சென்ற முனைவர் ம.நடராஜன் உடன் பல சம்பவங்களில் உடனிருந்தவராவார்.  நித்யனந்தா தங்க சிம்மாசனம் கிரீடம் சூட்டி மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்றும் பட்டமளித்தார். அதில் ஆதீனம் மீது மக்களின் வெறுப்பு கூடியது நாம் கடந்த காலத்தில் இந்த ஆதீனம் மீது மதுரை ஆதீனத்தின் குட்டி ஆதீனம் கட்டுரை அவர் படித்த பிறகு அவரைச் சந்தித்து பேசியபோது அவர் பழைய நிகழ்வு மறந்து பொது நிகழ்ச்சிகளில் நமக்கு விபூதி வழங்கிய பின்னர் பேசினார் அப்போது அவர் எதையும் பெரிதாக பார்க்காத நிகழ்வு நாம் உணர்ந்து பின்னர் எங்கு பார்த்தாலும் நன்றாகப் பேசுவார். அவர் மறைவு ஞானசம்பந்தர் பெருமாள் மடத்திற்கு மட்டும் இழப்பு இல்லை தமிழ் மரபு வழி சைவத் துறவிகள் சார்ந்த ஆண்மீக இழப்பு ஈசன் நிழலில் இளைப்பாறச் சென்ற ஆதீனம் மோட்சகதி அடைய இறைவன் அருளட்டும். .

மதுரை ஆதினத்திற்குரிய மூன்று கோயில்கள் தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் உள்ளது.     ஞான சம்பந்தர் திருப்பராய்த்துறை தாருகாவணேஸ்வர் பசும்பொன் மயிலாம்பிகை அம்பாளை வழிபட்டு பாடிய பதிகம்.     "நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை

கூறுசேர்வதொர் கோலமாய்ப்

பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை

ஆறுசேர்சடை யண்ணலே.

கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை

வந்தபூம்புனல் வைத்தவர்

பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை

அந்தமில்ல வடிகளே.

வேதர்வேதமெல் லாமுறையால்விரித்

தோதநின்ற வொருவனார்

பாதிபெண்ணுரு வாவர்பராய்த்துறை

ஆதியாய வடிகளே.

தோலுந்தம்மரை யாடைசுடர்விடு

நூலுந்தாமணி மார்பினர்

பாலுநெய்பயின் றாடுபராய்த்துறை

ஆலநீழ லடிகளே.

விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்

இரவினின்றெரி யாடுவர்

பரவினாரவர் வேதம்பராய்த்துறை

அரவமார்த்த வடிகளே. மறையுமோதுவர் மான்மறிக்கையினர்

கறைகொள்கண்ட முடையவர்

பறையுஞ்சங்கு மொலிசெய்பராய்த்துறை

அறையநின்ற வடிகளே.    விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்

சடையிற்கங்கை தரித்தவர்

படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை

அடையநின்ற வடிகளே,

தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை

நெருக்கினார்விர லொன்றினால்

பருக்கினாரவர் போலும்பராய்த்துறை

அருக்கன்றன்னை யடிகளே.

நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்

தோற்றமும்மறி யாதவர்

பாற்றினார்வினை யானபராய்த்துறை

ஆற்றன்மிக்க வடிகளே.

திருவிலிச்சில தேரமணாதர்கள்

உருவிலாவுரை கொள்ளேலும்

பருவிலாலெயி லெய்துபராய்த்துறை

மருவினான்றனை வாழ்த்துமே.

செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்

செல்வர்மேற்சிதை யாதன

செல்வன்ஞானசம் பந்தனசெந்தமிழ்

செல்வமாமிவை செப்பவே".

...... ஞான சம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த