தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களிலே குழந்தை பிராயத்தில் திருவருள் பெற்று சமயம் வளர்ந்த
ஞானசம்பந்தர் துவங்கிய ஆதீனம் தான் மதுரை ஆதினம்.
292 வது மதுரை ஆதீனமாக சைவப்பிள்ளை ஆருனகிரிநாதர் பெயர் கொண்ட ஆதீனம் கர்த்தர் 77 வது வயதில் சிவலோக பதவியடைந்தார்
மதுரை ஆதினத்தின் 292-வது குருமகா சந்திதானமாக இருந்த அருணகிரிநாதர் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.தமிழகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.
மதுரையை பாண்டிய நாட்டில் ஆட்சி நடத்திய கூன் பாண்டியன் மன்னன் சமண மதத்தைத் தழுவினார் ஆதலால் அவரது ஆட்சிக்குட்பட்ட பாண்டிய நாட்டின் சமண மதமிருந்தது. சிவாலயங்களில் பூசைகள் நடைபெறவில்லை. மக்கள் மத்தியில் சிவ வழிபாடு வீழ்ச்சியுற்றுக் காணப்பட்டது. கூன்பாண்டியனின் மனைவி மானியும் என மங்கையர்க்கரசிபாக அறியப்பட்ட சைவ சமயத்தில் பற்றுக் கொண்டவர். மந்திரி குலச்சிறையாரும் சிவபக்தர். அரசியும், மந்திரியும் கலந்தாலோசித்து திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்தனர். மதுரைக்கு விஜயம் செய்த திருஞானசம்பந்தரை மந்திரி குலச்சிறையார் இம்மடத்தில் தங்கவைத்தார். சமணர்கள் சம்பந்தரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்குத் தீ வைத்தனர். சம்பந்தர் மடத்தை விட்டு வெளியில் வந்து ஆலவாய் அண்ணலை தேவாரப்பதிகப் பாடலால் வேண்டினார். நெருப்பு வெப்பு நோயாக மாறிக் கூன்பாண்டியனை வாட்டியது. சமணர்கள் மன்னனின் நோயைக் குணப்படுத்த பல முயற்சி செய்தும் பலனில்லை. திருஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடி மன்னனின் வெப்பு நோயை குணப்படுத்தினார். சமணர்கள் மீண்டும் போட்டிக்கு அழைத்தனர். அனல்வாதம், புனல்வாதம் அனைத்திலும் ஞானசம்பந்தர் வென்று கூன்பாண்டியனின் கூன் முதுகு நோயை நீக்கி நின்றசீர் நெடுமாறனாக மாற்றினார். பாண்டிய நாடும் ஆண்மீகத்தில் ஜொலிக்க
ஞானசம்பந்தப் பெருமான் சைவத்தையும், தமிழையும் மதுரையில் மீண்டும் நிலைநாட்டினார். எனும் செய்தி முழுவதும் பெரிய புராணம் அருளிய சேக்கிழார் பெருமான் சுந்தரர் அருளிய திருத்தொண்டர் தொகையிலும், நம்பியாண்டார்நம்பிகள் அருளிய திருத்தொண்டர் அந்தாதியிலும் காணப்படும் தமிழகத் திருக்கோயில் கல்வெட்டுகள் மற்றும் தேவாரப்பதிகப் பாடல்கள் ஆகியவற்றில் இவ்வரலாற்றுச் செய்தி அறியலாம்.
திருஞானசம்பந்தர் ஒழுங்குபடுத்திய மதுரை ஆதீனம் மடம், சைவ சித்தாத்தங்களை அடிப்படையாகக் கொண்ட திருமடம் தற்போது வரை 292 ஆதீனங்கள் பீடாதிபதியாக இருந்துள்ளனர். 292 ஆவதாக அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இவர் முன்னாள் மாலைமுரசு பத்திரிகையாளர். இவர் தனக்கு அடுத்ததாக 293 வது பீடாதிபதியாக தூத்துக்குடி சைவ மதம் சார்ந்த சிறுவன் முதலில் தேர்வாக பின்னர் பல குழப்பங்களை ஏற்படுத்தி பிடதி நித்யானந்தா கைப்பற்ற முயன்ற கதை பெரிது தேர்ந்தெடுப்பதாக அறிவித்தார். அதற்கு முன்னர் இவர் துறவறம் இருந்தும் அரவக்குறிச்சி ஜெய்லானி மற்றும் காலம்சென்ற முனைவர் ம.நடராஜன் உடன் பல சம்பவங்களில் உடனிருந்தவராவார். நித்யனந்தா தங்க சிம்மாசனம் கிரீடம் சூட்டி மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்றும் பட்டமளித்தார். அதில் ஆதீனம் மீது மக்களின் வெறுப்பு கூடியது நாம் கடந்த காலத்தில் இந்த ஆதீனம் மீது மதுரை ஆதீனத்தின் குட்டி ஆதீனம் கட்டுரை அவர் படித்த பிறகு அவரைச் சந்தித்து பேசியபோது அவர் பழைய நிகழ்வு மறந்து பொது நிகழ்ச்சிகளில் நமக்கு விபூதி வழங்கிய பின்னர் பேசினார் அப்போது அவர் எதையும் பெரிதாக பார்க்காத நிகழ்வு நாம் உணர்ந்து பின்னர் எங்கு பார்த்தாலும் நன்றாகப் பேசுவார். அவர் மறைவு ஞானசம்பந்தர் பெருமாள் மடத்திற்கு மட்டும் இழப்பு இல்லை தமிழ் மரபு வழி சைவத் துறவிகள் சார்ந்த ஆண்மீக இழப்பு ஈசன் நிழலில் இளைப்பாறச் சென்ற ஆதீனம் மோட்சகதி அடைய இறைவன் அருளட்டும். .
மதுரை ஆதினத்திற்குரிய மூன்று கோயில்கள் தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் உள்ளது. ஞான சம்பந்தர் திருப்பராய்த்துறை தாருகாவணேஸ்வர் பசும்பொன் மயிலாம்பிகை அம்பாளை வழிபட்டு பாடிய பதிகம். "நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை யண்ணலே.
கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல வடிகளே.
வேதர்வேதமெல் லாமுறையால்விரித்
தோதநின்ற வொருவனார்
பாதிபெண்ணுரு வாவர்பராய்த்துறை
ஆதியாய வடிகளே.
தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
நூலுந்தாமணி மார்பினர்
பாலுநெய்பயின் றாடுபராய்த்துறை
ஆலநீழ லடிகளே.
விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்
இரவினின்றெரி யாடுவர்
பரவினாரவர் வேதம்பராய்த்துறை
அரவமார்த்த வடிகளே. மறையுமோதுவர் மான்மறிக்கையினர்
கறைகொள்கண்ட முடையவர்
பறையுஞ்சங்கு மொலிசெய்பராய்த்துறை
அறையநின்ற வடிகளே. விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
சடையிற்கங்கை தரித்தவர்
படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
அடையநின்ற வடிகளே,
தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
நெருக்கினார்விர லொன்றினால்
பருக்கினாரவர் போலும்பராய்த்துறை
அருக்கன்றன்னை யடிகளே.
நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்
தோற்றமும்மறி யாதவர்
பாற்றினார்வினை யானபராய்த்துறை
ஆற்றன்மிக்க வடிகளே.
திருவிலிச்சில தேரமணாதர்கள்
உருவிலாவுரை கொள்ளேலும்
பருவிலாலெயி லெய்துபராய்த்துறை
மருவினான்றனை வாழ்த்துமே.
செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
செல்வர்மேற்சிதை யாதன
செல்வன்ஞானசம் பந்தனசெந்தமிழ்
செல்வமாமிவை செப்பவே".
...... ஞான சம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம்.
கருத்துகள்