முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநில, மத்திய அரசுகளுக்கிடையே பாலமாக இருந்து தமிழக நலன்களுக்காகப் பாடுபடுவேன் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர்

மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பாலமாக இருந்து தமிழக நலன்களுக்காகப் பாடுபடுவேன்



மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்

தமிழகத்தை மேம்படுத்துவதிலும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவதிலும், தோளோடு தோள் நின்று ஒத்துழைப்பு அளிக்க இருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கூறினார்.

சுதந்திர இந்தியாவின் 75 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், சென்னை மற்றும் சென்னை பத்தி்ரிகை தகவல் அலுவலகம் ஆகியவை இணைந்து சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள் குறித்த புகைப்படக் கண்காட்சி, கொரோனா தொடர்பான நூல் வெளியீடு, கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்  மற்றும் தமிழ்நாடு அரசின் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை  அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், “தலைசிறந்த ஆட்சியை தேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு துறைகளில் நம் நாடு வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு பிரதமராக திரு.நரேந்திர மோடி பதவியேற்ற காலத்திலிருந்து, தேசிய நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து, அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீடு போன்ற பல்வேறு மகத்தான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

உலகம் இதுவரை கண்டிராத கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியா பல்வேறு சிறப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டதன் விளைவாக கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் குறைவாக இருந்தன. குறிப்பாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மற்றும் ஊரடங்கு போன்ற சிறப்பான நடவடிக்கைகளால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது சாத்தியமானது.

நாட்டில் இதுவரை 55 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி விநியோக நடைமுறையில் மத்திய அரசு எந்த மாநிலத்தையும் பிரித்துப் பார்க்காமல் பாரபட்சமின்றி சமமாக பாவித்து தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது. அதனடிப்படையில் தடுப்பூசிகளை செலுத்துவதில் தமிழகம் முன்னோடியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், சி.எஸ்.ஆர். எனப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வின் கீழ் உள்ள நிதியின் மூலம் பொதுமக்களுக்கு தேவைப்படும் கொரோனா சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள தமிழக அரசு வகை செய்திருப்பது வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டத்தக்கது.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு அரசின் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், ”கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற 104 நாட்களில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. மத்திய அரசால் ஒதுக்கப்படும் தடுப்பூசிகளில் 25 சதவீதம் தனியார் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. அந்த தடுப்பூசிகள் அனைத்தும் முழுமையாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அந்த 25 சதவீத தடுப்பூசிகளையும் மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கினால், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் இலக்கு விரைவில் எட்டப்படும். தமிழகத்தில் நாளொன்றுக்கு 7 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த வழிவகை இருந்தும் நாள்தோறும் 2 லட்சம் தடுப்பூசிகளே செலுத்தப்பட்டு வருகின்றன. எனவே, அதிக மக்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏதுவாக மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தி வழங்கினால் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்” என்று திரு மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார்.

நிகழ்ச்சியில் தமிழக அரசின் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் திரு.ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் திரு.டி.எஸ்.செல்வ விநாயகம், யுனிசெஃப் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் தொடர்பு அதிகாரி மற்றும் பொறுப்பு அலுவலர் திரு சுகதா ராய், ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி தர்மிஷ்டானந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த 75 ஆவது சுதந்திர திருவிழா புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். கண்காட்சியை சுற்றி வந்து பார்வையிட்ட அமைச்சர்கள் அங்கு நிறுவப்பட்டிருந்த பதிப்பகத்துறையின் புத்தக விற்பனை அரங்கத்தையும் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் பதிப்பகத் துறை சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று - வரலாறு, அறிவியல் மற்றும் சமூக குறியீடுகள் பற்றிய நூல் ஒன்றை மத்திய இணையமைச்சர் திரு.எல்.முருகன் வெளியிட மாநில அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.

75 ஆவது சுதந்திர திருவிழாவை முன்னிட்டு மத்திய அரசின் சார்பில் கொண்டாடப்பட்டு வரும் அம்ரூத் மகோத்சவ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான 10 காணொலி காட்சி பொறுத்தப்பட்ட வாகனங்களை (வீடியோ வேன்) அமைச்சர்கள் இருவருமே கொடியசைத்து துவக்கி வைத்தனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்த வாகனங்களில் கொரோனா தொற்றுப் பற்றிய விழிப்புணர்வு வீடியோக்களும் இடம் பெற்றுள்ளன. இந்த வாகனங்களில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ள கொரோனா விழிப்புணர்வு கைப்பிரதிகளையும் அமைச்சர்கள் வெளியிட்டனர்.

இந்த விழாவில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் திரு.எம்.அண்ணாதுரை வரவேற்புரை வழங்கினார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென் மண்டல தலைமை இயக்குனர் திரு.எஸ்.வெங்கடேஷ்வர் விழாவுக்குத் தலைமை வகித்தார். சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குனர் திரு.ஜெ.காமராஜ் நன்றியுரையாற்றினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த