முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநில, மத்திய அரசுகளுக்கிடையே பாலமாக இருந்து தமிழக நலன்களுக்காகப் பாடுபடுவேன் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர்

மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பாலமாக இருந்து தமிழக நலன்களுக்காகப் பாடுபடுவேன்



மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்

தமிழகத்தை மேம்படுத்துவதிலும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவதிலும், தோளோடு தோள் நின்று ஒத்துழைப்பு அளிக்க இருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கூறினார்.

சுதந்திர இந்தியாவின் 75 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், சென்னை மற்றும் சென்னை பத்தி்ரிகை தகவல் அலுவலகம் ஆகியவை இணைந்து சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள் குறித்த புகைப்படக் கண்காட்சி, கொரோனா தொடர்பான நூல் வெளியீடு, கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்  மற்றும் தமிழ்நாடு அரசின் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை  அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், “தலைசிறந்த ஆட்சியை தேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு துறைகளில் நம் நாடு வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு பிரதமராக திரு.நரேந்திர மோடி பதவியேற்ற காலத்திலிருந்து, தேசிய நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து, அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீடு போன்ற பல்வேறு மகத்தான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

உலகம் இதுவரை கண்டிராத கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியா பல்வேறு சிறப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டதன் விளைவாக கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் குறைவாக இருந்தன. குறிப்பாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மற்றும் ஊரடங்கு போன்ற சிறப்பான நடவடிக்கைகளால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது சாத்தியமானது.

நாட்டில் இதுவரை 55 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி விநியோக நடைமுறையில் மத்திய அரசு எந்த மாநிலத்தையும் பிரித்துப் பார்க்காமல் பாரபட்சமின்றி சமமாக பாவித்து தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது. அதனடிப்படையில் தடுப்பூசிகளை செலுத்துவதில் தமிழகம் முன்னோடியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், சி.எஸ்.ஆர். எனப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வின் கீழ் உள்ள நிதியின் மூலம் பொதுமக்களுக்கு தேவைப்படும் கொரோனா சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள தமிழக அரசு வகை செய்திருப்பது வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டத்தக்கது.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு அரசின் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், ”கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற 104 நாட்களில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. மத்திய அரசால் ஒதுக்கப்படும் தடுப்பூசிகளில் 25 சதவீதம் தனியார் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. அந்த தடுப்பூசிகள் அனைத்தும் முழுமையாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அந்த 25 சதவீத தடுப்பூசிகளையும் மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கினால், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் இலக்கு விரைவில் எட்டப்படும். தமிழகத்தில் நாளொன்றுக்கு 7 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த வழிவகை இருந்தும் நாள்தோறும் 2 லட்சம் தடுப்பூசிகளே செலுத்தப்பட்டு வருகின்றன. எனவே, அதிக மக்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏதுவாக மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தி வழங்கினால் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்” என்று திரு மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார்.

நிகழ்ச்சியில் தமிழக அரசின் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் திரு.ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் திரு.டி.எஸ்.செல்வ விநாயகம், யுனிசெஃப் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் தொடர்பு அதிகாரி மற்றும் பொறுப்பு அலுவலர் திரு சுகதா ராய், ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி தர்மிஷ்டானந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த 75 ஆவது சுதந்திர திருவிழா புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். கண்காட்சியை சுற்றி வந்து பார்வையிட்ட அமைச்சர்கள் அங்கு நிறுவப்பட்டிருந்த பதிப்பகத்துறையின் புத்தக விற்பனை அரங்கத்தையும் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் பதிப்பகத் துறை சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று - வரலாறு, அறிவியல் மற்றும் சமூக குறியீடுகள் பற்றிய நூல் ஒன்றை மத்திய இணையமைச்சர் திரு.எல்.முருகன் வெளியிட மாநில அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.

75 ஆவது சுதந்திர திருவிழாவை முன்னிட்டு மத்திய அரசின் சார்பில் கொண்டாடப்பட்டு வரும் அம்ரூத் மகோத்சவ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான 10 காணொலி காட்சி பொறுத்தப்பட்ட வாகனங்களை (வீடியோ வேன்) அமைச்சர்கள் இருவருமே கொடியசைத்து துவக்கி வைத்தனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்த வாகனங்களில் கொரோனா தொற்றுப் பற்றிய விழிப்புணர்வு வீடியோக்களும் இடம் பெற்றுள்ளன. இந்த வாகனங்களில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ள கொரோனா விழிப்புணர்வு கைப்பிரதிகளையும் அமைச்சர்கள் வெளியிட்டனர்.

இந்த விழாவில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் திரு.எம்.அண்ணாதுரை வரவேற்புரை வழங்கினார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென் மண்டல தலைமை இயக்குனர் திரு.எஸ்.வெங்கடேஷ்வர் விழாவுக்குத் தலைமை வகித்தார். சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குனர் திரு.ஜெ.காமராஜ் நன்றியுரையாற்றினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...