முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அகதியாக இந்தியா வந்த பெண் தகவல்.

 ‘இந்தியா என்பது சொர்க்கபுரி' ஆப்கனிலிருந்து அடைக்கலம் தேடி வந்த பெண் செய்தியாளரிடம் தகவல்.


தலிபான்கள் அவரது வீட்டை எரித்து விட்டதாகவும், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பதாகவும் ஆப்கனிலிருந்து அகதியாக இந்தியா வந்த அந்நாட்டு பெண் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைபற்றிய நிலையில் ஆப்கன் பல நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் காபூலில் மட்டுமே 400 க்கும் மேற்பட்ட  சிக்கியுள்ள நபர்களை அங்கிருந்து இந்தியா அழைத்து வர தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அவர்களை மீட்க இந்திய விமானப்படையின் சி 17 விமானம் நேற்று முன்தினம் இரவு சென்ற விமானத்தில் ஏறுவதற்காக வெளியே வந்து சேர்ந்த 150 இந்தியர்களையும் தலிபான்கள் சுற்றி வளைத்துக் கொண்ட  பின்னர் அவர்கள் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியர்களை மீட்க தலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இன்று காலை 107 இந்தியர்கள் உள்பட 168 பேரை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சி-17 விமானம் காபூலிலிருந்து இந்தியா வந்த அந்த விமானத்தில் இந்தியர்கள் மட்டுமல்லாமல் ஆப்கான் மக்கள் சிலரும் அடைக்கலம் தேடி அகதிகளாக இந்தியா வந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சதியா என்பவர் குடும்பத்தினரும் இந்தியா வந்துள்ளனர்.

அவர்கள் தலிபான் தீவிரவாதிகளுடன் தங்களுக்கு ஏற்பட்ட கொடூரமான அனுபவத்தை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தலிபான்களால்  ஐந்து மணிநேரம் வரை தடுத்து வைக்கப்பட்டதாகவும், அவர்கள் தங்களது வீட்டை எரித்ததாகவும் கூறினார்.






"ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமடைந்ததனால் நான் என் மகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகளுடன் இந்தியா வந்தேன். எங்கள் இந்திய சகோதர சகோதரிகள் எங்களை மீட்டுள்ளனர். தலிபான்கள் என் வீட்டை எரித்த நிலையில். பெண்களுக்கு ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பில்லை. எங்களுக்குதவிய இந்தியாவுக்கு நன்றி. இந்தியா உண்மையிலேயே சொர்க்கபுரி தான் "என்று கூறினார். தாலிபான்களின் வருகையை சில இடதுசாரிகள் கொண்டாடுவதைப் பார்க்க முடிகிறது. இது அவர்களது பழைய அமெரிக்கா எதிர் சோவியத் மன நிலையிலிருந்து வருவது.இப்போது அது அமெரிக்கா எதிர் சீனாவாக மாறியிருக்கிறது என்று மகிழ்கிறார்கள். மேலோட்டமாக அமெரிக்காவுக்கும் சோவியத்துக்கும் சில காரணிகள் இருந்தன.சீனாவுக்கும் புதினின் ரஷ்யாவுக்கும் அதெல்லாம்  கிடையாது.ஆனால் முன்புபோல் ஒரு நாட்டுக்கு பிரச்சினைகளை உருவாக்கி பிறகு தானே  விடுவிக்கிறேன் என்ற பெயரில் பல ஆண்டுகளாக சுரண்டிவிட்டு முன்பை விட பெரிய பிரச்சினைகளிடம் அந்த நாட்டை கைவிட்டுவிட்டு  ஓடிப்போவது இம்முறை அமெரிக்காவுக்கு சாதகமாக இருக்காது என்றே தோன்றுகிறது. ரஷ்யா ஏற்கனவே அமெரிக்காவில் யார் ஆள்வது என்று தன்னால் தீர்மானிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறது.சீனா சோவியத் போன்று ஒரு செயற்கையான கூட்டமைப்பில்லை.அறிவியல்,பொருளாதாரம் போன்ற சகல துறைகளிலும் அதன் பாய்ச்சல் அமெரிக்காவை ஒரு இரண்டாம் நிலை சக்தி ஆக்கிக் கொண்டே வருகிறது. இராணுவ,அரசியல் பலமும் சேரும்போது விரைவில் அமெரிக்கா ஒரு மூன்றாம் நிலை சக்தியாகவும் வீழக் கூடுமோ. என்று மலர் அஞ்சும் நிலையில் இதுதான் அமெரிக்காவின் நிஜமான முகமாகப் பார்க்கப் படுகிறது .சோவியத்தை அழிப்பதற்காக  தாலிபன் போன்ற தீவிரவாத அமைப்புகளை உருவாக்குவார்கள்.ஆதரிப்பார்கள்.பிறகு தாலிபனை அழிக்கிறேன் என்று கொஞ்ச நாள் நடித்து மறைமுகமாக ஆப்கானிஸ்தானை ஆள்வார்கள்.பிறகு 'இது உங்கள் போர்.நாங்கள் செய்ய முடியாது'என்று ஆப்கானிஸ்தானை அதன் மக்களை இரக்கமின்றி  தாலிபானிடம் விட்டுவிட்டு ஓடுவார்கள்.வியட் நாமில்,ஈராக்கில்,ஈரானிலென்று முன்பும் இதைத்தான் செய்தார்கள்.இது பொதுவான பார்வை.ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப்படை விமானத்தில் டயர்கள் மற்றும் தொங்கி பயணம் மேற்கொள்ள முண்டியடித்த ஆப்கான் மக்கள் நிலை பார்த்தாலே உண்மை புரியும்.கதறி அழும் ஆப்கன் முஸ்லிம் பெண்கள்

சேவ் ரோஹிங்கியா, சேவ் சிரியா என்று பொங்கியவர்கள்,  குறிப்பாக பெண்களுக்கு ஆதரவாக பொங்கிய 

பெண்ணுரிமைப் போராளிகள் எங்கே?

நமது நாட்டின் உள்ளூர் பெண்ணுரிமை பற்றி பேசும் போராளிகளாகக் காட்டிக் கொள்ள முயலும் யாராவது ஆப்கான் பெண்களுக்காக கதறி அழுததை வேதனைப்பட்டுப் பார்த்துண்டா. குறைந்தது எதிர்ப்பாவது தெரிவித்தாங்களா?   இல்லை.

பெண்கள் பாதிக்கப் படுவதைவிட யாரால் பாதிக்கபடுகிறார்கள் என்பதைதான் இவர்கள் பார்ப்பார்கள். அப்படி ஒரு போராளிகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...