முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புப் பண்புகளுடன் கூடிய 35 பயிர் வகைகளை இன்று பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

பிரதமர் அலுவலகம்  சிறப்புப் பண்புகளுடன் கூடிய 35 பயிர் வகைகளை இன்று பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்


ராய்பூரில் புதிதாக கட்டப்பட்ட தேசிய உயிரியல் அழுத்த சகிப்புத்தன்மை நிறுவன வளாகத்தை பிரதமர் தேசத்திற்கு அர்ப்பணிக்கிறார்



வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு பசுமை வளாக விருதையும் பிரதமர் வழங்குகிறார்


பருவநிலை எதிர்வினை தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதற்கான மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், செப்டம்பர் 28 அன்று காலை 11 மணிக்கு அனைத்து ஐசிஏஆர் நிறுவனங்கள், மாநில மற்றும் மத்திய வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் கிரிஷி விக்யான் கேந்திரங்களில் நடைபெறவுள்ள அகில இந்திய நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு பண்புகளுடன் கூடிய 35 பயிர் வகைகளை காணொலி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்


​​தேசிய உயிரியல் அழுத்த சகிப்புத்தன்மை நிறுவனம், ராய்ப்பூருக்காக புதிதாக கட்டப்பட்ட வளாகத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு பசுமை வளாக விருதை பிரதமர் வழங்குவார், மேலும் புதுமையான முறைகளைப் பயன்படுத்தும் மற்றும் விவசாயிகளுடனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வோரிடமும் அவர் உரையாடுகிறார்.


இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண் அமைச்சரும், சத்திஸ்கர் முதலமைச்சரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

சிறப்பு பண்புகள் கொண்ட பயிர் வகைகள் பற்றி பருவநிலை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய இரட்டை சவால்களை எதிர்கொள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் (ஐசிஏஆர்) சிறப்புப் பண்புகளைக் கொண்ட பயிர் வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பருவநிலை எதிர்வினை மற்றும் அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கம் போன்ற சிறப்புப் பண்புகளைக் கொண்ட முப்பத்தைந்து பயிர் வகைகள் 2021-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளன.

வறட்சியைத் தாங்கும் கொண்டைக்கடலை வகைகள், வில்ட்,  ஸ்டீரிலிட்டி மொசைக் எதிர்ப்பு பிஜியன் கடலை, சீக்கிரம் விளையும் சோயாபீன், நோய் எதிர்ப்பு அரிசி மற்றும் செரிவூட்டப்பட்ட கோதுமை வகைகள், முத்து தினை, மக்காச்சோளம் மற்றும் கொண்டைக்கடலை, குயினோவா, பக்வீட், விங்க்ட் பீன் மற்றும் ஃபாபா பீன் ஆகியவை இதில் அடங்கும். 

சில பயிர்களில் காணப்படும் மனித மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஊட்டச்சத்து எதிர்ப்பு காரணிகளை நிவர்த்தி செய்யும் வகைகளும் இந்த சிறப்பு பண்புகள் பயிர் வகைகளில் அடங்கும். அத்தகைய வகைகளின் எடுத்துக்காட்டுகளில் பூசா டபுள் ஜீரோ கடுகு 33, முதல் கனோலா தர கலப்பின ஆர்சிஎச் 1 <2% எரூசிக் அமிலம் மற்றும் <30 பிபிஎம் குளுக்கோசினோலேட்டுகள் மற்றும் இரண்டு ஊட்டச்சத்து எதிர்ப்பு காரணிகளான குனிட்ஸ் ட்ரிப்சின் இன்ஹிபிட்டர் மற்றும் லிபோக்சிஜனேஸ் ஆகியவை இல்லாத சோயாபீன் வகை ஆகியவை அடங்கும். சோயாபீன், சோளம் மற்றும் பேபி கார்ன் போன்றவற்றில் சிறப்புப் பண்புகளைக் கொண்ட பிற வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தேசிய உயிரியல் அழுத்த மேலாண்மை நிறுவனம் பற்றி

உயிரியல் அழுத்தங்களில் அடிப்படை மற்றும் மூலோபாய ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கும், மனித வளத்தை மேம்படுத்துவதற்கும் கொள்கை ஆதரவை வழங்குவதற்கும் ராய்ப்பூரில் உள்ள தேசிய உயிரியல் அழுத்த மேலாண்மை நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. 2020-21 கல்வியாண்டில் இருந்து முதுநிலை படிப்புகளை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

பசுமை வளாக விருதுகள் பற்றி

மாநில மற்றும் மத்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களை மேலும் பசுமையாகவும் தூய்மையாகவும் பேணும் நடைமுறைகளை ​​ஊக்குவிப்பதற்காக பசுமை வளாக விருதுகள் தொடங்கப்பட்டது, மேலும், தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் குப்பையில் இருந்து வளம் இயக்கம் ஆகியவற்றில் ஈடுபட  மாணவர்களை இது தூண்டுகிறது. மற்றும் தேசிய கல்வி கொள்கை-2020-ன் படி சமூக இணைப்புகளையும் இது ஏற்படுத்துகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த