முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கர்நாடகாவின் தேவநகரேவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் தொடங்கி வைத்தார்

உள்துறை அமைச்சகம் கர்நாடகாவின் தேவநகரேவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்



மொத்தம் ரூ 50 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கர்நாடகாவின் தேவநகரேவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.

காந்தி பவன், காவல் பொதுப் பள்ளி மற்றும் ஜி எம் தொழில்நுட்ப நிறுவனத்தின் மைய நூலகத்தை அவர் திறந்து வைத்தார். விடுதலைப் போராட்ட வீரர்களை கவுரவித்த அவர், நாட்டின் சுதந்திர போராட்டத்தில் அவர்களின் மதிப்புமிக்க பங்குக்காக நன்றி தெரிவித்தார். கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் எஸ் பொம்மை மற்றும் இதர பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர், கடந்த இரு வருடங்களாக இந்தியாவும், உலகமும் பெருந்தொற்றை எதிர்கொண்டு வருவதாக கூறினார். ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே கொவிட்-19 பெருந்தொற்று பெரிய சவால்களை விடுத்த போதிலும், கொவிட்டுக்கு எதிரான போரை பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா சிறப்பாகவும், வலுவுடனும் எதிர்கொண்டதாகவும், தற்போது கொவிட்டில் இருந்து நாம் கிட்டத்தட்ட வெளியே வந்து விட்டோம் என்றும் அவர் கூறினார்.

கொவிட்டுக்கு எதிரான போரை கர்நாடகா சிறப்பாக மேற்கொண்டதாகவும், 5 கோடியே 20 லட்சம் பேருக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் திரு அமித் ஷா கூறினார். இவர்களில் 4 கோடி பேருக்கு முதல் டோசும், 1.16 கோடி பேருக்கு இரண்டாவது டோசும் வழங்கப்பட்டுள்ளன. முதல்வர் திரு பசவராஜ் பொம்மையின் தலைமையின் கீழ் செப்டம்பர் இறுதிக்குள் 90 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இது ஒரு மிகப்பெரிய சாதனை என்றும், மக்களுடன் இணைந்து அரசு பணிபுரிந்தால் சாதனைகளை புரியலாம் என்பதற்கான எடுத்துக்காட்டு என்றும் அவர் கூறினார்.

ஏழைகள், பின்தங்கியோர் மற்றும் பழங்குடியினரை பற்றியே பிரதமர் திரு நரேந்திர மோடி எப்போதும் சிந்தித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். கொவிட்-19 பெருந்தொற்று நாட்டின் ஏழைகளை மிகவும் பாதித்து, தினக்கூலிகள் ஒரு வேளை உணவுக்கே சிரமப்பட்ட நிலையில், மே முதல் நவம்பரில் தீபாவளி வரை ஒவ்வொருவருக்கும் 5 கிலோ இலவச உணவு தானியங்களை முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது திரு நரேந்திர மோடி அரசு வழங்கியது. நாட்டிலுள்ள 80 கோடி மக்களுக்கு 10 மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக திரு மோடி அரசு வழங்கியது என்று திரு ஷா கூறினார்.

பெருந்தொற்றுக்கு எதிரான போரில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்ததாகவும், ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெண்களும் குழந்தைகளும் பசியோடு உறங்கக்கூடாது என்பதை பிரதமர் உறுதி செய்ததாகவும் அவர் கூறினார்.

மூன்றாம் அலை வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒவ்வொரு மாநிலம், மாநகரம் மற்றும் நகரமும் கொவிட்-19-க்கு எதிரான போரை மேற்கொள்ளும் வகையில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்பிலான தொகுப்புகளை பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கொவிட்-19-க்கு எதிரான போரில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதே வெற்றியின் சூத்திரம் என்று கூறிய திரு அமித் ஷா, போதுமான அளவில் தடுப்பு மருந்துகள் விநியோகம் செய்யப்படுவதை இந்திய அரசு உறுதி செய்து வருவதாகவும் கூறினார்.

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751501

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...