சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தேசிய அறக்கட்டளைச் சட்டம், 1999-ஐ அமல்படுத்துவதற்கு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் அதிகாரிகள், இதர தரப்பினருடன் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆலோசனை
தேசிய அறக்கட்டளைச் சட்டத்தை, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்துவதற்காக, தேசிய அறக்கட்டளை அமைப்பு, மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாடு அமைச்சகத்தின் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத்துறை ஆகியவை ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. மன இறுக்கம், பெருமூளை வாதம், மனவளர்ச்சி குறைபாடு மற்றும் பல குறைபாடுகள் உடையோரின் நலனுக்காக தேசிய அறக்கட்டளை அமைப்பு செயல்படுகிறது. இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் அரசு அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள், பெற்றோர்கள், நிபுணர்கள் பங்கேற்றனர்.
தேசிய அறக்கட்டளையின் செயல்பாடுகளை அமல்படுத்தும் திட்டங்களை உருவாக்குவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, முதல்முறையாக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது
இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநரின் ஆலோசகர் திரு. பரூக் அகமது கான் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். ஜம்மு காஷ்மீர் சமூக நலத்துறைச் செயலாளர் திருமிகு ஷீத்தல் நந்தா, தேசிய அறகட்டளை அமைப்பின் தலைவர் திருமிகு அஞ்சலி பாவ்ரா உட்பட 167 பேர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய துணை நிலை ஆளுநரின் ஆலோசகர் திரு பரூக் அகமது கான், தனித்துவமான இந்தக் கூட்டத்தை நடத்த மேற்கொண்ட முயற்சிக்காக யூனியன் பிரதேச நிர்வாகத்தையும், தேசிய அறக்கட்டளை அமைப்பையும் பாராட்டினார். மாற்றுத்திறனாளிகளின் விஷயங்களைக் கையாள்வதில், மிகவும் உணர்வுப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
திருமிகு அஞ்சலி பாவ்ரா ஐஏஎஸ் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்காக அமல்படுத்தப்படும் அரசுத் திட்டங்கள் அல்லது தேசிய அறக்கட்டளைத் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுவதன் அவசியத்தை எடுத்துக் கூறினார். அப்போது தான், அதிகளவிலான பயன்கள் மாற்றுத்திறனாளிகளைச் சென்றடையும் என அவர் கூறினார்.
தேசிய அறக்கட்டளை அமைப்பின் இணைச் செயலாளர் திரு. நிகுன்ஜா கிஷோர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகள் தொடர்பான இணையக் கருத்தரங்குகளை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் அதிகாரிகள் தங்கள் யூனியன் பிரதேசங்களில் நடத்த வேண்டுமென வலியுறுத்தினார்
கருத்துகள்