முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகியது பாமக உண்மை காரணமென்ன

உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்தே போட்டியிடுமென அதன் தலைவர்  அறிவித்ததன் மூலம் அதிமுக-பாஜக கூட்டணியிலிருந்து பா.ம.க. வெளியேறி தனித்துப் போட்டியிடும் நிலையிலுள்ளது.


தமிழகத்திலுள்ள ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. பெரும்பாலானவை தமிழகத்தில் வடக்குப் பகுதியிலுள்ள மாவட்டங்களாகும்..

ஜாதிச் செல்வாக்கு உள்ள மாவட்டங்களில் பா.ம.க.வின் நிலைப்பாடு  எதிர்பார்ப்புக்குரியதாக இருந்தது. அதிமுக-பாஜக கூட்டணியில் பா.ம.க. இருந்ததால் அந்த அணிக்கு வாய்ப்பு உண்டு எனக் கணிக்கப்பட்ட நிலையில் ஆளும் கட்சி திமுக இருப்பதால் அதன் கூட்டணியும் முழு பலத்தைக் காட்டுமென் நினைத்த நிலையில் பா.ம.க.  அதிமுக-பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகவும் அதற்கான விருப்ப மனுக்கள் இன்று முதல் பெறப்படுகிறது என்றும் பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி அறிவித்திருக்கிறார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக தேர்தல் கள வரலாற்றில் பா.ம.க. தனித்துப் போட்டியிட தொடங்கி பின்னர் அவர்கள் வாக்கு வங்கியில் மாற்றமோ  முன்னேற்றமோ இல்லை. அதற்கு அதன் கொள்கை மாறுபட்ட காரணமும் உண்டு. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணி என்கிற வகையில் தான் பா.ம.க. செயல்படுகிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் விமர்சனம். இதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் இப்போதைய தனித்துப் போட்டி அறிவிப்பும் பார்க்கப்படுகிறது.


முதலில் தனித்துப் போட்டி வன்னியர்கள் சங்கமாக இருந்து1989 ஆம் ஆண்டு பா.ம.க.வாக  தொடங்கப்பட்டது. அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சுமார் 16 லட்சம் வாக்குகளைப் பெற்ற பின்னர் அனைத்துக் கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 1991 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும்  தனித்தே போட்டியிட்டு பன்ருட்டி  தொகுதியில் யானை சின்னத்தில் வென்றது. அக்கட்சியின் முதல் எம்.எல்.ஏ.வாக பண்ருட்டி ராமச்சந்திரன் யானை மீது ஊர்வலமாக சட்டசபைக்குள் நுழைந்தார்.



1996 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மதிமுக, சி.பி.எம், வாழப்பாடியாரின்  காங்கிரஸ் என மூன்றாவது அணிக்கு முயற்சித்தது. அதில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களாக பேராசிரியர் தீரன் பென்னாகரம் மணி, எடப்பாடி கணேசன்.தாரமங்கலம் கோவிந்தன். உள்ளிட்டவர்களை உறுப்பினராகப் பெற்ற நிலையில் 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக அதிமுக-பாஜக அணியில் பா.ம.க. இடம்பெற்றது வென்று வாஜ்பாய் அரசை கவிழ்ந்த நிலையில் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற  தேர்தலில் முதல் முறையாக திமுகவுடன் கூட்டனி அமைத்தது பா.ம.க. 2001 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மீண்டும் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் இடம் பெற்ற பா.ம.க.  இந்தக் கூட்டணியிலும் நீடிக்காமல் முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுடன் டாக்டர் ராமதாஸ் நடத்திய மோதல்.


இதையடுத்து 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் தேர்தல், 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியிலேயே தொடர்ந்து வந்த பா.ம.க. 2009 ஆம் ஆண்டு  தேர்தலில் அதிமுக, மதிமுக, இடதுசாரிகள் அமைத்த கூட்டணியில் பா.ம.க.வும் சேர்ந்தது. 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போது மீண்டும் திமுக கூட்டணிக்கு திரும்பிய பா.ம.க, 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் போனது. 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி முழக்கத்துடன் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளரென அறிவித்துத் தனித்துப் போட்டியிட்டு படு தோல்வியைச் சந்தித்ததுடன் தென் மாவட்டங்களில் நோட்டாவிடம் தோற்ற கதையும் உண்டு.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் நடந்து முடிந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அதிமுக கூட்டணியில்   இடம்பெற்ற பா.ம.க. ஐந்து எம்.எல்.ஏக்களையும் பெற்றது அந்தக் கட்சி. இருந்த போதும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லை என அண்மையில் பிரகடனம் செய்திருந்த டாக்டர் ராமதாஸ். அப்போதே. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதல் அந்த கட்சியுடன் நெருக்கம் காட்டி வந்ததும்  பா.ம.க. இதனால் திமுக அணிக்குச் செல்லக் கூடுமெனக் கூறப்பட்ட நிலையில்  அதிமுக- பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளது அக்கட்சி. அதன்பின் உள்ள காரணங்கள் பல என்றாலும் நாமறிந்த வரை உண்மை வேறுவிதமாகும். உடைந்தது அதிமுக கூட்டணி

பாமக தனித்துப் போட்டி. என பாமக அதிமுக வுடனான கூட்டணியை மட்டும் முறிக்கவில்லை அதிமுக தலைமையிலான கூட்டணியிலிருந்தே தங்களை விலக்கிக் கொண்டுள்ளனர் இதன் பின்னனி ரொம்ப சுலபமாக கூறலாம். டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீதான மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் மருத்துவக் கல்லூரி களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கின் முக்கிய சாட்சிகள் மூன்று பேர் ஒருவர் ஷீலா மதானி மற்றொருவர் துவாரகேஷ் மடோன்கர் பிரிதொருவர் நிதிஷ் பட்டேல்.... இதில் நிதிஷ் படேல் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவுல சேர்ந்து தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார், ஷீலாவோ பூனேயில் கடந்த வாரம் கொரோனாவால் மரணமடைந்தார், துவாரகேஷ் என்பவர் பட்நவீஸோட ஆளு இப்போ உத்தவ் தாக்ரே விடம் சரண்டர் ஆக டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கில் சாட்சியே இல்லை என்ற நிலையில் தற்போது ஒரு பழமொழி புலிவாலைப் பிடித்த நாயர் கதை போல் உண்டு  மற்றொரு தகவலாக 'புலியோட கழுத்துல காலை வெச்சிட்டே உன் கால் புலியோட கால்ல இருந்து விடுபடுகிற நேரம் உனக்கு சங்கு தான்' என்பது புதுமொழி இப்போ பாஜக விடமிருந்து பாமக விலகிவிட்டார்கள்... ஆக இனிமேல் தான் நார்த் தமிழ்நாட்டுல பாமக வின் ஆட்டம் ஆரம்பம். நேத்தே தர்மபுரி பாஜக ஆஃபிஸ் க்கு பக்கத்துலயே பீப் ப்ரை கடை போட்டுட்டாங்கனு தகவல் எந்த வன்னியர் சமுதாயம் இருக்குனு ஓவரா ஆட்டம் போட்ட வட தமிழக சங்கிகளை வன்னியர்கள் பொளந்து கட்டுவாங்க இனி.... ஏன்னா புலியோட கழுத்துல இருந்து பாஜக கால எடுத்துடுச்சி.. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவினருடன் பாஜக கூட்டணி இப்போ அது  9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்ல விழுப்புரத்துல  பழனிசாமியின் அதிமுக வாங்கப் போகும் வாக்கு வங்கி நோட்டாவுடன் போட்டியிட்டு வரலாறு பேசும் நிலை தான் போங்கோ....

மக்களை குழப்புவதற்காகவும் மூன்றாவதாக ஒரு அணி உருவாக வாய்ப்பினைத் தரக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.

முட்டுக் கொடுத்த கட்டை விலகியது. இது அதிமுக கூட்டணியில் அவர்களின் வாழ்வா சாவா போராட்டம். நான்காண்டுகளாகத்தன்னை  ஜெயலலிதா எம்ஜிஆரோடு ஒப்பிட்டு கற்பனை விடை காணும் நாள் விரைவில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த