முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகியது பாமக உண்மை காரணமென்ன

உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்தே போட்டியிடுமென அதன் தலைவர்  அறிவித்ததன் மூலம் அதிமுக-பாஜக கூட்டணியிலிருந்து பா.ம.க. வெளியேறி தனித்துப் போட்டியிடும் நிலையிலுள்ளது.


தமிழகத்திலுள்ள ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. பெரும்பாலானவை தமிழகத்தில் வடக்குப் பகுதியிலுள்ள மாவட்டங்களாகும்..

ஜாதிச் செல்வாக்கு உள்ள மாவட்டங்களில் பா.ம.க.வின் நிலைப்பாடு  எதிர்பார்ப்புக்குரியதாக இருந்தது. அதிமுக-பாஜக கூட்டணியில் பா.ம.க. இருந்ததால் அந்த அணிக்கு வாய்ப்பு உண்டு எனக் கணிக்கப்பட்ட நிலையில் ஆளும் கட்சி திமுக இருப்பதால் அதன் கூட்டணியும் முழு பலத்தைக் காட்டுமென் நினைத்த நிலையில் பா.ம.க.  அதிமுக-பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகவும் அதற்கான விருப்ப மனுக்கள் இன்று முதல் பெறப்படுகிறது என்றும் பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி அறிவித்திருக்கிறார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக தேர்தல் கள வரலாற்றில் பா.ம.க. தனித்துப் போட்டியிட தொடங்கி பின்னர் அவர்கள் வாக்கு வங்கியில் மாற்றமோ  முன்னேற்றமோ இல்லை. அதற்கு அதன் கொள்கை மாறுபட்ட காரணமும் உண்டு. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணி என்கிற வகையில் தான் பா.ம.க. செயல்படுகிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் விமர்சனம். இதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் இப்போதைய தனித்துப் போட்டி அறிவிப்பும் பார்க்கப்படுகிறது.


முதலில் தனித்துப் போட்டி வன்னியர்கள் சங்கமாக இருந்து1989 ஆம் ஆண்டு பா.ம.க.வாக  தொடங்கப்பட்டது. அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சுமார் 16 லட்சம் வாக்குகளைப் பெற்ற பின்னர் அனைத்துக் கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 1991 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும்  தனித்தே போட்டியிட்டு பன்ருட்டி  தொகுதியில் யானை சின்னத்தில் வென்றது. அக்கட்சியின் முதல் எம்.எல்.ஏ.வாக பண்ருட்டி ராமச்சந்திரன் யானை மீது ஊர்வலமாக சட்டசபைக்குள் நுழைந்தார்.



1996 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மதிமுக, சி.பி.எம், வாழப்பாடியாரின்  காங்கிரஸ் என மூன்றாவது அணிக்கு முயற்சித்தது. அதில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களாக பேராசிரியர் தீரன் பென்னாகரம் மணி, எடப்பாடி கணேசன்.தாரமங்கலம் கோவிந்தன். உள்ளிட்டவர்களை உறுப்பினராகப் பெற்ற நிலையில் 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக அதிமுக-பாஜக அணியில் பா.ம.க. இடம்பெற்றது வென்று வாஜ்பாய் அரசை கவிழ்ந்த நிலையில் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற  தேர்தலில் முதல் முறையாக திமுகவுடன் கூட்டனி அமைத்தது பா.ம.க. 2001 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மீண்டும் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் இடம் பெற்ற பா.ம.க.  இந்தக் கூட்டணியிலும் நீடிக்காமல் முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுடன் டாக்டர் ராமதாஸ் நடத்திய மோதல்.


இதையடுத்து 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் தேர்தல், 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியிலேயே தொடர்ந்து வந்த பா.ம.க. 2009 ஆம் ஆண்டு  தேர்தலில் அதிமுக, மதிமுக, இடதுசாரிகள் அமைத்த கூட்டணியில் பா.ம.க.வும் சேர்ந்தது. 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போது மீண்டும் திமுக கூட்டணிக்கு திரும்பிய பா.ம.க, 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் போனது. 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி முழக்கத்துடன் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளரென அறிவித்துத் தனித்துப் போட்டியிட்டு படு தோல்வியைச் சந்தித்ததுடன் தென் மாவட்டங்களில் நோட்டாவிடம் தோற்ற கதையும் உண்டு.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் நடந்து முடிந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அதிமுக கூட்டணியில்   இடம்பெற்ற பா.ம.க. ஐந்து எம்.எல்.ஏக்களையும் பெற்றது அந்தக் கட்சி. இருந்த போதும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லை என அண்மையில் பிரகடனம் செய்திருந்த டாக்டர் ராமதாஸ். அப்போதே. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதல் அந்த கட்சியுடன் நெருக்கம் காட்டி வந்ததும்  பா.ம.க. இதனால் திமுக அணிக்குச் செல்லக் கூடுமெனக் கூறப்பட்ட நிலையில்  அதிமுக- பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளது அக்கட்சி. அதன்பின் உள்ள காரணங்கள் பல என்றாலும் நாமறிந்த வரை உண்மை வேறுவிதமாகும். உடைந்தது அதிமுக கூட்டணி

பாமக தனித்துப் போட்டி. என பாமக அதிமுக வுடனான கூட்டணியை மட்டும் முறிக்கவில்லை அதிமுக தலைமையிலான கூட்டணியிலிருந்தே தங்களை விலக்கிக் கொண்டுள்ளனர் இதன் பின்னனி ரொம்ப சுலபமாக கூறலாம். டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீதான மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் மருத்துவக் கல்லூரி களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கின் முக்கிய சாட்சிகள் மூன்று பேர் ஒருவர் ஷீலா மதானி மற்றொருவர் துவாரகேஷ் மடோன்கர் பிரிதொருவர் நிதிஷ் பட்டேல்.... இதில் நிதிஷ் படேல் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவுல சேர்ந்து தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார், ஷீலாவோ பூனேயில் கடந்த வாரம் கொரோனாவால் மரணமடைந்தார், துவாரகேஷ் என்பவர் பட்நவீஸோட ஆளு இப்போ உத்தவ் தாக்ரே விடம் சரண்டர் ஆக டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கில் சாட்சியே இல்லை என்ற நிலையில் தற்போது ஒரு பழமொழி புலிவாலைப் பிடித்த நாயர் கதை போல் உண்டு  மற்றொரு தகவலாக 'புலியோட கழுத்துல காலை வெச்சிட்டே உன் கால் புலியோட கால்ல இருந்து விடுபடுகிற நேரம் உனக்கு சங்கு தான்' என்பது புதுமொழி இப்போ பாஜக விடமிருந்து பாமக விலகிவிட்டார்கள்... ஆக இனிமேல் தான் நார்த் தமிழ்நாட்டுல பாமக வின் ஆட்டம் ஆரம்பம். நேத்தே தர்மபுரி பாஜக ஆஃபிஸ் க்கு பக்கத்துலயே பீப் ப்ரை கடை போட்டுட்டாங்கனு தகவல் எந்த வன்னியர் சமுதாயம் இருக்குனு ஓவரா ஆட்டம் போட்ட வட தமிழக சங்கிகளை வன்னியர்கள் பொளந்து கட்டுவாங்க இனி.... ஏன்னா புலியோட கழுத்துல இருந்து பாஜக கால எடுத்துடுச்சி.. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவினருடன் பாஜக கூட்டணி இப்போ அது  9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்ல விழுப்புரத்துல  பழனிசாமியின் அதிமுக வாங்கப் போகும் வாக்கு வங்கி நோட்டாவுடன் போட்டியிட்டு வரலாறு பேசும் நிலை தான் போங்கோ....

மக்களை குழப்புவதற்காகவும் மூன்றாவதாக ஒரு அணி உருவாக வாய்ப்பினைத் தரக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.

முட்டுக் கொடுத்த கட்டை விலகியது. இது அதிமுக கூட்டணியில் அவர்களின் வாழ்வா சாவா போராட்டம். நான்காண்டுகளாகத்தன்னை  ஜெயலலிதா எம்ஜிஆரோடு ஒப்பிட்டு கற்பனை விடை காணும் நாள் விரைவில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...