முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டில் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என சட்டம் வந்தால் தான் ஏழை மாணவர்களுக்கும் மருத்துவக் கனவு பழிக்கும்.

தமிழ்நாட்டில் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என சட்டம் வந்தால்  தான் ஏழை மாணவர்களுக்கும் மருத்துவக் கனவு பழிக்கும். நல்ல மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு அரசாங்கமே செலவு செய்து படிக்கவும் வைக்கலாம்.


குறிப்பாக பல லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களின் மூலம் சில கோச்சிங் சென்டர்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம் பார்க்கின்றன. பண வசதியுள்ள மாணவர்கள் ஒரே சமயத்தில் இரண்டு கோச்சிங் சென்டர்களில் பயில்கிறார்கள். இந்த ஆண்டு நீட் தேர்வில் பெற்ற மாணவர்களில் சிலரை, டில்லியிலுள்ள இரண்டு கோச்சிங் சென்டர்கள் சொந்தம் கொண்டாடி விளம்பரப்படுத்தியுள்ள நிலையில். கோச்சிங் சென்டர்களிடமிருந்து சிலருக்கு நன்கொடைகளும் செல்வதால் தகவல்  வருகின்றன.



இதிலிருந்து புரிந்துகொள்ளலாம் எதற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதென்று. இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் பாலிடெக்னிக், பி.ஏ., பி.எஸ்சி உள்ளிட்ட அனைத்துப் படிப்புளுக்கும் நீட் தேர்வு கட்டாயமென சொல்லப்பட்டுள்ளது. இது மாணவர்களின் எதிர்காலத்தை இருட்டுக்குள் தள்ளுவதாகும். கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பெரும் தொகையைச் செலவு செய்து, கோச்சிங் சென்டர்களில் பயின்றால்தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் தற்போது ஊருக்கு ஊர் ஆயிரக்கணக்கான கோச்சிங் சென்டர்கள் உருவெடுத்துள்ளது. மக்களின் பணம் கோடிக்கணக்காகக் கொள்ளையடிக்கப்படும்



.     நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத மாணவர்களின் எதிர்காலம் பள்ளிப் படிப்போடு பாதியிலேயே நின்று போகிறது ஆனால் பணவசதி படைத்த சேவை இல்லாத மருத்துவம் பார்த்து பல கோடியை வாரிப்போட்ட மருத்துவர்கள் மகன் பேரன் என குடும்ப உறுப்பினர்கள் எல்லாம். மருத்துவராக்க முடியும் ஆனால் ஒரு கிராமத்தில் விவசாயக் கூலி மகன் நிலை மருத்துவக்கல்லூரி கல்விக் கனவு  நீட் தேர்வு எப்படி கலைந்து போகிறது என்பதை உணர்த்த ஒரு சம்பவத்தை இங்கு பார்க்கலாம்.



இதுவே சாமானிய நடுத்தர வர்க்கம் சார்ந்த மக்கள் இந்த நீட் தேர்வு எதிர்க்கும் காரணமாக அமைகிறது. மக்கள் ஏன் தமிழகத்தில் விழிப்புணர்வு கொண்டு எதிர்கொள்வதற்கு இதுவே முக்கிய காரணம். இதை பி ஜே பி புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் மக்கள் அக் கட்சியை சுத்தமாக ஆதரவு இல்லை என்ற நிலை 2018 ஆம் ஆண்டு  நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி கீர்த்தனா,  இவர் 12 ஆம் வகுப்பு 2016 ஆம் ஆண்டு முடித்தார், இரண்டு ஆண்டுகளாக வடபழனி ஆகாஷ் நீட் பயிற்சி வகுப்பில் படித்துவந்தார், முதல் ஆண்டு 6 லட்சம் அடுத்த ஆண்டு 6 லட்சம் இவரது தாய் தந்தை இருவருமே மருத்துவர்கள்.

இவருக்காகவும் இவருடன் படித்த பெங்களூருவைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவரின் உறவினர் மகளுக்காகவும் ஹைதராபாத்தில் இருந்து புரோமெட்ரின் கன்சல்டன் உறுப்பினர்கள் வந்து பாடம் எடுத்தனர், இந்த புரோமெட்ரிக் தான் நீட் தேர்விற்கான கேள்வித்தாள் தயார் செய்கிறது. 


அவர்கள் வாரம் மூன்றுநாள் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்து நட்சத்திர ஓட்டலில் தங்கி பாடம் எடுத்துச் செல்வார்கள். இவர்கள் தங்க வந்து செல்வதற்கான கட்டணமும் இந்த இரண்டு மாணவிகளிடமிருந்துதான் வசூலிக்கப் பட்டது, அதாவது ஒரு மாணவி  குறைந்த பட்சம் 25 லட்சம் வரை செலவழித்து நீட் தேர்வு எழுதியுள்ளனர் தேர்வானார்.   இந்த நிலை சாமானிய மக்களால் முடியாது என்பதே நீட் தேர்வு குறித்த ஆய்வுகள் செய்ய நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி இராஜன் தலைமையிலான குழு அறிக்கையாக வந்த நிலையில் தமிழ்நாடு அரசின் முயற்சி பலன் தந்தால் நல்லது இல்லை வீட்டிற்கு ஒருவர் மட்டுமே மருத்துவம் படிக்க சட்டம் இதுவே தீர்வாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...