முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்படத்தின் சிறப்புக் காட்சி பார்த்த கட்சிப் பிரமுகர்களின் ருத்ர தாண்டவம் .

திரைப்படத்தின் சிறப்புக் காட்சி பார்த்த கட்சிப் பிரமுகர்களின் ருத்ர தாண்டவம் .


சென்னைக்கு போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளராக வரும் ருத்ர பிரபாகரன் (ரிச்சர்ட்) போதை கடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்ததனால் கோபமான கௌதம் மேனன் அவரைக் காவல் துறையில் இருந்து சூழ்ச்சியால் விரட்டுவதும்.  ஜாதி வெறியனென மக்கள் மத்தியில் நாயகனை அவமானப்படுத்தும் கௌதம் மேனன்.


அதன் தொடர்ச்சியாக படத்தின் கதைக்களம்.




திரௌபதி இயக்குனர் ஜி.மோகனின் இயக்கத்தில் உருவான  ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை


தமிழக பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் எச்.ராஜா பார்த்து ரசித்து. செய்தியாளர்களிடம் பல சிறிய கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து கூறும்போது சீமான், சுப.வீரபாண்டியன், இயக்குநர் ரஞ்சித் ஆகியோரை நேரடியாகவும், திருமாவளவனை மறைமுகமாகவும் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து பேசிய இவரது பேச்சுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பும் ஆதரவும் வெளிப்பட்டது. தொடர்பாக நல்ல விளம்பரம் ருத்ர தாண்டவம்  திரைப்படத்திற்கு  கிடைத்த நிலையில்.






தமிழில் நடிகர் ரிஷி ரிச்சர்ட், இயக்குநர் கௌதம் மேனன், தர்ஷா குப்தா, இராதாரவி ஆகியோர் நடிப்பில் ருத்ரதாண்டவம் என்கிற திரைப்படத்தை மோகன் இயக்கியுள்ளார்.  அக்டோபர் மாதம் முதல் தேதி திரைக்கு வருகிறது. திரௌபதி போலவே பரபரப்பை ஏற்படுத்திய படத்தின் சிறப்புக் காட்சி சில அரசியல் கட்சிகளுக்கு போட்டுக் காட்டப்பட்டது.

 தமிழக பாஜக பிரமுகர் எச்.ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் திருமாறன் உள்ளிட்டவர்கள் பார்த்து அதன் பின் அணைவரும் கூட்டாக எச்.ராஜாவுடன்  செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில் கூறியதாவது:

இயக்குநர் ஜி.மோகன் இயக்கத்தில் உருவான ருத்ரதாண்டவம் படத்தில் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல. ஒரு முக்கியக் கருத்தை மக்களுக்கு சொல்வதாக உள்ளது.



சட்டரீதியாக 18 வயதுக்கு முன்பு வருவது காதலல்ல. அது ஒரு ஈர்ப்பு. படிக்கும் குழந்தைகள் படிப்பில் மட்டும் தான் கவனம் செலுத்த வேண்டும் காதலிலல்ல. இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பனாக எனக்கும் அந்தக் கவலை இருக்கிறது.

இளைஞர்கள் அதிக அளவில் போதைக்கு அடிமையாகி வருகின்றனர் என்பதை இந்தப் படம் சுட்டிக்காட்டியுள்ளது. அதேப்போன்று குடும்பக் கட்டுப்பாடு கடந்த காலத்தில் அதிகமாக   நடந்த நிலையில் முக்கோணச் சின்னம் பிரபலமான நிலை ஆனால் தற்போது செயற்கை கருத்தரிப்பு மையங்கள்  அதிகரித்துள்ளன.


நாளை ஒருவேளை தமிழ் ஆண் மகன் தன் மனைவிக்கு குழந்தை பெற்றுக்கொடுக்க முடியாத நிலை உருவாகும். அதற்குக் குடியும், போதையும் தான் காரணம். சரக்கு மிடுக்கு பேச்சு மூலம் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து சாதி பிரச்சனையை உருவாக்குபவர்களை இந்தத் திரைப்படம் எச்சரித்துள்ளது.

என்னிடம் கேள்வி கேட்கும் பலருக்கு தமிழ் மொழியை சரியாக உச்சரிக்கக் கூடத் தெரியவில்லை. அப்படிபட்டவர்கள் தான் என்னைக் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் தான் தமிழ் ஆர்வலர்கள் எனவும் கூறிக்கொள்கிறார்கள்.

தமிழ் வேற, ஹிந்து வேறு அல்ல. ஊடகங்கள் மதமாற்றத்திற்குத் துணை போக வேண்டாம். இந்து மதமில்லாமல் தமிழ் இல்லை. மேலும் ஒரு கேள்வி வரவே ... சீற்றமாகி சீமான் தமிழரா? சீமான் அம்மா தமிழச்சியா? அவர் மலையாளி. ஆனால், என்னை பீஹாரி என்கிறான் ஒரு அடிமுட்டாள். நான் பச்சை தஞ்சாவூர்காரன்.

மற்றொரு கேள்விக்கு

ஆரியம் பற்றிப் பேசும் சுப.வீரபாண்டியன் மூளை குப்பைத்தொட்டி ஆகிவிட்டது. அறிவாலயம் வாசலில் நிற்கும் பிச்சைக்காரன். அசோகச் சக்கரவர்த்தி பேரரசை விட மிகப்பெரிய பேரரசைக் கட்டி ஆண்ட இராஜராஜ சோழனை இழிவுபடுத்திய இயக்குநர் ரஞ்சித் போன்றவர்களும் தமிழ் திரையுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்தப் படம் எந்த மதத்தையும், ஜாதியையும் இழிவாக பேசவில்லை. சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல படத்தை மோகன்ஜியும், அவரது குழுவினரும் தரமாகக் கொடுத்துள்ளனர்.

மற்ற மதத்தை இழிவுப்படுத்தி மதம் மாற்றுகிறார்கள். இந்த படத்தில் நடித்துள்ள இராதாரவி தான், நடிகவேள் மகன் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.அதன்பின் அர்ஜுன் சம்பத், திருமாறன்,கிருஷ்ணசாமி, ஆகியோர் கருத்துக் கூறினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த