சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
டோக்கியோ 2020 பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களை மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் இன்று கவுரவிக்கிறார்
டோக்கியோ 2020 பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள், இதர வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் மற்றும் மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் இணை அமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே புதுதில்லியில் உள்ள ஹோட்டல் அசோகாவில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கவுரவித்தார்.
பதக்கம் வென்ற அனைவருக்கும் ரொக்க பரிசு வழங்க அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. தங்கம் வென்றவர்களுக்கு ரூ 10 லட்சமும், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ 8 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ 5 லட்சமும் வழங்கப்பட்ட நிகழ்வு.
2021 ஆகஸ்ட்-செப்டம்பரில் நடைபெற்ற டோக்கியோ 2020 பாராலிம்பிக்கில் ஒன்பது பிரிவுகளில் பங்கேற்க இது வரை இல்லாத அளவில் 54 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை இந்தியா அனுப்பியது. ஐந்து தங்கம், எட்டு வெள்ளி மற்றும் ஆறு வெண்கல பதக்கங்களை வென்று இந்திய பாராலிம்பிக் வீரர்கள் வரலாறு படைத்தனர்.
கருத்துகள்