பிரதமர் அலுவலகம் மகாநவமி தினத்தில் மாதா சித்திதாத்ரியை வணங்கினார் பிரதமர்
நவராத்திரி கொண்டாட்டத்தின் போது, மகா நவமி தினத்தில் மாதா சித்திதாத்ரியை பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார் மற்றும் அனைவருக்கும் ஆசி கோரினார்.
இது குறித்து சுட்டுரையில், பிரதமர் விடுத்துள்ள செய்தியில்;‘நவராத்திரியில் மகாநவமி புனித தருணத்தில் மாதா சித்திதாத்ரி வணங்கப்படுகிறார். அவரின் ஆசியுடன், அனைவரும் தங்கள் இலட்சியங்களை அடைய நான் வாழ்த்துகிறேன். மாதாவின் பக்தர்களுக்கு வாழ்த்தக்கள்...' என தெரிவித்துள்ளார்.
கருத்துகள்