முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுபது வயதிலும் கதாநாயகன் ரஜினி தேடிவந்த தாதா சாகிப் பால்கே விருது

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகிப் பால்கே விருது பெற்ற நிகழ்வில் அவர் நடித்த குசேலர் படத்தின் கதை போல்  பெருமை பொங்கப் பகிர்ந்து டெல்லியிலும் தனது நண்பர் ராஜ் பகதூரின் பெயரை உச்சரித்து மகிழ்ந்த நிகழ்வு.


கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் 1970 ஆம் ஆண்டு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக ராஜ் பகதூரும், நடத்துனராக சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற ரஜினிகாந்தும் ஒரே நாளில் பணிக்குச் சேர்ந்து. பயனச்சீட்டுக்  கொடுக்கும் போது பயணிகளுக்கு பாக்கி சில்லறையைக் கொடுக்கும் போதும் அவரது ஸ்டைலைப் பார்த்தும், வேகமான நடை, தலையை கோதி விடும் ஸ்டைல் ஆகியவற்றையும் கண்டறிந்து அப்போதே நடிப்பில் ஆர்வம் இருந்ததால் போக்குவரத்து ஊழியர்கள் போடும் நாடகங்களில் முக்கியக் கதாபாத்திரமேற்று நடித்த போதுதான் ரஜினிக்குள் இருந்த நடிப்புத் திறமை ராஜ் பகதூருக்கு தெரிந்தது. இதுகுறித்து ரஜினியிடம் சொன்ன போது அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்ட்டியூட்டுக்கு போய் நடிப்பில் பயிற்சி பெறுமாறு ரஜினியை கட்டாயப்படுத்தி ராஜ் பகதூர் தான் அனுப்பினார்.



ரஜினியின் ஸ்டைலை அப்போதய எந்த நடிகரும் பயன்படுத்தாத நிலையில் இயக்குநர் கே பாலசந்தர் கண்டறிந்து வாய்ப்பு வழங்கவே அன்று தொடங்கிய பயணம் 70 வயதிலும் நிற்காமல் கதாநாயகனாகவே தொடர்ந்து நடிக்கிறார்.  உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் பெங்களூர் சென்றால் ராஜ் பகதூரைச் சந்திக்காமல் ரஜினி காந்த் வரமாட்டார்.  ஆண்டுதோறும் இமயமலைக்குச் செல்லும் போது ராஜ் பகதூருடன் செல்லும் ரஜினிகாந்தின் தரையில் அமர்ந்து கூடச் சாப்பிட தயங்கமாட்டார் என ராஜ் பகதூர் தெரிவித்துள்ளார்.



அது போல்தான் ராஜ் பகதூர் குறித்து சிலாகித்து கொள்வார் ரஜினிகாந்த். தேசிய விருதுகள், பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகளை வாங்கிய நடிகர் ரஜினிகாந்திற்கு டெல்லியில் திரைப்பட வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதைப் குடியரசு துணைத் தலைவரிடம் பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த் விழா மேடையில் பேசும் போது "இந்த விருதை வாங்குவதில் நான் பெருமை கொள்கிறேன்.


தாதா சாகேப் பால்கே விருது கொடுத்தமைக்கு மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி.          இந்த நேரத்தில் இந்த விருதை எனது குரு கே பாலசந்தருக்கு அர்ப்பணிக்கிறேன். அவரை இந்தத் தருணத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். அடுத்தது தந்தை போல் நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்து ஆன்மீகத்தை என்னுள் புகுத்திய எனது சகோதரர் சத்யநாராணயா கெய்க்வாட்டுக்கு நன்றி. எனது நண்பரும் என்னுடன் பணியாற்றிய சக ஊழியருமான டிரைவர் ராஜ் பகதூருக்கு நன்றி.

நான் பஸ் கன்டக்டராக இருந்த போது அவர்தான் என்னுள் இருந்த நடிப்புத் திறமையை கண்டறிந்து என்னை சினிமாவில் இணைந்து நடிக்க ஊக்குவித்தார்" எனத் தெரிவித்தார். உச்சத்திற்குப் போனாலும் தன்னை உயர்த்தி விட்ட நபர்களை மறக்கக் கூடாது என நினைவுப்படுத்தி விட்டதுடன் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் முன்னிலையில் ராஜ் பகதூருக்கு பெருமையும் சேர்த்தார். ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருது வாங்கி இருக்கும் இந்த நேரத்தில் வழக்கம் போல் காதில் விழுந்தது


நியாயப்படி கமலுக்கு தான் கொடுக்க வேண்டும். எதற்கு ரஜினிக்கு? இந்த கேள்வி பலரையும் தூங்க விடாமல் எரிச்சலடையச் செய்திருக்கிறது.

ரஜினியும் கமலும் ஒரே தமிழ்த்திரை என்கிற தளத்தில் பயணித்த கமல் குழந்தையாக நடித்து பெயரும் புகழும் பெற்றார். அவர் திரையுலகில் எப்படியாவது நடன அசிஸ்ட்டண்ட்டாக, சிறிய நடனப் பையனாக அன்றைய கதாநாயகியாகவும் பின்னர் அரசியல் தலைவர்களாகவும் இருந்த முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவோடும் மலையாளத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நமது மாநிலம் சார்ந்த பரமக்குடி சார்ந்த நடிகர்.

ஆனால் ரஜினி தமிழே தெரியாமல், பேசமுடியாமல் ஒரு மராட்டிய மாநிலம் விட்டு ஒரு தமிழ் நாடு மாநிலம் வந்து, படிக்கக்கூடப் பணமில்லாமல் தன் வாழ்க்கையைத் துவக்கியவர். இயக்குனர் கே.பாலச்சந்தர் மட்டும் வாய்ப்புத் தந்திருக்காவிட்டால் ரஜினி காந்த் மேலே வந்திருப்பது தமிழ்நாட்டில் கஷ்டம் தான். கமலுக்கு அப்படி இல்லை. தமிழ்நாட்டில் இயக்குனர் பாலச்சந்தர், கேரளத்தில் இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன், ஆந்திரத்தில் இயக்குனர் கே.விஸ்வநாத் என சில ஜாம்பவான்கள் அவரைத் தூக்கி நடந்திருக்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை

நடிகர் ரஜினி காந்த் நடிக்கத் தொடங்கிய போது கௌரவவேடத்தில் பதினாறு வயதினிலே படத்தில் நடித்த போது கூட தன் முத்திரையை அவர் பதிக்க முனைந்தார். கமலஹாசன் நிறையப் படங்களில் கௌரவ வேடத்தில் நடித்து எண்ணிக்கையைக் கூட்டினார். கமலஹாசன் முதல் 50 படங்களில் தனி ஹீரோவான தமிழ்ப் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ரஜினிகாந்தின் வெளியான  முதல் 50 படங்களில் பெருவாரியானவை வெற்றிப்படங்கள் தாம்.

கமல்ஹாசன் தான் பேசப்பட வேண்டும் என்பதில் குறியாக இருந்து உழைப்பார். ஆனால் ரஜினிகாந்த் அப்படி நினைத்து எதுவும் செய்வதில்லை. ஆனால் பேசப்படுபவராக மாறிப்போவார். சிவக்குமார் கூட ஒரு செய்தியாளர் சந்திப்பில் 'உயிரைக்கொடுத்து கமல் படம் முழுக்க நடித்தார். ஆனால் மூன்றே சீனில் வில்லனாக வந்து ரஜினி பெயர் வாங்கிக்கொண்டார். அது அவர் தலையெழுத்து' என்று சொன்னதில் எத்தனை உண்மை.

நாயகன் என்கிற படம் வந்த போது ரஜினி மனிதன் என்கிற படத்தில் நடித்தார். வெற்றியில் இரண்டும் சமமென்றாலும் நாயகன் முன்பு மனிதன் ஒரு படமே கிடையாது. ஆனாலும் வெற்றி சரிசமமாகவே இருந்தது.

கமலஹாசனை ஹிந்தியிலும் கொண்டு போய் கே.பாலச்சந்தர் நிறுத்தியது போல் ரஜினிகாந்தை முன் நிறுத்த யாரும் அன்று இருக்கவில்லை. சட்டம் ஒரு இருட்டறை படத்தை அமிதாப்பச்சன் நடிக்க போட்டுக்காட்டிய போது அவர் தேர்ந்தெடுத்தது (சங்கர்) கணேஷ் பாத்திரத்தை தான். அதை விரிவு படுத்துங்கள் என எஸ்.ஏ.சந்திரசேகரிடம் அமிதாப்பச்சன் சொன்ன போது அமிதாப்போடு நடிக்க நாயகர் அங்கு தயாரில்லாத போது தென்னிந்தியாவிலிருந்து ரஜினிகாந்த் கொண்டு  வரப்பட்டதாக எஸ்.ஏ.சந்திரசேகர் ஜெயா டிவி ஷோவில் சொன்னது யூடியூபிலிருக்கிறது. அப்படி ரஜினிகாந்தைத் தேடி வந்ததே ஹிந்தி வாய்ப்பு. பின்னாளில் தலைவா என பாட்டு போடும் அளவுக்கு வளர்ச்சி.

சங்கரின் எந்திரன் முதலில் போனது கமலிடமே. ஆனால் அதில் ரஜினி தான் பின்னாளில் நடித்தார். கமலின் சில பாத்திரங்களில் ரஜினியும் நடிக்க முடியும் என நிரூபித்த தருணம் அது.

வீட்டில் அறிவாளியாக ஒரு பிள்ளை படித்துக்கொண்டே இருந்தாலும் நம்மை உற்சாகமாக வைக்க ஒரு அழகு பிள்ளை வேண்டும். அது தான் ரஜினி. 

கமல் ரஜினியை நாம் கலைஞனாக பார்க்கலாம் போட்டியாக நினைத்தே வேலை செய்திருக்கிறார். ரஜினி கமலை தன் போட்டியாளராக நினைத்ததில்லை. அதை விட உயர்ந்த அந்தஸ்திலேயே வைத்திருக்கிறார். 

கமல் . ரஜினி இருவரும் தனித்தனியாக தன்மை உடையவர்கள் ஆனால் சினிமா முகமின்றி, ஒரு மாநிலத்திலிருந்து வேறுமாநிலத்துக்கு குடிபெயர்ந்து, அம்மாநிலமக்களை மட்டும் வைத்துக்கொண்டு, அவர்களின் ரசிப்புத்தன்மையை மட்டும் கணக்கிட்டு இந்திய அளவிலும், உலக அளவிலும் வெற்றி பெற ஒரு தனி உழைப்பு வேண்டும். அந்த உழைப்பில் பூத்த பூ தான் தாதா சாகேப் பால்கே விருது.

ரஜினி அந்த விருதுக்கு நியாயமானவர் தான். வாழ்த்துக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த