முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அடுத்தவர் மனைவியுடன் அந்தரங்கப் புகைப்படம்; `சர்ச்சை' காவல்துறை ஆய்வாளர் முனிசேகர் சஸ்பென்ட்.!

அடுத்தவர் மனைவியுடன் அந்தரங்கப் புகைப்படம்;  `சர்ச்சை' காவல்துறை ஆய்வாளர் முனிசேகர் சஸ்பென்ட்.!


சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை அஷ்ரப் அன்சாரி. என்பவர், 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி ஆன்லைன் மூலமாக காவல்துறை இயக்குனர்., வடக்கு மண்டல காவல்துறை தலைவர்., காஞ்சிபுரம் டி.ஐ.ஜி., செங்கல்பட்டு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பியிருந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,




`எனக்கு 18.6.2012 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் திருமணம் நடந்தது. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் மனைவியின் சொந்த ஊர் திருக்கழுக்குன்றம் அருகில் கிராமம் என்பதால் அங்குள்ள அவரின் சகோதரி வீட்டுக்குச் சென்றுவருவார். அங்கு சென்று வரும்போதெல்லாம் என் மனைவியின் நடவடிக்கையிலும் பேச்சிலும் மாற்றம் தெரிந்தது.


அதனால் என் மனைவியின் செல்போனை எடுத்து  நான் ஆய்வு செய்த போது திருக்கழுக்குன்றம் காவல்துறை ஆய்வாளர் முனிசேகர் என்பவருடன் அவருக்குப் பழக்கம் இருந்தது தெரியவந்தது. ஆய்வாளர் முனிசேகரும், என் மனைவியும் வாட்ஸ்அப் காலில் பேசிய புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இது குறித்து என் மனைவியிடம் கேட்டதற்கு அவர் சரியான பதில் சொல்லவில்லை. அதனால் ஏற்பட்ட பிரச்னையில் என் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரின் சகோதரி வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து ஆய்வாளர் முனிசேகரை அவரின் செல்போனில் தொடர்புகொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை. தற்போது எனது உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட ஆய்வாளர் முனிசேகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்த புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் முனிசேகரிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். ஆய்வாளர் முனிசேகர் முன்பே சர்சையில் சிக்கியவர். சென்னையில் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கொள்ளையர்களைப் பிடிக்க கடந்த 2017 ஆம்ம் ஆண்டு, டிசம்பர் மாதம் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையிலான தனிப்படை ராஜஸ்தான் சென்றது. பலருக்கு மீண்டும் நினைவு படுத்தும் நிலையில். ஒரு பின்னோட்டம்:சென்னை அருகில் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை போன சம்பவத்தில், கொள்ளையர்களைப் பிடிக்க காவல்துறை ஆய்வாளர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் இராஜஸ்தானுக்குச் சென்றனர். கொள்ளையர்களைப் பிடிக்கும் போது நடந்த மோதலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பெரியபாண்டியன் அங்கே மரணமடைந்தார். முனிசேகரின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு தான், பெரியபாண்டியனின் உடலைத் துளைத்ததாக இராஜஸ்தான் காவல்துறை தெரிவித்த நிலையில். ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணத்துக்குப் பிறகு நகைக்கடை கொள்ளையன் நாதுராம் காவல்துறையினரிடம் சிக்கி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சென்னை மாநகரக் காவல் துறையிலிருந்து நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ளசென்னையில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் முனிசேகர் மாற்றம்.




ராஜஸ்தான் மாநிலத்தில் கொளத்தூர் நகை கடை கொள்ளையன் நாதுராமை பிடிக்க சென்ற போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை தவறுதலாக சுட்டு கொன்ற இன்ஸ்பெக்டர் முனிசேகர், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி பகுதியிலுள்ள ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்திற்கு  அப்போது ஆய்வாளர் முனிசேகர் இடமாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் காவல்துறை உயரதிகாரி ஒருவரின் பரிந்துரையில் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மாறுதலாகி  பணியாற்றிய போது தான் திருமணமான அஷ்ரப் அன்சாரி மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.  ஆய்வாளருடன் சம்பந்தப்பட்ட பெண் உள்ள தனிப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் தற்போது ஆய்வாளர் முனிசேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இவர்கள் செய்யும் செயல்கள் நினைத்தால் நமது நினைவில் வரும் பாடல் வரிகள்                                "தர்மத் தாயின் பிள்ளைகள்                  தாயின் கண்ணை மறைப்பதா?

உண்மைதன்னை ஊமையாக்கித் தலைகுனிய வைப்பதா?

தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ

அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த