முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அடுத்தவர் மனைவியுடன் அந்தரங்கப் புகைப்படம்; `சர்ச்சை' காவல்துறை ஆய்வாளர் முனிசேகர் சஸ்பென்ட்.!

அடுத்தவர் மனைவியுடன் அந்தரங்கப் புகைப்படம்;  `சர்ச்சை' காவல்துறை ஆய்வாளர் முனிசேகர் சஸ்பென்ட்.!


சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை அஷ்ரப் அன்சாரி. என்பவர், 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி ஆன்லைன் மூலமாக காவல்துறை இயக்குனர்., வடக்கு மண்டல காவல்துறை தலைவர்., காஞ்சிபுரம் டி.ஐ.ஜி., செங்கல்பட்டு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பியிருந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,




`எனக்கு 18.6.2012 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் திருமணம் நடந்தது. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் மனைவியின் சொந்த ஊர் திருக்கழுக்குன்றம் அருகில் கிராமம் என்பதால் அங்குள்ள அவரின் சகோதரி வீட்டுக்குச் சென்றுவருவார். அங்கு சென்று வரும்போதெல்லாம் என் மனைவியின் நடவடிக்கையிலும் பேச்சிலும் மாற்றம் தெரிந்தது.


அதனால் என் மனைவியின் செல்போனை எடுத்து  நான் ஆய்வு செய்த போது திருக்கழுக்குன்றம் காவல்துறை ஆய்வாளர் முனிசேகர் என்பவருடன் அவருக்குப் பழக்கம் இருந்தது தெரியவந்தது. ஆய்வாளர் முனிசேகரும், என் மனைவியும் வாட்ஸ்அப் காலில் பேசிய புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இது குறித்து என் மனைவியிடம் கேட்டதற்கு அவர் சரியான பதில் சொல்லவில்லை. அதனால் ஏற்பட்ட பிரச்னையில் என் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரின் சகோதரி வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து ஆய்வாளர் முனிசேகரை அவரின் செல்போனில் தொடர்புகொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை. தற்போது எனது உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட ஆய்வாளர் முனிசேகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்த புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் முனிசேகரிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். ஆய்வாளர் முனிசேகர் முன்பே சர்சையில் சிக்கியவர். சென்னையில் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கொள்ளையர்களைப் பிடிக்க கடந்த 2017 ஆம்ம் ஆண்டு, டிசம்பர் மாதம் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையிலான தனிப்படை ராஜஸ்தான் சென்றது. பலருக்கு மீண்டும் நினைவு படுத்தும் நிலையில். ஒரு பின்னோட்டம்:சென்னை அருகில் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை போன சம்பவத்தில், கொள்ளையர்களைப் பிடிக்க காவல்துறை ஆய்வாளர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் இராஜஸ்தானுக்குச் சென்றனர். கொள்ளையர்களைப் பிடிக்கும் போது நடந்த மோதலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பெரியபாண்டியன் அங்கே மரணமடைந்தார். முனிசேகரின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு தான், பெரியபாண்டியனின் உடலைத் துளைத்ததாக இராஜஸ்தான் காவல்துறை தெரிவித்த நிலையில். ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணத்துக்குப் பிறகு நகைக்கடை கொள்ளையன் நாதுராம் காவல்துறையினரிடம் சிக்கி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சென்னை மாநகரக் காவல் துறையிலிருந்து நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ளசென்னையில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் முனிசேகர் மாற்றம்.




ராஜஸ்தான் மாநிலத்தில் கொளத்தூர் நகை கடை கொள்ளையன் நாதுராமை பிடிக்க சென்ற போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை தவறுதலாக சுட்டு கொன்ற இன்ஸ்பெக்டர் முனிசேகர், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி பகுதியிலுள்ள ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்திற்கு  அப்போது ஆய்வாளர் முனிசேகர் இடமாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் காவல்துறை உயரதிகாரி ஒருவரின் பரிந்துரையில் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மாறுதலாகி  பணியாற்றிய போது தான் திருமணமான அஷ்ரப் அன்சாரி மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.  ஆய்வாளருடன் சம்பந்தப்பட்ட பெண் உள்ள தனிப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் தற்போது ஆய்வாளர் முனிசேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இவர்கள் செய்யும் செயல்கள் நினைத்தால் நமது நினைவில் வரும் பாடல் வரிகள்                                "தர்மத் தாயின் பிள்ளைகள்                  தாயின் கண்ணை மறைப்பதா?

உண்மைதன்னை ஊமையாக்கித் தலைகுனிய வைப்பதா?

தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ

அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...