முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழகக் கோவில்களில் புதிதாக அணைத்து ஜாதி அர்ச்சகர்களை நியமிக்கத் தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி மனு

தமிழகக் கோவில்களில் புதிதாக அணைத்து ஜாதி அர்ச்சகர்களை நியமிக்கத் தடை விதிக்க வேண்டும்; உச்சநீதிமன்றத்தில் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி மனு


 டாக்டர் சுவாமி தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை.  இது மத உரிமைகளை மீறும் வகையில் உள்ளது. இந்த ரிட் மனுவை விசாரித்து தீர்ப்பு வரும் வரையில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் புதிய அர்ச்சகர்களை நியமிக்கவும், ஏற்கனவே உள்ள அர்ச்சகர்களை பணிநீக்கம் செய்யவும் தமிழக அரசுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். என அந்த மனுவில் கோரியுள்ளார்.




ரிட் மனு தொடர்பான விசாரணை தேதியை விரைவில் தெரிவிக்கிறேன் என டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற ஒரு நபர் நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்பிரமணியன்சுவாமியும் சில தீட்சதர்களும் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. அதில் ‘தீட்சதர்களோ, அவர்களது மூதாதையர்களோ சிதம்பரம் கோயிலை கட்டவில்லை, அதனால் கோயிலின் மீது தீட்சதர்களுக்கு உரிமைக் கொண்டாட முகாந்திரம் இல்லை என கூறி, கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமித்த உத்தரவு செல்லும்’ எனவும் கடந்த 2009ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு முன்னர் சிதம்பரம் நடராஜர் ஆலய வழக்கில் வெற்றி கண்டார் அதன் பின்புலப்  பார்வை :ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சிக் காலத்தில்




மதராஸ் மாகாணத்தில் பிரித்தானிய கட்டுப்பாடு நீதிக் கட்சியின் ஆட்சி நடந்த காலத்தில் ஹிந்து சமயக்கோயில்கள், அறக்-கட்டளைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் 1923 ஆம் ஆண்டு ஹிந்து சமய அறக்கட்டளைச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

தில்லை  சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சதர்கள் சென்னை மாநில ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி ஆளுநரிடம் கொடுத்த  முறையீட்டு மனுவிவ் 1923 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட ஹிந்து சமய அறக்கட்டளைகள் சட்டத்திலிருந்து சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு விலக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.

மனுவைப் பரிசீலித்து ஆளுநர், சட்டத்தில் சில பிரிவுகள் சிதம்பரம் கோவிலையும் கட்டுப்படுத்தும் எனவும், அப்பிரிவுகள் தவிர மற்றபடி சட்டம் சிதம்பரம் கோவிலுக்கு நடைமுறைக்கு வராது என உத்தரவை 1926 ஆம் ஆண்டு பிறப்பித்த படி சரத்துக்ள் படி ஸ்கீம் அல்லது திட்டம்


1) சிதம்பரம் கோவில் பரம்பரை அறங்-காவலர்கள்

2) வரவு செலவுக் கணக்கு, அவற்றை அரசுக்கு அளித்தல்

3) கோவில் நிருவாகத்தை நடத்துவதற்குத் திட்டம் வரைதல்.

4) கோவில் நிதி தொடர்பானவை. இவற்றிற்கு 1923 ஆம் ஆண்டு ஹிந்து சமய அறநிலைய மற்றும் கட்டளைச் சட்டப்-படி சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு அதாவது தீட்சிதர்களுக்கு விலக்குக் கிடையாது.


இதற்கிடையில் சிதம்பரம் கோவில் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லையென அம்பலவாணன் என்பவர் 1931 ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி நிர்வாக ஹிந்து சமய அறநிலையத் துறை வாரியத்திற்கு (Hindu Religious Endowment Board) அப்போது. (Hindu Religious and Charitable Endowment Commission கிடையாது) ஒரு திட்டம் அல்லது ஸ்கீம் வகுக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறான பக்தர்களின்  கோரிக்கையை ஏற்று அறநிலைய வாரியம் ஒரு திட்டத்தை வகுத்து பின் சில குறைகள் இருக்ஙவே கைவிட்டது. மீண்டும்

1933 ஆம் ஆண்டு அறநிலைய வாரியம் ஒரு திட்டத்தை வகுத்தது.


தீட்சிதர்கள் சார்பில் அத் திட்டத்தை எதிர்த்து (South Arcot District Civil Court) ல் வழக்குத் தொடுத்தனர். 13.3.1937 ஆம் தேதி  தீர்ப்பு வழங்கிய நீதிபதி அறநிலையத் துறைக்குக் கோயில் நிருவாகத்தை ஒட்டித் திட்டம் வகுக்க உரிமை உண்டு எனவும்.  அறநிலையத் துறையின் திட்டத்தில் சில மாறுதல்களைச் செய்தது.

கடலூர் நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தீட்சதர்கள் மதராஸ் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

சிதம்பரம் நடராசர் கோயில் பொதுக் கோயில் அல்ல. அது தனியார் கோயில். அறநிலையத் துறையின் சட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது. அப்படியே கோயில் நிருவாகத்திற்காகத் திட்டம் வகுக்க வேண்டும் என்றாலும் நிர்வாகத்தில் எந்தக் குறையும் சொல்லப் படாத நிலையில் திட்டம் வகுக்க வேண்டிய தேவை இல்லை. இதுவே வாதம்.      விளம்பரம் :- :-விளம்பரம்

உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு எண். 306/1936, நீதியரசர்கள் வெங்கடரமணராவ், நீதியரசர் நியூசம் ஆகிய அமர்வு விசாரித்து 3.4.1939 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டதில் சிதம்பரம் கோவில் பொதுக் கோவில்-தான், தனியார் கோவிலல்ல என்பதை உறுதி செய்தனர். தங்கள் தீர்ப்பில் 1890 ஆம் ஆண்டு நடந்த ஒரு வழக்கில் நீதிபதி முத்துச்சாமி அய்யர் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டினர்..30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் முதல்வர்  எம்.ஜி.ஆர். அரசு ஆலய நிர்வாகத்தில் நடந்துள்ள பல்வேறு முறைகேடுகளையும் மோசடிகளையும் குறிப்பிட்டு நிர்வாக அலுவலரை நியமிக்கவிருப்பதாக ஒரு குறிப்பும் அனுப்பியது. இதற்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். 9.8.1983 ஆம் நாள் அரசு அனுப்பிய குற்றச்சாற்றுகளுக்கு பதில் தருமாறு 9.8.1983 கேட்ட நிலை.

எம்.ஜி.ஆர்.அரசு 31.7.1987 ஆம் நாள் நான்காண்டுகளுக்குப் பின்னர் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் நிர்வாத்தை மேற்கொள்ள அதிகாரியை நியமிக்கும் ஆணை பிறப்பித்தது. 


பத்தாண்டுகள் கழித்து சென்னை உயர் நீதிமன்றம் 11.2.1999  ஆம் தேதி  தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கேற்று நிர்வாக அதிகாரியைத் தமிழக அரசு நியமித்தது செல்லும் என்த் தீர்ப்பளித்தது.

தீட்சிதர்கள் உயர்நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மீண்டும் மேல் முறையீடு வழக்குத் தொடர்ந்தனர். விசாரித்த நீதிமன்றம் தீட்சிதர்கள் முறையீடு செய்ய வேண்டியது தமிழக அரசிடமே எனத்  தீர்ப்பு வழங்கியது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் 2006  ஆம் ஆண்டில் தீட்சிதர்களின் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து நிருவாக அதிகாரியை நியமித்து வெளியிட்டுள்ள உத்தரவை உறுதி செய்தது. தமிழக அரசின் இந்த ஆணையை எதிர்த்துத்தான் தீட்சிதர்கள் உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்தார்கள். இந்த வழக்கில் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, தீட்சிதர்களுக்கு ஆதரவாக மனுச் செய்து, தன்னையும் இணைத்துக்கொண்டார் அதன் பின்னர் வழக்கு வேகமெடுத்து நடந்தது.சென்னை உயர்நீதிமன்ற ஒரு நபர் நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்பிரமணியன்சுவாமியும் சில தீட்சதர்களும் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்ததில் தீட்சதர்களோ, அவர்களது மூதாதையர்களோ சிதம்பரம் கோயிலை கட்டவில்லை, அதனால் கோயிலின் மீது தீட்சதர்களுக்கு உரிமைக் கொண்டாட முகாந்திரம் இல்லை என கூறி, கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமித்த உத்தரவு செல்லும்’ எனவும் கடந்த 2009ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.சிதம்பரம் நடராஜர் கோவில் அர்த்தமண்டபத்தில் தேவாரம் பாட முயன்ற ஆறுமுகசாமியை அவமானப்படுத்தி அடித்த தீட்சதர்கள். கைகள் முறிந்தாலும் தன் உயிரே போனாலும் பரவாயில்லை, சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடாமல் விடமாட்டேன் என சட்டப்போராட்டம் நடத்திய ஆறுமுகசாமிக்கு, கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட அனுமதி வழங்கி ஆணையிட்டதையடுத்து, அவரை யானை மீது ஏற்றி அர்த்தமண்டபம் அழைத்து வந்தபோது, கோவில் வாசலில் திரண்டு நின்ற தீட்சதர்கள் தடுக்க முயன்று அரசு காவல்துறை உதவியுடன் சிற்றம்பல மேடையில் ஆறுமுகசாமி, தேவாரம் பாடினார்

2009 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் திமுக அரசு, சிதம்பரம் நடராஜர் கோவிலை ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தீட்சதர்கள் தொடர்ந்த வழக்கில் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பில்.

சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல் அதிகாரியை நியமித்த தமிழக அரசு உத்தரவு சரி எனக் கூறி, தீட்சதர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.

சென்னை உயர்நீதிமன்ற  உத்தரவை எதிர்த்து டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியும்  மற்றும்  தீட்சதர்களும் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தீட்சதர்களோ, அவர்களது மூதாதையர்களோ சிதம்பரம் கோவிலைக் கட்டவில்லை, அதனால் கோவிலின் மீது தீட்சதர்களுக்கு உரிமைக் கொண்டாட முகாந்திரமில்லை எனக் கூறி, கோவில் சொத்துக்களைப் பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கோவிலுக்கு செயல் அதிகாரியை நியமித்த உத்தரவு செல்லுமென 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் தேதி உத்தரவிட்டது.

அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்  செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளான பி.எஸ்.சவுகான், எஸ்.ஏ.பாப்டே அடங்கிய அமர்வு, கோவில் நிர்வாகத்தை அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட அதிகாரி மேற்கொள்ளலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, கோயிலின் நிர்வாகத்தை மீண்டும் தீட்சதர்கள் வசமே சட்டப்படி ஒப்படைப்பதாக 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கியது.. இதில் வெற்றி பெற்ற டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி .முதலாம் குலோத்துங்க சோழன், முதலாம் ராஜராஜ சோழன், விக்கிரம சோழன் ஆகியோரும் இக்கோயிலுக்கு பெருங்கொடைகளை வழங்கியிருக்கின்றனர். புதுக்கோட்டை மகாராஜா சேதுபதி அவர்களால் அளிக்கப்பட மரகதக்கல் இன்றும் நடராசரை அலங்கரிக்கிறது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் தங்ககூரை வேயப்பட்ட பெருமையும்தில்லை நடராசர் கோயிலுக்கு உண்டு. இந்த அருங்காரியத்தை செய்தவர் சோழ மன்னன் முதலாம் பராந்தக சோழன் ஆவர். 'இப்போதிருக்கும் கோயிலானது 12 அல்லது 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இக்கோயில் மூலவராக 'கூத்தன்' என்றழைக்கப்படும் தில்லை நடராசர் வீற்றிருக்கிறார்தில்லை நடராசர் கோயில் பஞ்ச பூத ஸ்தலன்களுள் ஆகாயத்தை குறிக்கும் கோயிலாகும். சிவ பெருமானிடம் இருந்து நேரடியாக யோகக்கலையை பயின்றவர் என்ற சிறப்புடையவரான பதஞ்சலி முனிவர் தனது 'திருமந்திரம்' என்ற நூலில் இக்கோயிலை புகழ்ந்து பாடல்கள் எழுதியுள்ளார். இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணைக்கு இணங்க 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை சேக்கிழார் தில்லை நடராசர் கோயிலில் இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்துதான் இயற்றியிருக்கிறார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த