பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன் கானை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை தீவிரம்
மும்பையில் 02 அக்டோபர் 2021 ல் கோவா செல்லும் சொகுசுக் கப்பலில் நடைபெற்ற பார்ட்டியில் பங்கேற்றவர்கள் தடைச் செய்யப்பட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது குறித்து தகவலறிந்த
போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள், சொகுசுக் கப்பலைச் சுற்றி வளைத்துச் சென்று பார்த்தபோது, தடைச் செய்யப்பட்ட போதைப்பொருட்களைப் பயன்டுத்தியது தெரிய வந்ததைத் தொடர்ந்து, பார்ட்டியில் பங்கேற்றவர்களைக் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கனது தகவலின் படி, 03 அக்டோபர் 2021 காலை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன் கானை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றது.
குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே கூறுகையில், "பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட எட்டுப் பேரிடம் மும்பையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சொகுசுக் கப்பலிலிருந்து கோகைன், ஹர்ஷிஷ், எம்.டி. உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சொகுசுக் கப்பலின் உரிமையாளர், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது" எனவும் மேலும்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தலைவர் எஸ்என் பிரதான் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இரண்டு வாரமாக புலனாய்வு செய்து மும்பையில் சொகுசு கப்பலில் சோதனை நடத்தப்பட்டது" எனத் தெரிவித்தார்
கருத்துகள்