முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி கிராம ஊராட்சிக் கூட்டங்கள் இந்தியா முழுவதும் நடத்தும் நிலையில் தமிழ்நாட்டின்  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தமிழ்நாடு முதலமைச்சர் கிராமசபைக் கூட்டத்தில் நேரடியாகக் கலந்துகொண்டு கிராமத்தின் தீர்மானங்களை விவாதிப்பது  முதல் முறையாகும் இது வரவேற்க வேண்டிய நிகழ்வாகும்.


மாநிலத்தின் முதல்வர் கிராமத்திற்கு நேரடியாக வந்து,  தங்கள் குறைகளை  கேட்டுச் சென்றிருப்பதால் குறைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்பது  மக்களின் நம்பிக்கை ஏற்படும். அதிகாரிகளும் முதல்வரே கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றதால் அவர்களுக்கு வேண்டிய அடிப்படை விஷயங்களை கட்டாயம் செய்வார்கள்.


முதல்வரின் பாப்பாபட்டி கிராம வருகையில் மக்களின் முக்கிய பிரச்சனைகள் தீர்க்கப்படும். மேல்நிலை தண்ணீர் தொட்டி, பள்ளியைத் தரம் உயர்த்துவது நியாய விலை கடை அமைப்பது, நூலகம் அமைப்பது, பூங்கா அமைப்பது, பாலம் அமைப்பது, சாலை அமைப்பத போன்ற எந்த அடிப்படை வேலைகளும் இனிமேல் நிறைவேற்றப்படும். முதலமைச்சர் கிராமசபை கூட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டு மக்களிடையே உரையாற்றி கிராம தீர்மானங்களை விவாதிப்பதற்கு


பாப்பாபட்டி ஊராட்சியை முதல்வர் தேர்ந்தெடுக்க மற்றும் ஒரு காரணமும் இருக்கிறது. அது  ஒரு ஊரல்ல. அது ஒரு வரலாறு.

அந்த உண்மை வரலாறு என்ன ?


அதை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள மூன்று கிராமங்கள். கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டாகாச்சியேந்தல். 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த 4 கிராமங்களிலும் சட்டமன்றத் தேர்தல் நடக்கும். நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும். ஆனால் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த முடியாத நிலை நடத்தினால் வெற்றி பெற்றவர் மீண்டும் இராஜினாமா   ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஹரிஜன ஆதிதிராவிட மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட காரணம். தலைவர் பதவிக்கு உள்ளூர் ஆதிதிராவிட மக்கள் போட்டியிட விரும்புவதில்லை. மீறி யாராவது போட்டியிட்டால், எதிராக ஊர் ஆதரவு பெற்ற வேறொரு ஆதிதிராவிடர் நிறுத்தப் படுவார். அவர் வெற்றி பெற்ற உடனே ராஜினாமா செய்து விடுவார். இது தான் இந்த நான்கு ஊர்களிலும் நிலைமை சுமார் 15 ஆண்டுகள்.


இந்தியாவின் தேர்தல் ஆணையத்துக்கு சவாலாக இருந்த கிராமங்கள் இவை. அதில் அரசியல் புகுந்த நிலையில் தான் பிரச்சினை பெரிதாகியது தான் உண்மை.


2006 ஆம் ஆண்டு  கலைஞர் டாக்டர் மு.கருநாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சரானார். மதுரை மாவட்ட ஆட்சியராக உதய சந்திரன் நியமிக்கப் பட்டார். அவருக்கான முதல் உத்தரவே ஊராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது தான். தேர்தலை நடத்த வேண்டும் எனப் போராடும் இடதுசாரி, ஆதிதிராவிடர் அமைப்பு  மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்களுடன்  இணைந்தார். பின்னர்


தேர்தல் நடைபெற்றது. நான்கு ஊராட்சித் தலைவர்களாக ஆதிதிராவிடர்கள் பதவியேற்றனர். பின்னர். ஊராட்சித் தலைவருக்கு எந்திரத் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பாக நியமிக்கப் பட்டதையும். நான்கு பேருக்கும் சென்னையில் அரசு சார்பில், அன்றைய முதல்வர் தலைமையில் பாராட்டு விழாவும் நடத்தி.


மதுரை இரயில் நிலையத்திலிருந்து 4 கிராம மக்களும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மறைந்த பி. மோகன் தலைமையில் சென்னை புறப்பட்ட அந்த மக்களை, அதிகாலை 4 மணிக்கு இரயில் நிலைய பிளாட்பாரத்தில் வரவேற்றவர் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தற்போது முதலமைச்சரான பின் பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்துக்குச் சென்று குறைகளைக், கோரிக்கைகளைக் கேட்டுள்ளார். தி.மு.க அரசின் செயல்பாட்டில் குறையிருந்தால் சொல்லுங்கள்.. அப்பத்தான் சரி செய்ய முடியும் என்று அவர்களிம் பேசியிருக்கிறார். இது தான் ஒரு ஆரோக்கியமான மாற்றம். வரவேற்க வேண்டிய மாற்றமும் கூட என்று தெரிவிக்கிறார்கள். கூட்டத்தில் பேசிய ஒரு பெண்மணி சீர்மறபினருக்கான இட ஒதுக்கீடு கேட்கும் கோரிக்கை வந்த நிலையில் முதல்வர் சுய உதவி குழுக்கள் குறித்து வினவிய நிலையில் பல கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பதிவில் மதுரை - பாப்பாபட்டி கிராமசபை-யில் பங்கேற்று அவ்வூர் மக்களின் கோரிக்கைக்கேற்ப, கிராம உட்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை அறிவித்தேன்.


கே.நாட்டாப்பட்டியில் உழவர்களுக்கு உதவும் வகையில் பயிர்க்கடனுக்கான காசோலைகளை வழங்கினேன்.

கழக அரசு தமிழ் மக்களின் நலனைப் பேணும் அரசு! எனத் தெரிவித்துள்ளார்.அக்டோபர் 2 ஆம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தேவர் தந்த தேவர் என்றழைக்கப்படும் கல்வித் தந்தை பி.கே‌.மூக்கையாத்தேவர் பிறந்த ஊரான பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் பங்கேற்ற நிகழ்வு சிறந்த நடவடிக்கையாகும் பார்க்கலாம்.  அதோடு அப்பகுதி மக்களின் கலாச்சார பயன்பாடுகள் குறித்த வரலாறும் அறிவது. முக்கியமாகும்.உசிலம்பட்டி பகுதியில் கருமாத்தூர் பொன்னாங்கன் வாசல் ஒச்சாண்டம்மன் என்று அருள்  விளங்கும் ஆங்கால அய்யன் கோவிலை  குல தெய்வம் கோயிலாக வழிபடும் மண்ணுலகாத்தேவர் மக்கள் கரிசல்பட்டி வகை


1.மதயானைத்தேவர்,2.சின்னுடையாத்தேவர் 3.கொல்லித்தேவர்,4.ஆண்டரசத்தேவர்5.கட்ராண்டித்தேவர்,6.புளுத்தான்தேவர்

எனும் ஆறு பங்காளிகளின்  மகள்களை  திருமணம் செய்தவர்கள் அதாவது ஆறு தேவர்களின்  மருமகன்கள் .

1.முதலைக்குளம் ஒச்சாண்டம்மன் என்று அருள் விளங்கும் ஆங்கால அய்யன் கோவிலை  குல தெய்வக் கோவிலாக  வழிபடும் சேறாபுலியாத்தேவர் மக்கள் பல்லாக்கு ஒச்சாத்தேவர்,தண்டில் ஒச்சாத்தேவர் வகையராக்கள்.

2.கொடிக்குளம் நல்ல தங்காள் கோவிலை குல தெய்வமாக வழிபடும்  பிறவியம்பட்டி பிறவிஒச்சாத்தேவர் வகையராக்கள்.

3.உச்சப்பட்டி தென்கரை கருப்புகோவிலை குல தெய்வமாக  வழிபடும் வசக்கழுவத்தேவர் மக்கள் குறுக்கு ஒச்சாத்தேவர் வகையராக்கள் 

4.பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் என்று அருள் விளங்கும் ஆச்சிகிழவி ஆண்டாயி கோவிலை குல தெய்வமாக வழிபடும் பகாத்தேவர்,கீரித்தேவர் மக்கள் எட்டுடன் இரண்டு சேர்ந்த பத்துத்தேவர் வகையராக்கள்

5.மதிப்பனூர் மூனுசாமி என்று அருள் விளங்கும் ஆங்கால அய்யன் கோவிலை  குல தெய்வமாக வழிபடும் சீறும்புலியான் மக்கள் ஏழு தேவர் வகையராக்கள்

6.புத்தூர் நாட்டின் கு.போத்தம்பட்டி ஒச்சாண்டம்மன் என்று அருள்  விளங்கும் ஆங்கால அய்யன் கோவிலை  குல தெய்வமாக  வழிபடும பெரிய பின்னத்தேவர் மக்கள் இரண்டு தேவர் வகையராக்கள்

தன்னாட்சிக் கள்ளர் நாடுகளில் பிரமலைக்கள்ளர்கள் அறுதிப் பெரும்பான்மை மக்கள் வாழும் பகுதியில் உசிலம்பட்டி பகுதி முழுவதையும் பரவி வாழும் மக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த