முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் சாய்ந்ததில் பெண் காவலர் பலியானார் ரூபாய்.10 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் சாய்ந்ததில் பெண் காவலர் பலியானார் ரூபாய்.10 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


மரம் விழுந்து இறந்து போன பெண் காவலர் கவிதா  தலைமை செயலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் 

சென்னையில் நேற்றிரவில் பெய்த கன மழை காலை வரை நீடித்தத நிலையில் இன்று காலையில் 8 மணியளவில் பெருமழை 


பலத்த காற்றுடன் பெய்தது காலை 9.10 மணியளவில் பெண் காவலர் கவிதா தலைமைச் செயலக காவல் பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் தலைமைச் செயலகத்துக்குள் சென்று கொண்டிருந்தபோது மழையில் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அலுவலகமருகில் அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு திரும்பிய நிலையில் மழையுடன் வீசிய பலத்த காற்றில் பெரிய புங்கை மரம் திடீரென வேரோடு சாய்ந்து பெண் காவலர் கவிதாவின் மீது விழுந்தததில் மரத்துக்கு அடியில் அவரது தலை சிக்கியதில் தலை நசுங்கி இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்.

தலையில் சிறிய தலைக்கவசம் மற்றும் மழை அங்கி அணிந்து  பணிக்கு வந்திருந்தார். மரம் விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கியதில் அவர் அணிந்திருந்த சிகப்பு நிற ஹெல்மெட் தனியாக வந்து விழுந்தது.


உடனடியாக பெண் காவலர் உடலை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். மரமறுக்கும் எந்திரங்கள் மூலம் மரக்கிளைகளை அகற்றி நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் அவரது உடலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மரம் சாய்ந்து விழுந்தபோது தலைமைச்செயலக வளாகத்துக்குள் சில காவலர்களும் பணியிலிருந்த நிலையில் மரம் விழுந்த இடத்தில் போக்குவரத்துக் காவலர் முருகன் பணியிலிருந்துஈஈஒ ஈஈ

 மரம் விழுந்ததில் சிக்கிக்கொண்டதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மரத்தை அகற்றும் பணியின் போது பணியிலிருந்த தீயணைப்பு வீரர்கள் செந்தில்குமார், ராஜா, கோபு ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உயர் காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

உயிரிழந்த பெண் காவலர் கவிதா திருமணமாகி தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கணவர் சாய்பாபா. இரயில்வே ஊழியர். மகன் அருண்குமார். 22 வயது என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கிறார். மகள் சினேகபிரியா 20 வயது  பி.எஸ்.சி. நர்சிங் படிக்கிறார்.

முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்தவருக்கு இன்று காலையில் தலைமைச் செயலகத்தில் காவல் பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

அதற்காக காலையில் வ

வேலைக்கு வந்த போதுதான் பழமையான மரம் பெண் காவலர் கவிதாவின் உயிரைப் பறித்தது.

உடனடியாக தமிழகத்தின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்ட அறிவிப்பில் :-

இன்று (2 ஆம் தேதி) காலை சுமார் 9 மணியளவில் தலைமைச் செயலக முதல்-அமைச்சர் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மரம் மழையின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்தது.

அப்போது அங்கே காவல் பணியில் இருந்த முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர் கவிதா மரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.

பணியில் இருக்கும்போது உயிரிழந்த தலைமைக் காவலர் கவிதா குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த கவிதா குடும்பத்தாருக்கு உடனடியாக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

பலியான கவிதா இன்று காலை வீட்டில் இருந்தவர்களிடம் வேலைக்கு சென்றுவிட்டு வருவதாக சந்தோ‌ஷத்துடன் கூறிவிட்டு வந்தார். எதிர்பாராதவிதமாக மரம் சாய்ந்து பலியானதில் மீட்கப்பட்ட கவிதாவின் உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது.

தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் உயிரிழந்த சம்பவம் சென்னையில் காவலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலைமைச் செயலக ஊழியர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இன்று காலை 9.10 மணியளவில் மரம் சாய்ந்ததால் அங்கு பொதுமக்கள் யாரும் இல்லை.

காலை 10 மணிக்கு பிறகு முதல்- அமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிப்பதற்காக பொது மக்கள் அங்கு அதிகளவில் திரண்டிருப்பார்கள். அது போன்ற நேரத்தில் இந்த மரம் விழுந்திருந்தால் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தலைமைச் செயலகத்தில் உள்ள பழமையான மற்ற மரங்களை பாதுகாக்கும் வகையில் அதன் அடிப்பகுதியை போதுமான அளவுக்கு பலப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. தற்போது வேரோடு சாய்ந்து விழுந்த மரம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது 

பெண் போலீஸ் உயிரிழந்தது தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மரம் சாய்ந்து விழுந்த இடத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி.சைலேந்திரபாபு ஆகியோர் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மரம் விழுந்தது தொடர்பாக அங்கிருந்த காவலர்களிடமும், அதிகாரிகளிடமும்  விவரங்களைக் கேட்டறிந்தனர். தலைமைச் செயலக வளாகத்தில் இது போன்று மேலும் ஒரு சம்பவம் நடைபெறாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இருவரும் அங்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...