முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் சாய்ந்ததில் பெண் காவலர் பலியானார் ரூபாய்.10 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் சாய்ந்ததில் பெண் காவலர் பலியானார் ரூபாய்.10 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


மரம் விழுந்து இறந்து போன பெண் காவலர் கவிதா  தலைமை செயலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் 

சென்னையில் நேற்றிரவில் பெய்த கன மழை காலை வரை நீடித்தத நிலையில் இன்று காலையில் 8 மணியளவில் பெருமழை 


பலத்த காற்றுடன் பெய்தது காலை 9.10 மணியளவில் பெண் காவலர் கவிதா தலைமைச் செயலக காவல் பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் தலைமைச் செயலகத்துக்குள் சென்று கொண்டிருந்தபோது மழையில் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அலுவலகமருகில் அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு திரும்பிய நிலையில் மழையுடன் வீசிய பலத்த காற்றில் பெரிய புங்கை மரம் திடீரென வேரோடு சாய்ந்து பெண் காவலர் கவிதாவின் மீது விழுந்தததில் மரத்துக்கு அடியில் அவரது தலை சிக்கியதில் தலை நசுங்கி இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்.

தலையில் சிறிய தலைக்கவசம் மற்றும் மழை அங்கி அணிந்து  பணிக்கு வந்திருந்தார். மரம் விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கியதில் அவர் அணிந்திருந்த சிகப்பு நிற ஹெல்மெட் தனியாக வந்து விழுந்தது.


உடனடியாக பெண் காவலர் உடலை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். மரமறுக்கும் எந்திரங்கள் மூலம் மரக்கிளைகளை அகற்றி நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் அவரது உடலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மரம் சாய்ந்து விழுந்தபோது தலைமைச்செயலக வளாகத்துக்குள் சில காவலர்களும் பணியிலிருந்த நிலையில் மரம் விழுந்த இடத்தில் போக்குவரத்துக் காவலர் முருகன் பணியிலிருந்துஈஈஒ ஈஈ

 மரம் விழுந்ததில் சிக்கிக்கொண்டதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மரத்தை அகற்றும் பணியின் போது பணியிலிருந்த தீயணைப்பு வீரர்கள் செந்தில்குமார், ராஜா, கோபு ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உயர் காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

உயிரிழந்த பெண் காவலர் கவிதா திருமணமாகி தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கணவர் சாய்பாபா. இரயில்வே ஊழியர். மகன் அருண்குமார். 22 வயது என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கிறார். மகள் சினேகபிரியா 20 வயது  பி.எஸ்.சி. நர்சிங் படிக்கிறார்.

முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்தவருக்கு இன்று காலையில் தலைமைச் செயலகத்தில் காவல் பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

அதற்காக காலையில் வ

வேலைக்கு வந்த போதுதான் பழமையான மரம் பெண் காவலர் கவிதாவின் உயிரைப் பறித்தது.

உடனடியாக தமிழகத்தின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்ட அறிவிப்பில் :-

இன்று (2 ஆம் தேதி) காலை சுமார் 9 மணியளவில் தலைமைச் செயலக முதல்-அமைச்சர் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மரம் மழையின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்தது.

அப்போது அங்கே காவல் பணியில் இருந்த முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர் கவிதா மரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.

பணியில் இருக்கும்போது உயிரிழந்த தலைமைக் காவலர் கவிதா குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த கவிதா குடும்பத்தாருக்கு உடனடியாக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

பலியான கவிதா இன்று காலை வீட்டில் இருந்தவர்களிடம் வேலைக்கு சென்றுவிட்டு வருவதாக சந்தோ‌ஷத்துடன் கூறிவிட்டு வந்தார். எதிர்பாராதவிதமாக மரம் சாய்ந்து பலியானதில் மீட்கப்பட்ட கவிதாவின் உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது.

தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் உயிரிழந்த சம்பவம் சென்னையில் காவலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலைமைச் செயலக ஊழியர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இன்று காலை 9.10 மணியளவில் மரம் சாய்ந்ததால் அங்கு பொதுமக்கள் யாரும் இல்லை.

காலை 10 மணிக்கு பிறகு முதல்- அமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிப்பதற்காக பொது மக்கள் அங்கு அதிகளவில் திரண்டிருப்பார்கள். அது போன்ற நேரத்தில் இந்த மரம் விழுந்திருந்தால் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தலைமைச் செயலகத்தில் உள்ள பழமையான மற்ற மரங்களை பாதுகாக்கும் வகையில் அதன் அடிப்பகுதியை போதுமான அளவுக்கு பலப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. தற்போது வேரோடு சாய்ந்து விழுந்த மரம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது 

பெண் போலீஸ் உயிரிழந்தது தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மரம் சாய்ந்து விழுந்த இடத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி.சைலேந்திரபாபு ஆகியோர் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மரம் விழுந்தது தொடர்பாக அங்கிருந்த காவலர்களிடமும், அதிகாரிகளிடமும்  விவரங்களைக் கேட்டறிந்தனர். தலைமைச் செயலக வளாகத்தில் இது போன்று மேலும் ஒரு சம்பவம் நடைபெறாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இருவரும் அங்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த