முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2021 டிஜிபி-க்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்

2021 டிஜிபி-க்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்


மாண்புமிகு பிரதமர் லக்னோவில் நவம்பர் 20-21-ல் நடைபெற்ற 56-வது டிஜிபி-க்கள்/ஐஜி-க்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவல்துறை தலைமை இயக்குநர்கள்/ காவல்துறை தலைவர்கள் என 62 பேர் பங்கேற்றனர். நாடு முழுவதும் உள்ள நுண்ணறிவுப் பிரிவு  அலுவலகங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பல்வேறு அதிகாரிகளும் காணொலி மூலம் பங்கேற்றனர்.


மாநாட்டின் விவாதங்களில்  கலந்து கொண்ட பிரதமர் மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கினார். மாநாட்டின் தொடர்ச்சியாக, சிறை சீர்திருத்தங்கள், பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம், இணையவெளி குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், தன்னார்வ அமைப்புகளுக்கு வெளிநாட்டு பணம் வருதல், ட்ரோன் சார்ந்த விஷயங்கள், எல்லைப்புற கிராமங்கள் மேம்பாடு உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்த விவாதங்களை நடத்த டிஜிபிக்களைக் கொண்ட முக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன.


இன்று பிற்பகலில் மாநாட்டில் நிறைவுரையாற்றிய பிரதமர் காவல்துறை தொடர்புடைய அனைத்து சம்பவங்களைப் பகுப்பாய்வு செய்து,  வழக்கு ஆய்வுகளை மேற்கொண்டு, அதை நிறுவனமயமாக்கப்பட்ட மாற்றல் முறையாக உருவாக்க  வேண்டும் என வலியுறுத்தினார். நவீன முறையில் நடத்தப்பட்ட மாநாட்டைப் பாராட்டிய அவர், பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளிடமிருந்து தகவல்களை அனுமதித்ததற்கு பாராட்டு தெரிவித்தார். நாடு முழுவதும் காவல் படையினருக்கு பயனளிக்கும் விதத்தில், இடைச் செயல்பாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என அவர் யோசனை தெரிவித்தார்.


அடிமட்டத் தேவைகளைப்பூர்த்தி செய்யும் வகையில் வருங்கால தொழில்நுட்பங்களைப் பின்பற்ற, மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில், உயர் அதிகார காவல் தொழில்நுட்ப இயக்கத்தை அமைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். பொது மக்களின் வாழ்க்கையில், தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், கோவின், ஜிஇஎம், யுபிஐ போன்ற உதாரணங்களைக் குறிப்பிட்டார். குறிப்பாக, கோவிட் தொற்றுக்குப் பின்னர், பொது மக்கள் மீது காவல்துறையின் அணுகுமுறை மாறியிருப்பதை அவர் பாராட்டினார்.  மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு, ட்ரோன் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 2014-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போலிசிங் குறித்து மறு ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்திய அவர், காவல் படையில் அதனை தொடர் நிறுவனமயமாக்கல் மாற்றத்துக்கான வரையறையை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார். காவல் துறை எதிர்கொள்ளும் வழக்கமான சவால்களை சமாளிக்க, ஹெக்கத்தான் மூலம் தொழில்நுட்ப தீர்வுகளைக்காணும் உயரிய தகுதியுள்ள இளைஞர்களை இதில் ஈடுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நுண்ணறிவுப் பிரிவில் சிறப்பாகப்பணியாற்றியவர்களுக்கு குடியரசு தலைவரின் காவல் பதக்கங்களை பிரதமர் வழங்கினார். பிரதமரின் உத்தரவுக்கிணங்க, முதல் முறையாக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள், சமகால பாதுகாப்பு விஷயங்கள் பற்றிய கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இவை மாநாட்டுக்கு மேலும் மதிப்பைக் கூட்டின.


முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர், நவம்பர் 19-ந்தேதி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். நாட்டின் மிகச்சிறந்த மூன்று காவல் நிலையங்களுக்கு விருதுகளை அவர் வழங்கினார். அனைத்து விவாதங்களிலும் பங்கேற்ற உள்துறை அமைச்சர், தமது மதிப்புமிக்க யோசனைகளைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...