முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாரதப் பிரதமர் மற்றும் இங்கிலாந்து பிரதமர் இடையே கிளாஸ்கோவில் சிஓபி 26 ஐ ஒட்டி இருதரப்பு சந்திப்பு

பாரதப் பிரதமர் மற்றும் இங்கிலாந்து பிரதமர் இடையே கிளாஸ்கோவில் சிஓபி26 ஐ ஒட்டி இருதரப்பு சந்திப்பு

2021 நவம்பர் 1, அன்று கிளாஸ்


கோவில் நடைபெற்ற சிஓபி26 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, இங்கிலாந்து பிரதமர் திரு.போரிஸ் ஜான்சன் எம்.பி.யை பிரதமர் திரு நரேந்திர மோடி, சந்தித்தார்.

2. சிஓபி26 மாநாட்டை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காகவும், காலநிலை மாற்றத்தைத் தணித்தல், ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றுக்கான உலகளாவிய நடவடிக்கையை முன்னெடுப்பதில் அவரது தனிப்பட்ட தலைமைத்துவத்திற்காகவும்  இங்கிலாந்து பிரதமர் ஜான்சனுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, வாழ்த்து தெரிவித்தார். காலநிலை நிதி, தொழில்நுட்பம், புத்தாக்கம், இயற்கை ஹைட்ரஜன் புதுப்பிக்கவல்ல எரிசக்தி, ஐஎஸ்ஏ, சிடிஆர்ஐ கீழ் கூட்டு முயற்சிகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் பிரிட்டனுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.


3. குறிப்பாக வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், மக்களுடன் இருந்து மக்கள், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து துறைகளில் பகுதிகளில் 2030-க்கான முன்னுரிமைத் திட்டங்கள் செயல்படுத்துவதை இரு பிரதமர்களும் ஆய்வு செய்தனர். சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உட்பட மேம்படுத்தப்பட்ட வர்த்தக கூட்டாண்மையை வழங்குவதில் உள்ள முன்னேற்றம் குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.


4. ஆப்கானிஸ்தான், பயங்கரவாத எதிர்ப்பு, இந்தோ-பசிபிக், விநியோகத் தொடர் விரிவாக்கம் மற்றும் கொவிட்டுக்குப் பிந்தைய உலகளாவிய பொருளாதார மீட்பு ஆகயிவற்றில் உள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

5. பிரதமர் ஜான்சனை விரைவில் இந்தியாவில் வரவேற்க விரும்புவதாக பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி26 உச்சி மாநாட்டில் ‘செயல் ஒற்றுமை-முக்கியமான தசாப்தம்’ என்ற தலைப்பில் பிரதமர் உரையாற்றினார்.

மேன்மையாளர்களே,

நண்பர் போரிஸ் அவர்களே, ஏற்றுக்கொள்ளுதல் பற்றிய முக்கியமான பிரச்சனையில் எனது கருத்துக்களை முன்வைக்க எனக்கு வாய்ப்பளித்ததற்கு  நன்றி!

உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்த விவாதத்தில் வெப்பமயமாதல் தடுப்பு போன்ற முக்கியத்துவத்தை வளர்ந்த நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் வளரும் நாடுகளுக்கு இது அநீதியாகும்.

இந்தியா உட்பட பெரும்பாலான வளரும் நாடுகளில் உள்ள விவசாயிகளுக்குக் காலநிலை மாற்றம் ஒரு பெரிய சவாலாக உள்ளது - சாகுபடி முறை மாறுவது, பருவ மழை பொய்த்துப் போதல், அதிக மழை மற்றும் வெள்ளம் அல்லது அடிக்கடி ஏற்படும் புயல்களால் பயிர்கள் சேதம் ஆகியவற்றை சந்திக்கின்றனர். குடிநீர் ஆதாரங்கள் முதல் மலிவு விலை வீடுகள் வரை அனைத்தும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக மீள்தன்மை கொண்டதாக மாற்றப்பட வேண்டும்.

மேன்மையாளர்களே,

இந்தச் சூழலில் எனக்கு மூன்று கருத்துக்கள் உள்ளன. முதலில், நமது வளர்ச்சிக் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் ஏற்றுக்கொள்ளுதலை முக்கியப் பகுதியாக மாற்ற வேண்டும். 'நல் சே ஜல்'- அனைவருக்கும் குழாய் நீர், 'ஸ்வச் பாரத்'- தூய்மை இந்தியா மற்றும் 'உஜ்வாலா'- இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சமையல் எரிவாயு போன்ற திட்டங்கள், எமது ஏழைக் குடிமக்களுக்கு நன்மைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியுள்ளன. இரண்டாவதாக, பல பாரம்பரிய சமூகங்கள் இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்குப் போதுமான அறிவைக் கொண்டுள்ளன.

நமது ஏற்றுக்கொள்ளல் கொள்கைகளில் இந்தப் பாரம்பரிய நடைமுறைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இந்த அறிவு ஓட்டம் புதிய தலைமுறைக்குக் கடத்தப்படும் வகையில் பள்ளிப் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட வேண்டும். உள்ளூர் நிலைமைகளுக்கு இணங்க வாழ்க்கை முறைகளைப் பாதுகாப்பதும் ஏற்றுக்கொள்ளலின் முக்கிய தூணாக இருக்கலாம். மூன்றாவதாக, ஏற்றுக்கொள்ளல் முறைகள் உள்ளூர் நடைமுறையாக இருக்கலாம், ஆனால் பின்தங்கிய நாடுகள் அவற்றுக்கு உலகளாவிய ஆதரவைத் தர வேண்டும்.

உள்ளூர் ஏற்றுக்கொள்ளலுக்கு உலகளாவிய ஆதரவு என்ற யோசனையுடன், பேரிடரைத் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியின் முன்முயற்சியை இந்தியா எடுத்துள்ளது. இந்த முயற்சியில் அனைத்து நாடுகளும் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...