முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாரதப் பிரதமர் மற்றும் இங்கிலாந்து பிரதமர் இடையே கிளாஸ்கோவில் சிஓபி 26 ஐ ஒட்டி இருதரப்பு சந்திப்பு

பாரதப் பிரதமர் மற்றும் இங்கிலாந்து பிரதமர் இடையே கிளாஸ்கோவில் சிஓபி26 ஐ ஒட்டி இருதரப்பு சந்திப்பு

2021 நவம்பர் 1, அன்று கிளாஸ்


கோவில் நடைபெற்ற சிஓபி26 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, இங்கிலாந்து பிரதமர் திரு.போரிஸ் ஜான்சன் எம்.பி.யை பிரதமர் திரு நரேந்திர மோடி, சந்தித்தார்.

2. சிஓபி26 மாநாட்டை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காகவும், காலநிலை மாற்றத்தைத் தணித்தல், ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றுக்கான உலகளாவிய நடவடிக்கையை முன்னெடுப்பதில் அவரது தனிப்பட்ட தலைமைத்துவத்திற்காகவும்  இங்கிலாந்து பிரதமர் ஜான்சனுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, வாழ்த்து தெரிவித்தார். காலநிலை நிதி, தொழில்நுட்பம், புத்தாக்கம், இயற்கை ஹைட்ரஜன் புதுப்பிக்கவல்ல எரிசக்தி, ஐஎஸ்ஏ, சிடிஆர்ஐ கீழ் கூட்டு முயற்சிகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் பிரிட்டனுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.


3. குறிப்பாக வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், மக்களுடன் இருந்து மக்கள், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து துறைகளில் பகுதிகளில் 2030-க்கான முன்னுரிமைத் திட்டங்கள் செயல்படுத்துவதை இரு பிரதமர்களும் ஆய்வு செய்தனர். சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உட்பட மேம்படுத்தப்பட்ட வர்த்தக கூட்டாண்மையை வழங்குவதில் உள்ள முன்னேற்றம் குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.


4. ஆப்கானிஸ்தான், பயங்கரவாத எதிர்ப்பு, இந்தோ-பசிபிக், விநியோகத் தொடர் விரிவாக்கம் மற்றும் கொவிட்டுக்குப் பிந்தைய உலகளாவிய பொருளாதார மீட்பு ஆகயிவற்றில் உள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

5. பிரதமர் ஜான்சனை விரைவில் இந்தியாவில் வரவேற்க விரும்புவதாக பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி26 உச்சி மாநாட்டில் ‘செயல் ஒற்றுமை-முக்கியமான தசாப்தம்’ என்ற தலைப்பில் பிரதமர் உரையாற்றினார்.

மேன்மையாளர்களே,

நண்பர் போரிஸ் அவர்களே, ஏற்றுக்கொள்ளுதல் பற்றிய முக்கியமான பிரச்சனையில் எனது கருத்துக்களை முன்வைக்க எனக்கு வாய்ப்பளித்ததற்கு  நன்றி!

உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்த விவாதத்தில் வெப்பமயமாதல் தடுப்பு போன்ற முக்கியத்துவத்தை வளர்ந்த நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் வளரும் நாடுகளுக்கு இது அநீதியாகும்.

இந்தியா உட்பட பெரும்பாலான வளரும் நாடுகளில் உள்ள விவசாயிகளுக்குக் காலநிலை மாற்றம் ஒரு பெரிய சவாலாக உள்ளது - சாகுபடி முறை மாறுவது, பருவ மழை பொய்த்துப் போதல், அதிக மழை மற்றும் வெள்ளம் அல்லது அடிக்கடி ஏற்படும் புயல்களால் பயிர்கள் சேதம் ஆகியவற்றை சந்திக்கின்றனர். குடிநீர் ஆதாரங்கள் முதல் மலிவு விலை வீடுகள் வரை அனைத்தும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக மீள்தன்மை கொண்டதாக மாற்றப்பட வேண்டும்.

மேன்மையாளர்களே,

இந்தச் சூழலில் எனக்கு மூன்று கருத்துக்கள் உள்ளன. முதலில், நமது வளர்ச்சிக் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் ஏற்றுக்கொள்ளுதலை முக்கியப் பகுதியாக மாற்ற வேண்டும். 'நல் சே ஜல்'- அனைவருக்கும் குழாய் நீர், 'ஸ்வச் பாரத்'- தூய்மை இந்தியா மற்றும் 'உஜ்வாலா'- இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சமையல் எரிவாயு போன்ற திட்டங்கள், எமது ஏழைக் குடிமக்களுக்கு நன்மைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியுள்ளன. இரண்டாவதாக, பல பாரம்பரிய சமூகங்கள் இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்குப் போதுமான அறிவைக் கொண்டுள்ளன.

நமது ஏற்றுக்கொள்ளல் கொள்கைகளில் இந்தப் பாரம்பரிய நடைமுறைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இந்த அறிவு ஓட்டம் புதிய தலைமுறைக்குக் கடத்தப்படும் வகையில் பள்ளிப் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட வேண்டும். உள்ளூர் நிலைமைகளுக்கு இணங்க வாழ்க்கை முறைகளைப் பாதுகாப்பதும் ஏற்றுக்கொள்ளலின் முக்கிய தூணாக இருக்கலாம். மூன்றாவதாக, ஏற்றுக்கொள்ளல் முறைகள் உள்ளூர் நடைமுறையாக இருக்கலாம், ஆனால் பின்தங்கிய நாடுகள் அவற்றுக்கு உலகளாவிய ஆதரவைத் தர வேண்டும்.

உள்ளூர் ஏற்றுக்கொள்ளலுக்கு உலகளாவிய ஆதரவு என்ற யோசனையுடன், பேரிடரைத் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியின் முன்முயற்சியை இந்தியா எடுத்துள்ளது. இந்த முயற்சியில் அனைத்து நாடுகளும் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த