முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விருது வழங்கிய முன்னால் முதல்வருக்கு தண்டனை பெற்றுத் தந்த நேர்மையான காவல் அதிகாரி நல்லம நாயுடு காலமானார்

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் புலனாய்வு அதிகாரி, நல்லமா நாயுடு, இன்று அதிகாலை காலமானார்.  இவரின் திறமையான புலனாய்வே 20 வருடங்கள் கழித்தும், ஜெயலலிதாவுக்கு தண்டனை பெற்றுத் தந்தது.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்பான சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் விசாரணை அதிகாரி நல்லம நாயுடு.


தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் கண்காணிப்பாளர் நல்லமநாயுடு (வயது 83) முதிர்வு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெரவள்ளூரில் உள்ள தனது இல்லத்தில்  இன்று காலமானார்.

அவரது பணிக் காலத்தில் தமிழ்நாடு முதலமைச்சரான ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் விசாரணை அலுவலர் நல்லம நாயுடு. திமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா, உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு  வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர் நல்லம்ம நாயுடு.


தமிழ்நாடு அரசின் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத் துறையின் கண்காணிப்பாளராக இருந்த நல்லம்ம நாயுடுவின் தலைமையில் 18 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழுதான் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் ஒருபகுதியாக ஜெ.ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்திற்குள் சோதனை நடத்தி, அங்கிருந்த பொருட்களைப் படம் பிடித்து, பதிவுசெய்தது நல்லம்ம நாயுடுவின் குழு.


வழக்கில் விசாரணை அதிகாரி என்ற முறையில் ஜெயலலிதாவிடம் கேள்விகளைக் கேட்டு, பதில்களைப் பெறுவது நல்லம்ம நாயுடுவின் முதன்மையான பணி. ஜெயலலிதாவை சிறையிலும் மருத்துவ மனையிலும் வைத்து விசாரணை செய்திருக்கிறார் நல்லம்ம நாயுடு. அப்படியான விசாரணை தருணத்தில், நல்லம்ம நாயுடுவின் தொடர்ச்சியான கேள்விகளால் சலிப்படைந்த ஜெயலலிதா, “யாரும் செய்யாததையா நான் செய்துவிட்டேன்? நான் மட்டும்தான் உலகத்தில் இல்லாததைச் செய்துவிட்டேனா? எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்னை மட்டும் ஏன் விசாரிக்கிறீர்கள்?” என நல்லம நாயுடுவிடம் ஆதங்கமும் ஆவேசமுமாகப் பேசியிருக்கிறார் ஜெயலலிதா. அதை நல்லம்ம நாயுடு பத்திரிகைகளில் பதிவு செய்திருக்கிறார்.


முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, வி.கே.சசிகலா நடராஜன், வளர்ப்பு மகன் வி.என். சுதாகரனை சிறையிலும், இளவரசியை மன்னார்குடியிலும் வைத்து விசாரித்த நல்லம்ம நாயுடு, வழக்கு தொடர்பாக தினகரனின் சொத்துகள் குறித்து விசாரிக்க லண்டன் சென்று வந்தார். இடைப்பட்ட காலங்களில் பல நேரடியான, மறைமுகமான நெருக்கடிகளுக்கு ஆளானார் நல்லம்ம நாயுடு. அவருடைய குடும்பத்தினரும் பல நெருக்கடிகள். பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்த அவரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்களும் விடுக்கப்பட்டன.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நல்லம்ம நாயுடு பணி ஓய்வு பெறவேண்டிய சூழல் வந்தது. அப்போது ஆட்சியிலிருந்த திமுக அரசு நல்லம்ம நாயுடுவுக்குப் பணி நீட்டிப்பு கொடுத்தது. பின்னர் மீண்டும் ஜெ.ஜெயலலிதா முதலமைச்சரான போது தனது பதவியை ராஜினாமா செய்தார் நல்லம்ம நாயுடு. பிறகு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நல்லம்ம நாயுடு திரும்ப விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.


சொத்துக்குவிப்பு வழக்கை நீதிபதி குன்ஹா விசாரித்தபோது, சொத்துக்குவிப்பு வழக்கு குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் பதிவுசெய்தார் நல்லம்ம நாயுடு. அந்த வகையில் குன்ஹா அளித்த தீர்ப்பில் நல்லம்ம நாயுடுவின் விசாரணைக்கு முக்கியப்பங்குண்டு. அதன் பின்னர் நடந்த மேல் முறையீட்டு நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு எதிராக வந்தபோதும், வழக்கு உச்சநீதிமன்றம் சென்றபோதும் நீதி வெல்லும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் நல்லம்ம நாயுடு. சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான போது, நீதி இன்னும் செத்துப்போகவில்லை. இறுதியில் நீதி வெல்லும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று பெருமிதத்துடன் பேசினார் நல்லம்ம நாயுடு. ஜெயலலிதா முதல்வராக இருந்த அதிமுக ஆட்சியில்


 1992 ஆம் ஆண்டு  இலஞ்ச ஒழிப்புத்துறையின் சிறந்த அதிகாரி விருது நல்லம்ம நாயுடுவுக்கு அறிவிக்கப்பட்டு, பதக்கம் வழங்கும் விழா  பல காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா முதல்வரான பிறகு 2003 ல் பதக்கம் வழங்கும் விழா அறிவிக்கப்பட்ட

சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையில் தீவிரமாக இருந்த நல்லம்ம நாயுடு, பதக்கம் வழங்கும் விழாவில் பங்கேற்று முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பதக்கம் பெறத் தயாரானார். ஆனால் உயரதிகாரிகள் தலையிட்டு, நல்லம்ம நாயுடுவை விழாவுக்கு அழைக்காமல், அவரது வீட்டுக்கே சென்று பதக்கத்தை வழங்கிவிட்டனர். ஆனால் அந்தப் பதக்கத்தைக் கடைசிவரை அவர் அணிந்துகொள்ளவே இல்லை.

சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பின்படி மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஜெயலிதாவின் அசையாச் சொத்துகளை ஏலம் விட்டு நாட்டுடைமை ஆக்கவேண்டும். அதுதான் முக்கியம். அதைச் செய்தாகவேண்டும் என்று தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருந்த நல்லம்ம நாயுடு அந்தச் சொத்துகள் நாட்டுடைமை ஆவதற்கு முன்பே இறந்து போனார் தமிழகத்தின் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

1996 முதல் 2001 வரை. ஊழல் வழக்குகளில் அவரின் புலனாய்வுத் திறனை நேரில் கண்டிருக்கிறேன். பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் ஆழ்ந்த  இரங்கல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த