முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விருது வழங்கிய முன்னால் முதல்வருக்கு தண்டனை பெற்றுத் தந்த நேர்மையான காவல் அதிகாரி நல்லம நாயுடு காலமானார்

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் புலனாய்வு அதிகாரி, நல்லமா நாயுடு, இன்று அதிகாலை காலமானார்.  இவரின் திறமையான புலனாய்வே 20 வருடங்கள் கழித்தும், ஜெயலலிதாவுக்கு தண்டனை பெற்றுத் தந்தது.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்பான சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் விசாரணை அதிகாரி நல்லம நாயுடு.


தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் கண்காணிப்பாளர் நல்லமநாயுடு (வயது 83) முதிர்வு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெரவள்ளூரில் உள்ள தனது இல்லத்தில்  இன்று காலமானார்.

அவரது பணிக் காலத்தில் தமிழ்நாடு முதலமைச்சரான ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் விசாரணை அலுவலர் நல்லம நாயுடு. திமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா, உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு  வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர் நல்லம்ம நாயுடு.


தமிழ்நாடு அரசின் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத் துறையின் கண்காணிப்பாளராக இருந்த நல்லம்ம நாயுடுவின் தலைமையில் 18 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழுதான் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் ஒருபகுதியாக ஜெ.ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்திற்குள் சோதனை நடத்தி, அங்கிருந்த பொருட்களைப் படம் பிடித்து, பதிவுசெய்தது நல்லம்ம நாயுடுவின் குழு.


வழக்கில் விசாரணை அதிகாரி என்ற முறையில் ஜெயலலிதாவிடம் கேள்விகளைக் கேட்டு, பதில்களைப் பெறுவது நல்லம்ம நாயுடுவின் முதன்மையான பணி. ஜெயலலிதாவை சிறையிலும் மருத்துவ மனையிலும் வைத்து விசாரணை செய்திருக்கிறார் நல்லம்ம நாயுடு. அப்படியான விசாரணை தருணத்தில், நல்லம்ம நாயுடுவின் தொடர்ச்சியான கேள்விகளால் சலிப்படைந்த ஜெயலலிதா, “யாரும் செய்யாததையா நான் செய்துவிட்டேன்? நான் மட்டும்தான் உலகத்தில் இல்லாததைச் செய்துவிட்டேனா? எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்னை மட்டும் ஏன் விசாரிக்கிறீர்கள்?” என நல்லம நாயுடுவிடம் ஆதங்கமும் ஆவேசமுமாகப் பேசியிருக்கிறார் ஜெயலலிதா. அதை நல்லம்ம நாயுடு பத்திரிகைகளில் பதிவு செய்திருக்கிறார்.


முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, வி.கே.சசிகலா நடராஜன், வளர்ப்பு மகன் வி.என். சுதாகரனை சிறையிலும், இளவரசியை மன்னார்குடியிலும் வைத்து விசாரித்த நல்லம்ம நாயுடு, வழக்கு தொடர்பாக தினகரனின் சொத்துகள் குறித்து விசாரிக்க லண்டன் சென்று வந்தார். இடைப்பட்ட காலங்களில் பல நேரடியான, மறைமுகமான நெருக்கடிகளுக்கு ஆளானார் நல்லம்ம நாயுடு. அவருடைய குடும்பத்தினரும் பல நெருக்கடிகள். பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்த அவரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்களும் விடுக்கப்பட்டன.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நல்லம்ம நாயுடு பணி ஓய்வு பெறவேண்டிய சூழல் வந்தது. அப்போது ஆட்சியிலிருந்த திமுக அரசு நல்லம்ம நாயுடுவுக்குப் பணி நீட்டிப்பு கொடுத்தது. பின்னர் மீண்டும் ஜெ.ஜெயலலிதா முதலமைச்சரான போது தனது பதவியை ராஜினாமா செய்தார் நல்லம்ம நாயுடு. பிறகு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நல்லம்ம நாயுடு திரும்ப விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.


சொத்துக்குவிப்பு வழக்கை நீதிபதி குன்ஹா விசாரித்தபோது, சொத்துக்குவிப்பு வழக்கு குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் பதிவுசெய்தார் நல்லம்ம நாயுடு. அந்த வகையில் குன்ஹா அளித்த தீர்ப்பில் நல்லம்ம நாயுடுவின் விசாரணைக்கு முக்கியப்பங்குண்டு. அதன் பின்னர் நடந்த மேல் முறையீட்டு நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு எதிராக வந்தபோதும், வழக்கு உச்சநீதிமன்றம் சென்றபோதும் நீதி வெல்லும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் நல்லம்ம நாயுடு. சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான போது, நீதி இன்னும் செத்துப்போகவில்லை. இறுதியில் நீதி வெல்லும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று பெருமிதத்துடன் பேசினார் நல்லம்ம நாயுடு. ஜெயலலிதா முதல்வராக இருந்த அதிமுக ஆட்சியில்


 1992 ஆம் ஆண்டு  இலஞ்ச ஒழிப்புத்துறையின் சிறந்த அதிகாரி விருது நல்லம்ம நாயுடுவுக்கு அறிவிக்கப்பட்டு, பதக்கம் வழங்கும் விழா  பல காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா முதல்வரான பிறகு 2003 ல் பதக்கம் வழங்கும் விழா அறிவிக்கப்பட்ட

சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையில் தீவிரமாக இருந்த நல்லம்ம நாயுடு, பதக்கம் வழங்கும் விழாவில் பங்கேற்று முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பதக்கம் பெறத் தயாரானார். ஆனால் உயரதிகாரிகள் தலையிட்டு, நல்லம்ம நாயுடுவை விழாவுக்கு அழைக்காமல், அவரது வீட்டுக்கே சென்று பதக்கத்தை வழங்கிவிட்டனர். ஆனால் அந்தப் பதக்கத்தைக் கடைசிவரை அவர் அணிந்துகொள்ளவே இல்லை.

சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பின்படி மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஜெயலிதாவின் அசையாச் சொத்துகளை ஏலம் விட்டு நாட்டுடைமை ஆக்கவேண்டும். அதுதான் முக்கியம். அதைச் செய்தாகவேண்டும் என்று தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருந்த நல்லம்ம நாயுடு அந்தச் சொத்துகள் நாட்டுடைமை ஆவதற்கு முன்பே இறந்து போனார் தமிழகத்தின் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

1996 முதல் 2001 வரை. ஊழல் வழக்குகளில் அவரின் புலனாய்வுத் திறனை நேரில் கண்டிருக்கிறேன். பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் ஆழ்ந்த  இரங்கல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...