உத்தராகண்ட் மாநில உருவாக்க தினத்தில் அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
உத்தராகண்ட் மாநில உருவாக்க தினத்தில் அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தமது தொடர்ச்சியான டுவிட்டர் செய்திகளில் கூறியிருப்பதாவது:
“உத்தராகண்ட் அமைப்பு தினத்தில் அந்த தேவபூமியின் சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகள். கடந்த 5 ஆண்டுகளில் இம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால், இந்தப்
பத்தாண்டு முழுவதும் உத்தராகண்ட் மாநிலத்திற்கு உரியதாக இருக்கிறது என நான் உறுதியாகக் கூறுகிறேன்”
“உத்தராகண்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மேம்பாட்டுப் பணிகள் இந்த மலைப்பகுதியின் தண்ணீரும், இளைஞர்களும் பயன்படுத்தப்பட்டிருப்பதன் நிரூபணமாக இப்போது உள்ளது. இயற்கையின் மடியில் அமைந்துள்ள இந்த மாநிலம் வளர்ச்சியின் பாதையைத் தொடர வேண்டுமென்று நான் வாழ்த்துகிறேன்”.
கருத்துகள்