திருச்சிராப்பள்ளியில் ரூபாய்.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது.
திருச்சிராப்பள்ளியில் பரம்பரைச் சொத்தை வாரிசு பட்டா மாறுதல் செய்ய ரூபாய். 50 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய சிறப்பு வட்டாட்சியரை இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர் திருச்சிராப்பள்ளி
நிலவரி திட்ட சிறப்பு தனி வட்டாட்சியரிடம் கே.கே.நகரில் வசிக்கும் சீனிவாசன். தனது திருச்சிராப்பள்ளி கொட்டப்பட்டு பகுதியில் இரண்டு ஏக்கர் நிலம் பூர்வீகமாக உள்ளதை நில அளவீடு செய்து பட்டா வாரிசு அடிப்படையில் வரிவிதிப்பு செய்ய பெயர் மாற்றம் செய்வதற்காக உரிய ஆவணங்கள் இணைந்து திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்து இருந்தார்.
ஆனால் நகர நிலவரி திட்ட சிறப்பு வட்டாட்சியர் கோகுல் (வயது 42) நில அளவீடு செய்து பட்டா மாறுதல் செய்து தராமல் சீனிவாசனை கடந்த இரண்டு மாதங்களாக அலைக்கழித்து அவையனைத்தும் வந்துள்ள நிலையில்
அது குறித்து சீனிவாசன் கேட்ட போது, பட்டா மாறுதல் செய்து தர ரூபாய்.ஒரு இலட்சம் லஞ்சம் கொடுத்தால் வேலை நடக்கும் எனக் கூறி உள்ளார். இலஞ்சம் கொடுக்க விரும்பாத சீனிவாசன் திருச்சிராப்பள்ளி இலஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டனிடம் புகார் மனுவை அளித்தார்.
அதையடுத்து அவர்களது அறிவுறுத்தலின் படி சீனிவாசன் நேற்று மாலை பினாப்தலின் இரசாயனம் தடவப்பட்ட ரூபாய் .50 ஆயிரத்தை இலஞ்சமாகக் கேட்டு டிமாண்டு செய்த நிலவரித் திட்ட சிறப்பு வட்டாட்சியர் கோகுலிடம் கொடுத்துள்ளார். கோகுல் அவரிடமிருந்து பணம் பெறும் போது அங்கு மறைந்திருந்து கண்காணிப்பு செய்த ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்ட இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கையுடன் பிடித்துக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் உறையூரிலுள்ள அவரது வீட்டிலும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று இரவு முதல் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து கோகுலிடம் விசாரணை நடக்கிறது..
கருத்துகள்