வாகனத் திருட்டைத் தடுக்க ஆன்லைன் போர்ட்டல்
வாகனங்கள், கைபேசிகள், ஆவணங்கள் ஆகியவை திருடப்பட்டால் மின்னணு முறையில் புகார் அளிக்க தில்லி, மத்தியப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் வசதி செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களும் இந்த மின்னணு புகார் முறை செயல்படுவது குறித்து தெரிந்து கொண்டு அவற்றை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
கருத்துகள்