முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆண்டிபட்டி மருத்துவ செவிலியர் கொலையாளி செல்லுலார் தொலைபேசி மற்றும் கால் தடத்தால் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மருத்துவ செவிலியர் கொலையாளி  கால் தடத்தால் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு.!  ஆண்டிபட்டி அரசினர் மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் செல்வி மர்மமான  கொலை சம்பவத்தில் நடந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.


திண்டுக்கல்ல் செல்வி (வயது 45) தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் அரசினர் மருத்துவமனைகளில் செவிலியராக பணிபுரிந்தவர்.  சில ஆண்டுகளாக ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தில் தங்கி ஆண்டிபட்டி அரசினர் தலைமை மருத்துவமனையில் செவிலியராக செல்வி பணிபுரிந்த நிலையில் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி அவர் வசிக்கும் வாடகை வீட்டில் மர்மமாக கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த நிலையில். இச் சம்பவம் பற்றி ஏற்கனவே செய்தி வெளிவந்தது .தேனி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து கொலை நடந்த வீட்டில் ரத்த மாதிரிகள், கைரேகை, கால் பாதம், முடி உள்ளிட்ட தடயங்களை சேகரித்து தடம் அறிவியல் துறை  ஆய்வுக்காக சென்னை அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக் குற்றவாளிகளைப்  பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைத்து காவல்துறையில் தீவிரமாகத் தேடி வந்ததனிடையே உயிரிழந்த செல்வியுடன் தொடர்பிலிருந்த நபர்களின் செல்லுலார் எண்களை சேகரித்து, சந்தேகத்தின் அடிப்படையில் பிச்சம்பட்டியைச் சேர்ந்த தாமோதரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் காவல்துறை நடத்திய. விசாரணையில் தாமோதரன் சம்பவம் நடந்த நாளன்று, தேனியிலிருந்து கொண்டு, திருப்பூரில் இருப்பதாகக் கூறியதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது அவரை கைது செய்வது குறித்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தாமோதரனின் கைரேகை செல்வியின் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகையுடன் பொருந்தாததால் கைது நடவடிக்கை அப்போது ஸகைவிடப்பட்டது. இதனால் சரியான கொலையாளியைக் கண்டுபிடிப்பதில் தொய்வு ஏற்பட்ட நிலையில், ஏற்கனவே விசாரணைக்கு வந்தவர்களிடம் எடுக்கப் பட்ட கைரேகை மற்றும் கால் பாதம் அடையாளங்களை மீண்டும் விசாரணைக்கு வருபவர்களிடம் எடுக்கத் திட்டமிட்டு எடுத்தனர்.


அதன்படி டிசம்பர் 9 ஆம் தேதி தேனி அருகிலுள்ள கோடாங்கிபட்டி ராமச்சந்திரபிரபு (வயது 34) கம்பம் அரசு மருத்துவமனையில் ஆண் செவிலியராக பணிபுரிந்தவர் விசாரணைக்கு வந்தபோது காவல்துறையின் விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளிக்கவே சந்தேகமடைந்த காவல்துறையினர் மீண்டும் விசாரணைக்கு மறுநாள் காலை வருமாறு எழுதி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு  அனுப்பி வைத்த நிலையில்


மறுநாள் 10ஆம் தேதி காலை ராமச்சந்திரபிரபு உத்தமபாளையம் பகுதியில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனால் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதனிடையே சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில், ஒரு கால் பாதத்தின் அளவு பொருந்தி இருப்பது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டது. அந்த கால் பாதத்தின் அளவு இறந்த ராமச்சந்திர பிரபு கால் பாதத்தின் அளவு என்பதும் தெரியவர. இவர், ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது காவல்துறையில் சிக்கக்கூடாது என நினைத்து, கால் பாதத்தின் அளவை சுருக்கி காண்பித்துச் சென்றதும், இரண்டாவது விசாரணையில் கால் பாதம் ஒரே மாதிரியாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் காவல்துறையின் விசாரணையில், கொலையுண்ட செல்வியுடன், ராமச்சந்திரபிரபு கடைசியாக தொடர்பு கொண்டதும் தெரிய வந்துள்ளது. கொலை நடந்த அன்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ராமச்சந்திர பிரபு சென்று வந்த காணொளிக் காட்சிகளில் பலவும் காவல்துறை வசம் கிடைத்துள்ளதும். இறந்த செல்வி அணிந்திருந்த 32 கிராம் தங்க நகையை எடுத்துச் சென்று பழனிசெட்டிபட்டி தனியார் வங்கியில் அடமானம் வைத்து ₹.75 ஆயிரம் பெற்றதும் தெரியவந்தது. அடமானம் வைக்கப்பட்ட தங்க செயின், செல்வி அணிந்திருந்தது தான் என்பதை செல்வியின் கணவர் சுரேஷ் உறுதி செய்ததைத்

தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட செவிலியர் செல்வி, தற்கொலை செய்து கொண்ட ராமச்சந்திரபிரபுவும், ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஒன்றாக பணியாற்றியவர்கள். என்பதும் அப்போது இருவருக்குமிடையே திருமணத்தை மீறிய உறவிருந்ததும், ராமச்சந்திரபிரபு, செல்விக்கு லட்சக்கணக்கில் பணம் கடன் வாங்கிக் கொடுத்ததும் தெரிய வந்த நிலையில்

சம்பவம் நடந்த அன்று செல்வியின் வீட்டிற்கு, ராமச்சந்திரபிரபு சென்று பணத்தை திரும்பக் கேட்டிருக்கலாம் என்றும், அப்போது நடந்த தகராறில் ராமச்சந்திரபிரபு தாக்கியதில் செல்வி இறந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதன் பின்னர், செல்வி அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச்சங்கிலியை எடுத்துச் சென்று பழனிசெட்டிபட்டியிலுள்ள தனியார் வங்கியில் அடமானம் வைத்திருக்கலாமென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் தன்னை நெருங்கி வருவதை அறிந்து ராமச்சந்திர பிரபு, எப்படியும் தன்னைப் பிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென்காவல்துறையினர் தெரிவித்துள்ளது .இனி காவல்துறை சார்பில் உரிய நீதிமன்றத்தில் தாக்கலாகும் குற்றப்பத்திரிகை மூலம்  தெரிய வரலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...