முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈஷா யோக மையம் தமிழகத்தின் வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதென . இ.கம்யூனிஸ்ட் கட்சி புகார்

ஈஷா யோக மையம் தமிழகத்தின் வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதென . இ.கம்யூனிஸ்ட் கட்சி புகார் 


ஈஷா யோகா அறக்கட்டளையின் வன நில ஆக்கிரமிப்புடன்  சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் :-


ஈஷா யோகா அறக்கட்டளை கோயமுத்தூர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமான கட்டுமானங்களைக் கட்டியுள்ள நிலையில் இது சம்மந்தமான விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அறிந்த போது தமிழக அரசு வனத் துறை அதிகாரிகள் வன நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை என அளித்துள்ள பதில் அதிர்ச்சியளிப்பதாகும் பதில் தவறானதாகும்.

ஈஷா யோகா அறக்கட்டளை கோயமுத்தூர் வனக்கோட்டம், போலாம்பட்டி வனச்சரகத்தில் அமைந்துள்ளது. இக்கட்டிடங்கள் அமைந்துள்ள இடங்கள் காலம்காலமாக யானைகள் பயன்படுத்திவரும் வழித்தடத்திலேயே அமைந்துள்ளன. இது தொடர்பான ஆவணங்கள் வனத்துறையினரிடம் உள்ளது. பல சமயங்களில் வனத்துறை அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர்.

அத்துடன் ஈஷா யோகா மையம் யானை வழித்தடத்தில் தான் அமைந்துள்ளதென மத்திய தணிக்கை அதிகாரி (CAG Report) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு அப்போதைய கோவை கோட்ட வன அலுவலர் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறைத் தலைவர் அவர்களுக்கு எழுதிய 17.08.2012 தேதியிட்ட ந.க.எண்;வ1/8120/2011 எண்ணுள்ள கடிதத்தில் இதுபற்றி தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.


யானை வழித்தடங்கள், காணுயிர் வாழிடங்கள் வலசைகள் அபகரிக்கப்பட்டுள்ளதால் யானைகளும் மற்ற விலங்குகளும் குடியிருப்புகளுக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்து சேதங்களை விளைவிக்கின்றன. மனித, விலங்கு மோதல்களும், இருதரப்பு உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக வனத்துறை வழங்கிவரும் இழப்பீடு விபரங்களில் இந்த உண்மையைக் காண முடியும்.


ஈஷா யோக அறக்கட்டளையின் கட்டிடங்கள் தனியாருக்குச் சொந்தமான பட்டா இடம் என்றாலும் அவை பல்வேறு அரசாணைகளையும் விதிமுறைகளையும் மீறி கட்டப்பட்டதாகும். வருவாய் வாரிய நிலை ஆணை (B.S.O) எண் 15-35(3) இன் படி வன எல்லையிலிருந்து பட்டா நிலங்களுக்கிடையில் 2 முதல் 3 சங்கிலி ( 500 மீட்டர்) வரை இடைதாங்கு மண்டலம் Buffer Zone எனப்படுகின்ற இடைவெளி கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த இடைதாங்கு மண்டலம் வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினரால் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் ஈஷா யோகா அறக்கட்டளையினர் வன எல்லை தொடக்கத்திலிருந்து சுற்றுச்சுவர் மற்றும் முன்பக்க நுழைவாயிலை அமைத்துள்ளனர்.

மேலும் ஈஷா யோகா அறக்கட்டளையின் அனைத்து கட்டிடங்களும் காப்புக்காட்டின் எல்லையிலிருந்து 1.70 மீட்டர் தொலைவு முதல் 473 மீட்டர் தொலைவுக்குள் கட்டப்பட்டுள்ளது. ஆகவே இந்த கட்டுமானங்கள் அனைத்தும் சட்டவிரோதமானது. அரசு ஆணைகளையும், பல்வேறு துறைகளின் தடையின்மைச் சான்றுகளைபீ பெறாமலும், விதிமுறைகளை மீறியுள்ளது. மேலும் விதி 4 (3) ன்படி பொது வழிப்பாடு அல்லது மதப் பயன்பாட்டு கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

ஆனால் ஈஷா யோகா அறக்கட்டளை மேற்படி மலைதள பாதுக்காப்புக் குழுமம் மற்றும் பிற அரசுத் துறைகளிடம் முன் அனுமதி பெறாமல் 42.77 ஏக்கர் நிலப்பரப்பில் முதலில் 63380 ச.மீ. பரப்பளவில் கட்டிடங்கள் எழுப்பியுள்ளதுடன் 1994 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை பல்வேறு கட்டிடங்கள், குளம், தீர்த்தக் குண்டங்கள், தியான மண்டபங்கள், நடைபாதை, அலங்காரத் தோட்டம், விளையாட்டு மைதானம், வாகனங்கள் நிறுத்துமிடமென 4,27,700.00 ச.மீ. பரப்பளவில் மேற்சொன்ன வகையில் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக கட்டுமானங்கள் எழுப்பியுள்ளனர்.

தொடர்ந்து பல்வேறு புதிய கட்டிடங்களை எழுப்பி வருகின்றனர். பல்வேறு அரசுத்துறை மற்றும் வனச்சரக அலுவலர்கள் கடிதங்கள் வாயிலாக எச்சரித்தும் ஈஷா யோகா அறக்கட்டளை தனது சட்டவிரோதமான கட்டுமானங்களை நிறுத்தவில்லை.

2016 ஆம் ஆண்டு ஈஷா யோகா அறக்கட்டளை மேற்படி இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலையும் அதனையொட்டி லட்சம் ச.மீ. பரப்பளவில் கட்டிடங்களும் எழுப்பியுள்ளனர். இந்தச் சிலையும் கட்டுமானங்களும் மேற்சொன்ன வகையில் மலைதள பாதுகாப்புக் குழுமம் மற்றும் பிற அரசுத் துறைகளின் முன் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் அனுமதியை பரிசீலித்தாலும் 300 சதுர மீட்டருக்கு மட்டும் தான் அனுமதி அளித்துள்ளார். ஆனால் அதை மீறி ஆதியோகி சிலையைச் சுற்றி தியான மண்டபங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பூங்கா என ஒரு லட்சம் சதுரடிக்கு மேல் கட்டிடங்கள் எழுப்பியுள்ளார்கள். மாவட்ட ஆட்சியர் அனுமதியும் கூட உண்மையில் விதி மீறல் அதிகார மீறலாகும். ஆட்சியர் உத்தரவில், அப்பகுதியிலுள்ள நிலங்களுக்கு எந்தவித நீர்ப்பாசன வசதியும் இல்லை. நிலத்தடி நீராதாரம் மட்டுமே உள்ளது. கள ஆய்வின் போது எவ்வித பயிர்களும் இல்லை, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்யப்படவில்லை என சான்று வழங்கப்பட்டது.

நீர்வழிப்பாதைகள் திசை திருப்பப்படுவதற்கான சாத்தியங்களோ நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கான சாத்தியங்களோ இல்லை அதனால் விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதற்கு அனுமதி அளிப்பதாக ஆட்சியர் உத்தரவில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் நீலியாறு, நீலியணை, ராஜவாய்க்கால், மிகப்பெரிய உக்குளம் உள்ளிட்ட வருடம் முழுவதும் வற்றாத நீராதாரங்கள் உள்ளன. வருடம் முழுவதும் விவசாயம் செய்யக்கூடிய பகுதியாக உள்ளது. ஆனால் இந்த உண்மைகளை மறைத்து மேற்படி உத்தரவளிக்கப்பட்டுள்ளது.

ஈஷாவின் சட்ட விரோத கட்டுமானங்களுக்கு தடை விதிக்கவும், இடிக்கவும் கோரி வெள்ளியங்கிரி மலை வாழ் பழங்குடியின மக்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் முத்தம்மா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் வழக்கு (W.P.No 3556/2017) தாக்கல் செய்து அது தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் கோவை மண்டல நகரமைப்பு திட்டமிடல் துணை இயக்குநர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது.

மத வழிபாடு மற்றும் மேம்பாட்டிற்காக ஈஷா யோகா மையம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இக்கரை போளூவாம்பட்டி பகுதியில் சிவன் சிலை அமைப்பதற்கும் அதைச் சுற்றி கட்டுமானம் கட்டுவதற்கும் 08.10.2016 மற்றும் 15.02.2017 ஆகிய தேதிகளில் 19.86 ஹெக்டேர் விளை நிலத்தை மாற்ற கோவை மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். இருந்தபோதிலும், இக்கரை போளுவாம்பட்டியில் கட்டுமானங்களை மேற்கொள்ள மலைதள பாதுகாப்புக் குழுமம் மற்றும் வனம், வேளாண், மண்ணியல், சுரங்கத் துறைகளிடம் அனுமதி பெற வேண்டும் என ஈஷா மையத்திற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் உரிய அனுமதியின்றி 109 ஏக்கர் பரப்பளவில் சட்டவிரோதமாக கட்டுமானங்களை ஈஷா யோகா மையம் கட்டியுள்ளதால். அதை இடிப்பதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என எழுத்துப்பூர்வமாக அபிடவிட் தாக்கல் செய்துள்ளார்.

ஆனால் அதன் பிறகு கடந்த அ.தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசு ஈஷா யோகா மையத்தின் மேற்படி சட்டவிரோத கட்டுமானங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு சட்டவிரோத கட்டுமானங்களுக்கு ஒப்புதல் அளிப்பது சட்டவிரோதமானதென கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.  அத்தகைய சட்டவிரோதமான கட்டுமானங்களை இடிக்க உத்திரவிட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஈஷா யோகா அறக்கட்டளையின் மேற்படி சட்டவிரோத கட்டுமானங்களால் அப்பகுதியின் இயற்கைவளம், சுற்றுச்சூழல், பச்சையம், நீர்மை, வேளாண்மை, பல்லுயிர்ப் பெருக்கம், காணுயிர் வாழிடம், வலசைகள் அனைத்தும் சூறையாடப்பட்டுள்ளது. இப்பகுதியில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட ஓடைகள், மழைக்கால நீரோடைகள், காலங்காலமாக வேளாண் குடிகள் பயன்படுத்தி வந்த வண்டிப்பாதைகள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன.

பழங்குடி மக்களின் வாழ்விடங்கள், பாரம்பரிய நீராதாரங்கள், வழித்தடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மனித விலங்கு மோதல் அதிகரித்து வருகிறது. இதனால் வனவிலங்குகள் அடிக்கடி மக்கள் வசிப்பிடங்களுக்குள் நுழைந்து ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

எனவே, தமிழக அரசு மேற்கண்ட அம்சங்களைக் கணக்கில் கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்துள்ள பதிலை திருத்தம் செய்திட வேண்டும். எக்காரணம் கொண்டும் ஈஷா யோகா நிறுவனத்திற்கு துணைபோவதாக தமிழக அரசின் செயல்பாடுகள் அமைந்துவிடக் கூடாது என வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், உண்மைக்கு மாறான பதிலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கிய அதிகாரி மீது உரிய நவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் ஈஷா யோகா அறக்கட்டளையின் வன நில ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோதமான கட்டுமானங்களை அகற்றவும் நடடிவக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம். என  கே.பாலகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...