முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் விபத்தில் மரணம்: தலைவர்கள் இரங்கல்

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் விபத்தில் மரணம்: தலைவர்கள் இரங்கல்


இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் இன்று தமிழகத்தின் குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்தார். நீலகிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள வெலிங்டன் பாதுகாப்பு சேவை பயிற்சி கல்லூரியில் பயிற்றுநர்களுக்கும், பயிலும் மாணவர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அங்கு அவர் இன்று உரையாற்ற இருந்தார்.  


இன்று மதியம் இந்திய விமானப்படையின் எம்.ஐ-17 வி-5 ஹெலிகாப்டரில் அதை இயக்கும் 4 படை வீரர்கள், 9 படைப்பிரிவை சேர்ந்த இதர வீரர்கள் ஆகியோருடன் பயணித்த முப்படை தலைமை தளபதி குன்னூர் அருகே இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கினார்.


இந்த விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் அவர்களின் துணைவியார் மதுலிகா ராவத்தும் உயிரிழந்தார். அவருடன் பயணித்த 11 படை வீரர்களும் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதி செய்துள்ளன.





இந்த விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண்சிங் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் விமானப்படையில் ஆற்றிய வீர தீர செயல்களுக்காக ’செளரிய சக்ரா’ விருதை பெற்றவர்.

குடியரசு தலைவர்:


இந்த துயர சம்பவம் குறித்து குடியரசு தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது துணைவியார் மதுலிகா ராவத் அகால மரணம் அடைந்த தகவல் அறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். நாட்டின் வீரம் செறிந்த புதல்வனை இந்த தேசம் இழந்திருக்கிறது. 40 ஆண்டுகளாக சாதனைகளாலும், பராக்கிரமத்தாலும் நிறைந்திருந்த தனது தாய்நாட்டிற்கான தன்னலமற்ற சேவையால் அவரது பணி அமைந்திருந்தது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். ஹெலிகாப்டர் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து அறிந்து மிகுந்த துயருற்றேன். தங்களது கடமையை ஆற்றும்போது உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் அஞ்சலி செலுத்தும் எனது சக குடிமக்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல், என்று கூறியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர்:


குடியரசு துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவரது துணைவியார் திருமதி. மதுலிகா ராவத், படைப்பிரிவின் உயரதிகாரிகள் மற்றும் ஹெலிகாப்டரை இயக்கிய வீரர்கள் உள்ளிட்டோர் தமிழகத்தில் குன்னூர் அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தகவலறிந்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன், என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர்:


பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களின் இரங்கல் செய்தியில்,

ஜெனரல் பிபின் ராவத் ஒரு தன்னிகரற்ற போர் வீரர். உண்மையான தேச பக்தர், நமது படைகளையும், பாதுகாப்பு உபகரணங்களையும் அதிநவீனப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். யுக்தி பூர்வமான விவகாரங்களில் அவரது மதிநுட்பமும், கண்ணோட்டமும் சிறப்பு வாய்ந்தவையாக இருந்தன. அவரது மறைவு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது துணைவியார், பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனையுற்றேன் என்றும், நாட்டிற்காக அவர்கள் உச்சபட்ச சிரத்தையுடன் சேவையாற்றினார்கள் என்றும் தெரிவித்துள்ள அவர் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை சமர்ப்பித்துள்ளார். இந்தியாவின் முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பணியாற்றிய ஜெனரல் ராவத் பாதுகாப்பு படைகளின் சீர்த்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நடவடிக்கை எடுத்து வந்தார். ராணுவத்தில் பணியாற்றிய ஒப்புவமையற்ற அனுபவத்தோடு இந்த பதவியில் பொறுப்பேற்றார். இவரது அளப்பரிய சேவையை நாடு நினைவில் கொள்ளும், என்று தெரிவித்துள்ளார்.  

மத்திய உள்துறை அமைச்சர்:

இந்த துயர சம்பவம் குறித்து தனது இரங்கல்களை தெரிவித்துக் கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, முப்படைகளின் தலைமை தளபதியாக திகழ்ந்த ஜெனரல் பிபின் ராவத் ஒரு சொல்லொண்ணா துயர விபத்தில் உயிரிழந்த மிக சோகமான தினமாக நமது தேசத்திற்கு இன்றைய தினம் அமைந்து விட்டது. தீரம் மிகுந்த வீரராக திகழ்ந்த அவர் தனது தாய்நாட்டிற்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றினார். அவரது உறுதிப்பாடும் மெச்சத்தக்க பங்களிப்பும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. நான் மிகவும் துயரமடைந்துள்ளேன். ஜென்ரல் ராவத்தின் துணைவியார் திருமதி மதுலிகா ராவத் மற்றும் 11 படை வீரர்கள் மறைவிற்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  அவர்களது குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கல்கள்.  இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பை தாங்கும் வலிமையை அவர்களது குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கட்டும்.  விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர்:முப்படைகளின் தலைமை தளபதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத்சிங்,


தமிழகத்தில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி ஜென்ரல் பிபின் ராவத், அவரது துணைவியார் மற்றும் 11 பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இவரது அகால மரணம் நாட்டிற்கும், பாதுகாப்பு படைகளுக்கும் ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளார். மேலும், ஜெனரல் ராவத் அளப்பரிய துணிவுடனும், கண்காணிப்பு உணர்வுடனும் நாட்டிற்காக சேவை புரிந்தவர். முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பொறுப்பேற்றிருந்த அவர், பாதுகாப்பு படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு குறித்து பல்வேறு திட்டங்களை வகுத்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். தற்போது வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குரூப் கேப்டன் வருண்சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர்:

நாட்டின் முதல் பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், மறைவால் வேதனையடைந்ததேன். அவர் நாட்டுக்காக தீரத்துடன் சேவையாற்றினார். நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த பணியாற்றினார். அவரின் சிறப்பான சேவையை நாடு ஒரு போதும் மறவாது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு. அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் திரு. எல். முருகன்

மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு. எல். முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

இந்தியாவின் முதல் முப்படை தளபதி #பிபின்ராவத் அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் நீலகிரி, குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் நீத்தது மிகவும் மன வேதனை அளிக்கிறது. நம் தேசத்தின் நலனுக்காக வாழ்ந்த இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...