எத்தனால் விலை உயர்வு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி தகவல்
கரும்பு அடிப்படையிலான பல்வேறு மூலப்பொருட்களிலிருந்து பெறப்படும் எத்தனாலின் விலையை அரசு உயர்த்தியுள்ளது
நாடாளுமன்றத்தின் மக்ககளவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
எத்தனால் விநியோக வருடம் 2020-21 உடன் ஒப்பிடும் போது எத்தனால் விநியோக வருடம் 2021-22-ல் கரும்பு அடிப்படையிலான பல்வேறு மூலப்பொருட்களிலிருந்து பெறப்படும் எத்தனாலின் விலையை அரசு உயர்த்தியுள்ளது.
இரண்டாம் தலைமுறை (2ஜி) எத்தனாலின் விலையை நிர்ணயம் செய்ய நாட்டில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அதிகாரம் அளித்துள்ளது. 2ஜி எத்தனால் உயிரி சுத்திகரிப்பு ஆலைகளை ஹரியானாவில் உள்ள பானிபட், பஞ்சாபில் பதிண்டா, ஒடிசாவின் பர்கர், அசாமில் நுமாலிகர் மற்றும் கர்நாடகாவின் தேவாங்கேரே ஆகிய இடங்களில் எண்ணெய் நிறுவனங்கள் நிறுவி வருகின்றன.
நாட்டில் உயிரி எரிபொருள்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
கருத்துகள்