திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்திலுள்ள தாழையூத்து எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தில் மோசடியான கணக்கு மூலம் 18.5 கோடி ரூபாய் மதிப்புக்கொண்ட 1,600 டன் எண்ணெய்யை மோசடி செய்த இரு ஊழியர்கள் கைது.
தாழையூத்து காளீஸ்வரி ரீபைண்ட் ஆயில் நிறுவனம் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றாகும் இங்கிருந்து, கோல்டு வின்னர், ஸ்ரீ கோல்டு, எல்டியா மற்றும் தேங்காய் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
இதற்கு தமிழ்நாடு முழுவதும் கிளைகள் உண்டு. இந்த நிறுவனத்தில் பழனியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் கரண்குமார் ஆகியோர் உதவி மேலாளர்களாக
பல ஆண்டுகள் பணியாற்றி வந்த நிலையில், நிறுவனம் அவர்கள் மீது கொண்ட நம்பிக்கையைப் பயன்படுத்தி, சில ஆண்டுகளாக உற்பத்தித் திறன் குறைவாக இருப்பதாக பொய்யான கணக்குகள் காட்டி வந்துள்ளனர்.
மேலும் சமையல் எண்ணையை வெளிச்சந்தையிலும் விற்பனை செய்து வந்ததாகவும், இவர்கள் இருவரும் இதுவரை சுமார் 18.5 கோடி ரூபாய் மதிப்பில் 1,600 டன் எண்ணெயைத் திருடி மோசடி செய்துள்ளது குறித்து காளீஸ்வரி நிறுவனம் அளித்த புகாரில் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை சேர்த்தனர்.
கருத்துகள்