குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்கக் தயாரான அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்கக் தயாரான அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா 1950 ஆம் ஆண்டு துவங்கி வருடம் தோறும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்த விழாவையொட்டி அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் நடத்தப்படுவதில் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெறும். இதில் சுதந்திர போராட்ட தியாகிகள், மற்றும் வீரர்கள், அவர்களின் போராட்டங்கள் குறித்த சிறப்புகளைக் கூறும் வகையில் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். இந்த அலங்கார ஊர்திக்காக 36 மாநிலங்கள் மாடல்களை அனுப்பியிருந்ததில் 12 மாநிலங்களின் மாடல்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டு
அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழாவில் இடம் பெறுவதற்காக அலங்கார ஊர்தி மாடல் அனுப்பப்பட்டதில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளான வா.உ.சிதம்பரம் பிள்ளை, வீரமங்கை இராணி வேலுநாச்சியார், மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் இந்திய அளவில் மிகவும் பிரபலமான வீரர்களை எதிர்பார்ப்பதாகக் கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அது போல் இவர்களை சர்வதேச தலைவர்களுக்கு யாரென்றே தெரியாதென்றும் அதிகாரிகள் தெரிவித்ததாகத் தெரிகிறது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி நான்காவது சுற்று வரை சென்ற நிலையில் நிராகரிக்கப்பட்டுள்ளது
தென்னிந்தியாவில் தமிழ் நாடு, கேரளம், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா அரசின் அலங்கார ஊர்திக்கு மட்டும் மத்திய அரசு அனுமதிளித்துள்ளது. அது போல் மேற்கு வங்காளத்தின் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125 ஆண்டு பிறந்த நாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தான் இந்த இழிவிற்கு காரணம் என்றால் ஏற்கவா போகிறீர்கள்? அது தான் உண்மை
குடியரசு நாள் விழாக்களுக்கான முன் வரைவுகளை இயற்றியவர்கள் யார்?
அனைத்து மாநில சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாற்றை அனைத்து மாநிலத்தில் கொண்டு சென்று இருக்க வேண்டியதை செய்யாத காரணமே இன்றைய அவமதிப்பிற்கு முழுமையான காரணம்.
சரி கடற்கரையில் உள்ள தலைவர்கள் சிலைகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.
இதற்கு தீர்வு இனி மேல் தான் வரும் தமிழ்நாடு நிகழ்வுகளில் தமிழக வீரர்கள் தலைவர்களை அடையாளமாக சிலைகளாக உருவாக்குங்கள். குடியரசு தின அணிவகுப்பில் தங்களது மேற்கு வங்காளம் அரசின் சார்பில் அனுப்பிய வாகனத்தை நிராகரித்ததற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளார் மம்தா பானர்ஜி.
தென்னிந்தியாவில் கர்நாடக தவிர்த்து ஏனைய மாநில கட்சிகள் ஆளும் மாநிலத்தின் அரசு வாகனங்களை நிராகரித்து விட்டது மத்திய அரசு.
காரணம் மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் வேண்டுமாம். சரி தமிழகத்தின் சார்பில் யாரை எல்லாம் உருவமாக அனுப்பினர்கள் என்றால்
சமீபத்தில் பாரதநாட்டின் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்கள் கூறிய
மேதகு சிவகங்கை சமஸ்தானத்தின் இராணி வீரமங்கை வேலு நாச்சியார்,
வா.உ.சிதம்பரம்பிள்ளை,
மஹாகவி சுப்பிரமணிய பாரதியார்.
டெல்லியில் 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அய்யனார் சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தி கம்பீரமாக வலம் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லியில் குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்திலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பிரதமர் இதில் உடனே தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள்