முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீரமங்கை இராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவரைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்

வீரமங்கை


இராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில்



அவரைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்  இராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.  டுவிட்டரில் பிரதமர் தமிழ்மொழியில் பதிவிட்டிருப்பதாவது;  “வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும்.


அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்.”வீரபாண்டிய கட்டபொம்மன், ராணி வேலு நாச்சியார், ஓ வி அழகேசன் மற்றும் சாவித்ரிபாய் பூலே-யின் பிறந்த நாள், நினைவு நாளையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா மற்றும் ஜவுளிகள் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி டாக்டர் எல் முருகன் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.


  சுதந்திரப் போரின் நாயக்கர் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு, சிவகங்கைச் சமஸ்தானத்தின் அரசியான இராணி வேலு நாச்சியார், முன்னாள் மத்திய அமைச்சரான  ஓ வி அழகேசன் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளையொட்டி மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் அவர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார். 



    டாக்டர் எல் முருகன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில்;  நம் தேசத்தின் விடுதலைப் போருக்கு வித்திட்டு! தமிழ் மண்ணில் வீரம் விதைத்த வீரர்!  தமிழ் மண்ணின் பெருமையை தரணியெங்கும் உயர்த்திய





வீரபாண்டியகட்டபொம்மனின்   வீரத்தையும்,தியாகத்தையும் போற்றி வீர வணக்கம் செலுத்துவோம்  வீரமும்! விவேகமும் நிறைந்த வீரமங்கை! தாய் மண்ணுகாக வாள் ஏந்தி போரிட்டு ஆங்கிலேய படையை சிதறடித்து... வெற்றி கண்டு சரித்திரம் படைத்த பெண் போராளி! வேலுநாச்சியார் அவர்களின் வீர, தீர தியாகங்களை நினைவுகூர்ந்து வணங்குவோம் சுதந்திர போராட்ட தியாகி! தன்னலமற்ற மனிதராக வாழ்ந்து தேச முன்னேற்றத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த ஓ.வி.அழகேசன் அவர்களை நினைவுகொள்வோம். சாவித்ரிபாய் பூலே சமூக சீர்திருத்தவாதி, பெண்களுக்கு அதிகாரமளித்தலின் முன்னோடி மற்றும் இந்தியாவின் முதல் ஆசிரியையை அவரது பிறந்த நாளன்று நினைவு கூர்கிறேன்  என்று தெரிவித்துள்ளார். வீரமங்கை இராணி வேலுநாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு இன்று   இரத்ததான முகாம் நடைபெற்றது.  முகாமில் இரத்த தான ஆர்வலர்கள், பொதுமக்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள், ஜாதி பேதமின்றி கலந்துகொண்ட அனைவருக்கும் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானம் சார்பாக இராணி.  சாஹிபா D.S.K ‌மதுராந்தகி நாச்சியார் நன்றி கூறினார் .வீரமங்கை இராணி வேலுநாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு இன்று  சிவகங்கை_சமஸ்தானம் மேதகு #ராணி சாஹிபா DSK மதுராந்தகி நாச்சியார் அவர்களை சிவகங்கை_திமுக நகர் செயலாளர்  C.M.துரை ஆனந்த்  மற்றும் திமுகவின் கட்சி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். இராணி வேலுநாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு இன்று  இரத்த தான முகாம் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை  பிஜேபி முன்னால் தேசிய செயலாளர் எச். ராஜா அவர்களும் சட்டமன்ற கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன்  கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் அகில இந்திய மகளிர் தலைவருமான வானதி சீனிவாசன்  மற்றும் கட்சி நிர்வாகிகளும் சிவகங்கை சமஸ்தானத்தின்  இராணியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். மேலும் இராணி வேலு நாச்சியார் சிலைக்கு ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சர் கரு.பெரியகருப்பன்  மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி காரைக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாங்குடி உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...