முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீரமங்கை இராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவரைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்

வீரமங்கை


இராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில்



அவரைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்  இராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.  டுவிட்டரில் பிரதமர் தமிழ்மொழியில் பதிவிட்டிருப்பதாவது;  “வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும்.


அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்.”வீரபாண்டிய கட்டபொம்மன், ராணி வேலு நாச்சியார், ஓ வி அழகேசன் மற்றும் சாவித்ரிபாய் பூலே-யின் பிறந்த நாள், நினைவு நாளையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா மற்றும் ஜவுளிகள் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி டாக்டர் எல் முருகன் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.


  சுதந்திரப் போரின் நாயக்கர் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு, சிவகங்கைச் சமஸ்தானத்தின் அரசியான இராணி வேலு நாச்சியார், முன்னாள் மத்திய அமைச்சரான  ஓ வி அழகேசன் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளையொட்டி மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் அவர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார். 



    டாக்டர் எல் முருகன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில்;  நம் தேசத்தின் விடுதலைப் போருக்கு வித்திட்டு! தமிழ் மண்ணில் வீரம் விதைத்த வீரர்!  தமிழ் மண்ணின் பெருமையை தரணியெங்கும் உயர்த்திய





வீரபாண்டியகட்டபொம்மனின்   வீரத்தையும்,தியாகத்தையும் போற்றி வீர வணக்கம் செலுத்துவோம்  வீரமும்! விவேகமும் நிறைந்த வீரமங்கை! தாய் மண்ணுகாக வாள் ஏந்தி போரிட்டு ஆங்கிலேய படையை சிதறடித்து... வெற்றி கண்டு சரித்திரம் படைத்த பெண் போராளி! வேலுநாச்சியார் அவர்களின் வீர, தீர தியாகங்களை நினைவுகூர்ந்து வணங்குவோம் சுதந்திர போராட்ட தியாகி! தன்னலமற்ற மனிதராக வாழ்ந்து தேச முன்னேற்றத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த ஓ.வி.அழகேசன் அவர்களை நினைவுகொள்வோம். சாவித்ரிபாய் பூலே சமூக சீர்திருத்தவாதி, பெண்களுக்கு அதிகாரமளித்தலின் முன்னோடி மற்றும் இந்தியாவின் முதல் ஆசிரியையை அவரது பிறந்த நாளன்று நினைவு கூர்கிறேன்  என்று தெரிவித்துள்ளார். வீரமங்கை இராணி வேலுநாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு இன்று   இரத்ததான முகாம் நடைபெற்றது.  முகாமில் இரத்த தான ஆர்வலர்கள், பொதுமக்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள், ஜாதி பேதமின்றி கலந்துகொண்ட அனைவருக்கும் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானம் சார்பாக இராணி.  சாஹிபா D.S.K ‌மதுராந்தகி நாச்சியார் நன்றி கூறினார் .வீரமங்கை இராணி வேலுநாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு இன்று  சிவகங்கை_சமஸ்தானம் மேதகு #ராணி சாஹிபா DSK மதுராந்தகி நாச்சியார் அவர்களை சிவகங்கை_திமுக நகர் செயலாளர்  C.M.துரை ஆனந்த்  மற்றும் திமுகவின் கட்சி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். இராணி வேலுநாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு இன்று  இரத்த தான முகாம் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை  பிஜேபி முன்னால் தேசிய செயலாளர் எச். ராஜா அவர்களும் சட்டமன்ற கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன்  கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் அகில இந்திய மகளிர் தலைவருமான வானதி சீனிவாசன்  மற்றும் கட்சி நிர்வாகிகளும் சிவகங்கை சமஸ்தானத்தின்  இராணியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். மேலும் இராணி வேலு நாச்சியார் சிலைக்கு ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சர் கரு.பெரியகருப்பன்  மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி காரைக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாங்குடி உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த