முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

1,700 கோடி ரூபாய் செலவில் இந்திய காலணி மற்றும் தோல் மேம்பாட்டு திட்டத்தை தொடர்வதற்கு ஒப்புதல்

1,700 கோடி ரூபாய் செலவில் இந்திய காலணி மற்றும் தோல் மேம்பாட்டு திட்டத்தை தொடர்வதற்கு ஒப்புதல்


இந்திய காலணி மற்றும் தோல் மேம்பாட்டு திட்டத்தை (IFLDP)  2021-22ம் ஆண்டிலிருந்து 1,700  கோடி ரூபாய் செலவில் தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஐஎஃப்எல்டிபி திட்டம் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அல்லது மேலும் மறுஆய்வு செய்யும் வரை, இதில் எது முன்போ அதுவரை இந்திய காலணி மற்றும் தோல் மேம்பாட்டு திட்டத்தை தொடர மத்திய அமைச்சரவை கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.


தோல் துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, தோல் துறையில் நிலவும் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, கூடுதல் முதலீடுகளுக்கு வழி ஏற்படுத்துவது, வேலைவாய்ப்பை உருவாக்குவது மற்றும் உற்பத்தியை  அதிகரிப்பது போன்றவற்றை இந்திய காலணி மற்றும் தோல் மேம்பாட்டு திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.


1. 2021-26ம் ஆண்டில் ஐஎஃப்எல்டிபி திட்டத்தின் கீழ் கீழ்கண்ட துணை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது :

(i) நிலையான தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் வளர்ச்சி( ரூ.500 கோடி மதிப்பீட்டில்): - வடகிழக்கு பகுதிகளில் ஒவ்வொரு பொது சுத்திகரிப்பு ஆலையும் அமைக்கும் துணை நிறுவனத்துக்கும் மொத்த திட்ட செலவில் 80 சதவீதம் அளிக்கப்படும். 20 சதவீதத்தை தொழில் நிறுவனங்கள் ஏற்க வேண்டும். மற்ற பகுதிகளில் 70 சதவீத நிதியுதவி அளிக்கப்படும். 30 சதவீதத்தை தொழில் நிறுவனங்கள் ஏற்க வேண்டும். இதற்கான திட்ட செலவின் வரம்பு ரூ.200 கோடியாக இருக்க வேண்டும்.

(ii) ஒருங்கிணைந்த தோல்துறை மேம்பாடு துணை திட்டம் ( திட்ட செலவு ரூ.500 கோடி): தொழில் நிறுவனங்களின் நவீனமயமாக்கம், விரிவாக்கம் மற்றும்  மேம்பாட்டுக்கு குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 30 சதவீத உதவித் தொகையும், இதர நிறுவனங்களுக்கு 20 சதவீத உதவித் தொகையும் வழங்கப்படும். அதிகபட்ச உதவியாக ரூ.15 கோடி வரை வழங்கப்படும்.

(iii) நிறுவன வசதிகள் அமைத்தல் ( திட்ட செலவு ரூ.200 கோடி): சர்வதேச பரிசோதனை மையம், விளையாட்டு வளாகம், எல்இடி விளக்குகள் பொருத்துதல், காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையத்தில் பெண்கள் விடுதிகள் கட்டுதல் போன்றவற்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

(iv) மெகா தோல் காலணி மற்றும் துணைப்பொருட்கள் தொகுப்பு மேம்பாடு (MLFACD) துணைதிட்டம் ( திட்ட செலவு ரூ.300  கோடி): தோல் மற்றும் காலணி தொழில் தேவைகளுக்கு சர்வதேச தரத்தில் உள்கட்டமைப்பு அமைப்பதை துணை திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

(v) தோல் மற்றும் காலணி துறையில் இந்திய பிராண்டுகளை ஊக்குவித்தல் ( திட்ட செலவு ரூ.100 கோடி): - திட்ட மொத்த செலவில் மத்திய அரசு 50 சதவீதம் அளிக்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கான வரம்பு ஒவ்வொரு பிராண்டுக்கும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.10 கோடி. இதன் மூலம் 3 ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் 10 இந்திய பிராண்டுகள் ஊக்குவிக்கப்படும்.

(vi) டிசைன் ஸ்டுடியோக்கள் மேம்பாடு ( திட்ட செலவு ரூ.100 கோடி):- இது புதிய துணை திட்டம். 10 இந்திய ஸ்டுடியோக்களை மேம்படுத்த உதவித் தொகை வழங்கப்படும். இந்த ஸ்டுடியோக்கள் மார்க்கெட்டிங் / ஏற்றுமதி தொடர்புகளை ஊக்குவிக்கும்.

2017-18ம் ஆண்டு முதல் 2019-20ம் ஆண்டு வரை மனிதவள மேம்பாட்டு துணை திட்டம்,  திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 3.24,722 பேருக்கு வழங்கப்பட்டன. இதில் 2,60,880 பயிற்சியாளர்களுக்கு தோல் மற்றும் காலணி துறையில் வேலைகள் வழங்கப்பட்டன.   கடந்த 2019-20ம்ஆண்டில், 12,947 தொழிலாளர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 2020-21ம் ஆண்டில் கோவிட்-19 தொற்று காரணமாக எந்த பயிற்சியும் அளிக்க இயலவில்லை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...